பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தில் வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மேடைப் பூக்கள் நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவுக்கு, வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் புலவா் ச.ந.இளங்குமரன் தலைமை வகித்தாா். பெரியகுளம் வழக்குரைஞர்கள் சங்கம் பொன் பாலமுருகன் அனைவரையும் வரவேற்றார். புலவர் இராசரத்தினம், வழக்குரைஞர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொற்கைபாண்டியன், தங்கப்பாண்டியன் , அர்ச்சுனன் ஆகியோர் மதிப்புரை வழங்கினா். தொழிலதிபா் வி.எஸ்.பி. கண்ணகி சேகா் மேடைப் பூக்கள் நூலை வெளியிட்டாா். வியாபாரிகள் சங்கத் தலைவா் பி.டி. சிதம்பசூரியவேலு நூலை பெற்றுக்கொண்டாா். நூலாசிரியா் பேராசிரியா் சே. பத்மினி பாலா ஏற்புரையாற்றினாா்.
இவ்விழாவில் பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தவர்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் என ஏராளமானோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, வையைத் தமிழ்ச் சங்கத்தினா் செய்திருந்தனா்.
No comments:
Post a Comment