இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 24 December 2022

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

வையைத் தமிழ்ச் சங்கம் தேனி
                         நடத்தும்  
பன்னாட்டு திருக்குறள் திறன் போட்டி
           (இணையவழி நிகழ்வு)
                   பள்ளி மாணவ மாணவியர்களுக்கான போட்டி 

நாள் : 17-01-2023 
நேரம் காலை 10:30 மணி 

திருக்குறள் 39 ஆம் அதிகாரம் முதல் 48 ஆம் அதிகாரம் வரை. அதாவது பத்து அதிகாரங்கள் மட்டும்.

விதிகள்:
1- மேலே கொடுக்கப்பட்ட 10 அதிகாரத்தில் உள்ள குறள்கள் மட்டும் மனனம் செய்திருக்க வேண்டும்.

2- நடத்துபவர் திருக்குறளில் 10 அதிகாரங்களில் எந்த முறையில் கேள்விகள் கேட்டாலும் பதில் சரியாகச் சொல்ல வேண்டும்.

3- மூன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள வேண்டும்.

4- தமிழ்நாட்டைக் கடந்து திருக்குறளின்பால் ஈடுபாடு உள்ள மாணவ மாணவியர் எந்த நாட்டில் இருந்தும் கலந்து கொள்ளலாம்.

5- போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மூவருக்குப் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

6- போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

கலந்துகொள்ள விரும்பும் மாணவ மாணவியர் 9842370792 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ள வேண்டுகிறோம்.

இனிய அன்புடன்
புலவர் ச. ந.இளங்குமரன், நிறுவுநர் 
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நகலபுரம்.

No comments:

Post a Comment