தகுதிக் குறிப்பு.
புலவர் ச.ந.இளங்குமரன்
1) நிறுவனர் - செயலர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி,
செயலர் திருவள்ளுவர் மன்றம், நாகலாபுரம்,
ஒருங்கிணைப்பாளர், செயலர் வாசிக்கலாம் வாங்க...தேனி
தலைவர், சங்கத்தமிழ் அறக்கட்டளை, தேனி,
தலைவர், தமிழர் உரிமை மீட்புக் குழு, தேனி மாவட்டம், தமிழ்நாடு.
உரிமையாளர், வையைப் பதிப்பகம்.
இயக்குநர் வையைத் தமிழ்ச்சங்கம், வலைக்காட்சி
அமைப்பாளர் : உலகத் தமிழ்க்கூடல்
2) எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர், இலக்கிய ஆய்வாளர், பட்டிமன்ற நடுவர், கவியரங்கத் தலைவர்.
3) எழுதிய நூல்கள்:-
1) தமிழ் என் போர்வாள்,
2) கொலைவாளினை எடடா...!
3) திருக்குறள் ஒரு மருந்தகம்
4) இன்பத்துள் இன்பம் காமம் (உளவியல் ஆய்வு)
5) திருக்குறள்
உலகப்பொதுவுரை (திருக்குறளுக்கு நான் எழுதியுள்ள உரை)
6) "வேட்டை" புதுக்கவிதை
7) தமிழ் - செம்மொழித் தகுதி வரலாறு
தொகுத்த நூல்கள்:-
8) வையை மலர்கள்
9) விடியலின் விதைகள்
10) நெஞ்சின் அலைகள்
11) தமிழ்நாடு பொன்விழா கவிதைகள்.
அச்சில் உள்ள நூல்கள்
12) வாழ்விக்க வந்த வள்ளலார்
13) காதலாகி.... (கவிதைகள்)
14) சொல்லும் பொருளும்
15) தொல்லியல் நோக்கில் தமிழர் தடம்.
4) * தமிழ் மொழிச் சேவைக்காக பல்வேறு தமிழ் அமப்புகள் தமிழ்மாமணி, தமிழ்ச்செம்மல், குறளாய்வுச் செம்மல், புரட்சிப் பாவலர், கவிமுரசு, குறளரசு, குறள்நெறிக்காவலர், மொழிக்காவலர், செம்மொழித் தென்றல், செம்மொழிச் செம்மல், நடமாடும் திருக்குறள் என 80 க்கும் மேற்பட்ட விருதுகள்' பரிசுகள், பட்டங்கள் என வழங்கிச் சிறப்பித்திருக்கின்றன்.
4) * பள்ளி, கல்லூரி மற்றும் இலக்கிய அமைப்புகள் நடத்தும் விழாக்களில் சுமார் 800 க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளேன்.
5) * 20 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி மாணவ மாணவியர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்திவருதல். இதுவரை 3000 பேருக்கு மேற்பட்ட மாணவ மாணவியர் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றுள்ளனர்.
6) * தமிழ்மொழி, இன மேம்பாட்டுக்கான இலக்கியக் கூட்டங்கள் நடத்திவருதல். கவியரங்கம், கருத்தரங்கம் என சுமார் 500 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தியுள்ளேன்
7) * மரபுப் பா பயிலரங்கு நடத்தி இதுவரை 80 க்கும் மேற்பட்டோருக்கு பயிற்சி வழங்கியுள்ளேன்.
8) * திருக்குறளை முதன்மைப்படுத்தி இதுவரை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 230 திருக்குறள் நெறித் திருமணங்களை நடத்தியுள்ளேன்.
9) *குழந்தைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர்வைக்க வலியுறுத்தி பல்வேறு கூட்டங்களை நடத்தி வருதல்,
10) * பள்ளி, கல்லூரிகளில் தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித் துறை சார்பிலும், தனித்தும் நடைபெற்ற 100 க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளுக்கு நடுவராகப் பணிசெய்துள்ளமை.
11) பள்ளி கல்லூரி விழாக்களில் மாணவர்கள் பயனுறும் வகையில் இலக்கிய உரைகள் நிகழ்த்தி வருதல்,
10 சிறுகதைகள்.
16 நாடகங்கள்,
100 க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள்
12) *திருவள்ளுவருக்கு சிலைவைப்பது தொடர்பான பணிகளை முன்னெடுத்தமை. எமது சொந்த ஊரில் திருவள்ளுவர் சிலை நிறுவியுள்ளோம். கடமலைக்குண்டு சிதம்பரம் விலக்கு, வைகை அணைப் பகுதியில் முதலக்கம்பட்டி, தேனி அரசினர் தொழிற்பயிற்சிக் கல்லூரி என நான்கு இடங்களில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுள்ளது.
13) 1994 ஆம் ஆண்டு முதல் திருவள்ளுவர் மன்றத்தின் வழியாக 29 ஆண்டுகள்,
14) வையைத் தமிழ்ச் சங்கத்தின் வழியாக 18 ஆண்டுகள்...
இலக்கியப் பணி...
15) வாசிக்கலாம் வாங்க குழுவின் மூலம் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்து வருவதோடு கடந்த மூன்று ஆண்டுகளில் 850 க்கும் மேற்பட்ட நூல்கள் குழுவில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
16) தற்போது தொல்காப்பியத்தில் உலகச்சாதனை நிகழ்த்திய அரசுப்பள்ளி மாணவிகள் அ.முத்தமிழ் சாமினி, செந்தமிழ் சாலினி ஆகிய இரட்டையர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக இருந்துள்ளேன்
17) பன்னாட்டுத் தமிழ் ஆளுமையர் கூட்டமைப்பு நடத்திய உலகத் தமிழர்நாள் பன்னாட்டு ஆய்வரங்கின் தலைமை ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவராகவும், பதிப்பாசிரியர் குழுவில் ஒருவராகவும் இருந்துள்ளேன்.
18) தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சித்துறை நடத்திவரும் தமிழ் ஆட்சி மொழிப்பயிலரங்கில் மொழிப் பயிற்றுநராகப் பணிசெய்துள்ளேன்.
19) உலகத் தமிழ்க்கூடல் இயங்கலை அமைப்பின் அமைப்பாளராக இதுவரை 433 நாட்களில் 433 நிகழ்சிகள் நடத்தியுள்ளோம்.
20) பன்னாட்டுத் திருக்குறள் திறன்போட்டி மூன்று போட்டிகளை நடத்தியுள்ளோம், நடத்தியும் வருகிறோம்
21) அக்கினிக்குஞ்சு,
ஏழாம் அறிவு,
நல்வழி இலக்கிய இதழ்களின் பொறுப்பாசிரியர்.... என விரிக்கின் விரியும் ஐயா.
22) நடித்த குறும்படங்கள் 2
23) பின்னனிக் குரல்கொடுத்த குறும்படம் 1
24) குறுப்படத் தயாரிப்பில் துணைநின்ற குறும்படம் 1
25) நடித்த திரைப்படம் 1
நன்றி ஐயா
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்