இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 13 December 2022

பாரதியின் தொலைநோக்கு

"பாரதியின் தொலைநோக்கு"

11-12-2022 பாரதியார் பிறந்தநாள் விழா 2022 கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் பல்கலைக்கழகத்தின் மாண்பமை துணை வேந்தர் முனைவர் வைதேகி விஜயகுமார் அவர்கள் தலைமை உரை வழங்கினார். பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் சீலா அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  இவ்விழாவில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள் "பாரதியின் தொலைநோக்கு" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் சந்திரமணி ஜெபராணி அவர்கள் வரவேற்று நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.  நிகழ்வின் நிறைவாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் சிறப்பு நிலைப் பேராசிரியரும் வையைத் தமிழ்ச் சங்கத்தின் இணைச் செயலருமான முனைவர் சே.பத்மினி பாலா அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment