இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 16 February 2022

திருக்குறள் முற்றோதல் - தமிழ் வளர்ச்சித்துறை.

திருக்குறள் முற்றோதல்!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
16.02.2022. இன்று, தேனி மாவட்ட 
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 
மாவட்ட ஆட்சியரகத்தில், 
"திருக்குறள் முற்றோதல் போட்டி" நடைபெற்றது.  நிகழ்வினுக்கு தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் திரு பெ. இளங்கோ ஐயா அவர்கள் தலைமை தாங்கினார்.
திரு மூ.செல்வம் திரு ஆ.முத்துக்குமார் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள் நடுவராக பணியாற்றினர்.

திருக்குறள் 1330 குறட்பாக்களையும் ஒப்புவித்த மாணவ-மாணவியர்களுக்கு ரூபாய்.10 ஆயிரம் பரிசுத் தொகை ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது.

போட்டியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு வாழ்த்துகள்.

இந்நிகழ்வில் சிறப்பு 
அழைப்பாளராக, தேனி வையைத் தமிழ்ச் சங்கம் சார்பில் நானும் கலந்துகொண்டு நான் எழுதிய திருக்குறள் உலகப் பொதுவுர நூலைப் பரிசாக வழங்கிய இனியபொழுது...  சிறப்பாக ஒத்துழைப்பு வழங்கிய தமிழ்வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கும், போட்டியில் பங்கேற்ற மாணவியருக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் வாழ்த்தும் பேரன்பும்.

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம் தேனி.

No comments:

Post a Comment