இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 4 March 2022

தமிழ் ஆட்சிமொழிக் கருத்தரங்கம் - திண்டுக்கல்

தமிழ் ஆட்சிமொழிப் பயிலரங்கம் - கருத்தரங்கம் 03,04-03-2022 ஆகிய இரண்டு நாட்களாக தின்ண்டுக்கல் ஆட்சியர் வளாக அரங்கில நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 04-03-2021 ஆம் நாள் ஆட்சி மொழி பயிலரங்கில் ஓய்வு பெற்ற துணை கலெக்டர் வரதராசன், 'அலுவலக குறிப்புகள் வரைவுகள், செய்முறை ஆணைகள் தயாரித்தல்' எனும் தலைப்பில் பேசினார்.

உலகத் தமிழ்ச்சங்க மேனாள் இயக்குனர் சந்திரா, 'ஆட்சி மொழி ஆய்வும் குறைகளைவு, நடவடிக்கைகளும்'எனும் தலைப்பிலும், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் இளங்கோ, ‘ஆட்சிமொழி செயலாக்கம், அரசாணைகள்' எனும் தலைப்பிலும் பேசினர்.

இதில் தமிழில் சிறந்த குறிப்புகள், வரைவுகள் எழுதிய பழநி மாவட்ட பதிவாளர் அலுவலக உதவியாளர் திவ்யா, திண்டுக்கல் தணிக்கை உதவி இயக்குனர் அலுவலக உதவியாளர் பாபுவுக்கு, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் தலா ரூ.3 ஆயிரம் பரிசு வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இலதா, நேர்முக உதவியாளர் இராணி, ஓய்வு பெற்ற தமிழாசிரியர் குயிலன், எழுத்தாளர் இளங்கோவன், தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவனர் இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றினர்.

No comments:

Post a Comment