காதலோடு வாழ்...
பெருந்தெய்வப் பெண்ணின் கண்ணை
கருங்குவளை மலரென் றெண்ணி
கள்ளுண்ணும் நோக்கத் தோடு
பெருவிருப்பங் கொண்டு தன்னின்
பெருங்கூட்டத் தோடு மோத
வருங்கூட்டம் தன்னைக் கண்டு
வளைக்கையால் மங்கை நல்லாள்
வாகாக விரட்டக் கண்டு
தாமரையின் மேலே மீன்கள்
தக்கபடி புரளக் கண்டும்
தன்னிரையைக் கொத்தித் தூக்க
தகுவாய்ப்பு இன்றி வீணே
விக்கித்துத் திரும்பும் புள்ளாய்
விரைவாகத் திரும்பும் வண்டே
தாமரையாள் கண்கள் சிந்தும்
தாதெனக்கே சொந்தம் அன்றோ!
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment