இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 22 March 2022

மேடைப் பூக்கள் நூல் விமர்சனம் - கவிஞர் ம.கவிக்கருப்பையா

அண்மையில் எமது வையைப் பதிப்பகம் வெளியிட்ட கவிஞர் பத்மினிபாலா அவர்களது மேடைப்பூக்கள் நூல்குறித்து திரைப்படப் பாடலாசிரியர், பட்டிமன்ற நடுவர், கவிஞர் நூல் விமர்சகர் என பல்துறை வித்தகரான எமதினிய அண்ணன் ம.கவிக்கருப்பையா அவர்களது விமர்சனத்துக்கு நன்றி.

மேடை நாடுகளில் பெண் எழுத்தாளர்கள் அதிகம், நம் நாட்டில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பெண் எழுத்தாளர்கள் மிகக் குறைந்தளவே உள்ளனர். அதிலும், தேனி மாவட்டத்தில் மிகமிகக் குறைவு.

இந்தச் சூழலில்,பெண் எழுத்தாளராக, கவிஞராக உரு வெடுத்திருக்கும் முனைவர் பத்மினிபாலா வரவேற்புக்கும், பாராட்டுக்கும் உரியவர்.

எத்தனையோ! கவிஞர்கள் தாங்கள் எழுதிய கவிதைகளை நூலாக்கிப் பார்க்க பலபல வருடங்கள் காத்திருந்திருக்கிறார்கள். பற்பலருக்கு, தன் வாழ்நாளில், அது சாத்தியமில்லாமலும் போயிருக்கிறது. ஆனாம் 2019-இல் தான், தன் முதல் கவிதையையே எழுத ஆரம்பித்த இவருக்கு, 2022 - லேயே கவிதை நூல் போட்டு, வெளியிடும் வாய்ப்பமைந்திருப்பது, இறைவனின் ஆசியென்றே கூறலாம்.

தன் உள்ளக் கிடக்கையை சொற்களில் வடித்து அருமையாக கவிதைகளாக் கியிருக்கிறார் கவிஞர்.

தன் பெற்றோர், கணவர், குழந்தைகள் குறித்த கவிதைகள் உணர்வுப் பூர்வமானவை, அவைகள் மூலம் அவர் கொடுத்து வைத்தவர் என்பதை அறியமுடிகிறது.

காதல் கவிதைகள், மற்றும் சமூகம் பற்றிய கவிதைகள் என்று, இந்நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும் சிந்தனையைக் கிளருவதாக அமைந்திருகிறது. இந்நூலின்

அட்டைப்படம், அச்சாக்கம் ஆகியவற்றின் நேர்த்தி, வையைப் பதிப்பகம் ஒரு கைதேர்ந்த பதிப்பகம் என்பதைக் காட்டுகிறது.

இது, அனைவரும் படிக்க வேண்டிய கவிதை நூல்.

கவிஞருக்குப் பாராட்டுகள்!

தொடர்ந்து நூல்கள் எழுதி தமிழ்த் தொண்டு புரிய வாழ்த்துகள்!

ம.கவிக்கருப்பையா

No comments:

Post a Comment