கம்பனில் வள்ளுவன்...
ச.இளங்குமரன்
போர் என்ன வீங்கும் பொருப்புஅன்ன பொலங்கொள் திண்தோள்
மாரன் அனையான் மலர்கொய்து இருந்தானை வந்த ஓர் கார் அன்ன கூந்தல் குயில் அன்னவள் கண்புதைப்ப ஆர் என்னலோடும் அனல்என்ன அயிர்த்து உயிர்த்தாள்
இது கம்பனது அகலிகைப் படலத்தில் ஒரு பாடல்.
மலை போன்ற தோள்களையுடையவன். மாறன் போன்ற அழகுடையவன். அவன் ஏறு நடை போட்டு வருகிறான். அவளோ பூக்கொய்து கொண்டிருக்கிறாள்.
வந்த அழகன் தன்னுடைய நடையை மெதுவாக்கிக் கொள்கிறான்.
பின் புறமாகத் திரும்பி நின்று கொஞ்சம் இருமிக் கனைக்கிறான். அந்த அழகி திரும்பிப் பார்க்கிறாள்.
தன் காதலன் தன்னை பார்க்கவில்லை என்று கருதிக் கொண்டு, மெதுவாக அவன் பின்னால் வந்து நின்று அவனது கண்களைப் பொத்துகிறாள்.
அந்த அழகன் ஒன்றும் தெரியாதவன் போல் "யார்?" என்று கேட்கிறான்.
உடனே அந்த அழகிக்கு சினம் வந்துவிடுகிறது.
"யாரா... அப்படி என்றால் வேறு சில பெண்களும் உன் கண்ணைப் பொத்தி இருக்கிறார்களா? நீ என் காதலன் அல்லன். கள்வன், காமுகன், பல பெண்களின் இச்சை என்னும் காமத்தில் விழுந்து கிடப்பவன். நான் கண்களை பொத்தியதும் கண்ணே!... என்றல்லவா என்னை அழைத்திருக்க வேண்டும். நான் மட்டுமே உன் காதலியாக இருந்தால் அது தானே நடந்திருக்கவேண்டும். அப்படி நடப்பது தானே சரி? என்று துள்ளிக் குதிக்கிறாள். துடித்து விழுகிறாள்.
அந்த அழகி அந்த அழகனாகிய தன் காதலனிடம் கற்பை எதிர்பார்க்கிறாள் என்பதே இதற்குப் பொருள்.
இந்தப் பாடலை எழுத கம்பனுக்கு அடியெடுத்துக் கொடுத்தவர் வள்ளுவர். அதாவது...
" யாரினும் காதலம் என்றேமா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று "
காதல் என்பது உடல் தொடர்புடையது அல்ல. அது உள்ளம் தொடர்புடையது. உள்ளம் மட்டும் செம்மையாக இல்லையென்றால் தலைவனும் தலைவியும் நெருங்கவே முடியாது.
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்.
No comments:
Post a Comment