அழகிலுண்டு...
அவ்வப் போது
முகம்காட்டி
அமுத மொழியில்
நஞ்சேற்றி
அகத்தில் குருதியில்
பாய்ச்சுகிறாய்
ஆசைத் தீயை
மூட்டுகிறாய்
மூட்டிய தீயின்
தாக்கத்தால்
முட்டும் மூச்சில்
தடுமாற
ஈட்டி விழியால்
தாக்குகிறாய்
எட்ட நின்று
சுவைக்கின்றாய்.
சுவையிற் சிறந்த
சுவையாவாய்
சோர்வு நீக்கும்
மருந்தாவாய்
அவையிற் சிறந்த
தமிழாவாய்
அனைத்துப் புகழும்
நீயாவாய்.
நீயே எல்லாம்
என்றவனின்
நிம்மதி தன்னைக்
குழைத்துவிட்டு
சாவை நோக்கித்
தள்ளுவது
பாவை உனக்கு
அழகாமோ....
அழகில் உண்டு
ஆபத்து
அழகே உன்னால்
அறிந்துகொண்டேன்.
அழகே உன்னை
நீங்குகிறேன்
ஆபத்தில் இருந்து
விலகுகிறேன்.
ச.ந.இளங்குமரன்
No comments:
Post a Comment