பெண்ணியம் பேணும் விலங்கு!
பூ விலங்கு தலையில்.
பொன் விலங்கு கையில்.
கல் விலங்கு மூக்கில்.
கால் விலங்கோ வெள்ளி.
தொங்கல் ஒட்டல் மாட்டல்
காதில் பூட்டிய விலங்குகள்.
எத்தனை எத்தனை விலங்குகள்.
பெண்ணின் உடையிலும் உடலிலும்.
அத்தனைக்கும் மேலாய் அவள்மேல்
சுமத்தப்படும் விலங்குகளாய்ச் சுமைகள்...
பூப்பெய்திய காலத்தில் பூரிப்பும்
கூட ஒருவகை விலங்கு.
திருமணக் காலத்தில் வரதட்சணை
விலங்குகளை மாட்ட மறுத்தால்
வசைபாடித் திரும்பும் வந்தவிலங்குகள்.
சமூக விலங்குகளின் பார்வையிலும்,
பாலியில் தொல்லையிலும் சிக்காமல்
தற்காத்துச் செல்லும் பெண்ளுக்கு
எப்போதும் பூட்டப் பட்டிருக்கிறது
அவரவர் இல்லத்தில் அடிமைவிலங்கு!
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment