இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 25 November 2024

திருக்குறள் திறன்போட்டி

தேனி வையைத் தமிழ்ச் சங்கம் சார்பில் மாநில அளவில் பள்ளி மாணவ மாணவியருக்கான திருக்குறள் திறன் போட்டி நடைபெற்றது. போட்டியில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களிலிருந்து 88 மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்ற இப் போட்டியில் நற்றமிழ்ப் புலவர் இராசேந்திரனார் அவர்கள் வாழ்த்துரையோடு போட்டியினை மதிப்பீடு செய்தார்.  தமிழ்ச்செம்மல் ப.முத்துமணி அவர்கள் வாழ்த்துரை வழங்க, தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் பெ.இளங்கோ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கான ஊக்க உரை வழங்கினார்.

போட்டிக்களத்தை வையைத் தமிழ் சங்கத்தின் மாணவர் கள ஒருங்கிணைப்பாளர் இலட்சிய ஆசிரியர் அ.இலட்சுமி குமரேசன் அவர்களும், கவிஞர் க.இரா.திருவருள் செல்வி அவர்களும் நெறியாள்கை செயதனர். நான்கு சுற்றுகளாக நடைபெற்ற நிகழ்வின் நிறைவில் வையை பா.செல்வகுமாரன் நன்றியுரை வழங்கினார்.

முதல் இடம்

1- ரேஷ்மா
2- அர்சின் சனா
3- ஆதியவர்மன் 
4- ஜாஸ்லின் டாரத்தி
5- மஹாபரணி
6- பத்மஸ்ரீ
7- தரணி
8- பவிஷா
9- ரித்திஸ்ரீ

இரண்டாம் இடம்

1- ஜெ.ஜஸ்வந்த்குமார்
2- தரணிவேந்தன்
3- கவின்ராஜ்
4- நவ்யஸ்ரீ

மூன்றாம் இடம்

1- சாந்தினி
2- சுப்புலட்சுமி
3- ம.சனுஜாஸ்ரீ
4- ர.பிரதீபா

ஆகிய மாணவ மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

முதல் சுற்றில் கலந்துகொண்டு மதிப்பெண் பெற்றவர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். 

போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவ மாணவியர் ஆசிரியப் பெருமக்கள் பெற்றோர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியையும் வாழ்த்தினையும் உரித்தாக்குகின்றோம்.

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

Monday, 4 November 2024

தமிழின் தொன்மை பேரா.இராமதிவாணன்

தமிழின் தொன்மை பாரீர் தமிழர்களே!

தெலுங்கு என்னும் சொல் பத்தாம் நூற்றாண்டுக்கு முன்பு வழக்கில் இல்லை. The words Telugu or Tenugu were never used before 10th century to denote either the language or the people or the country. The word 'Andhra' was used in its place. S. Ramakrishna Sastry-'Annals of Oriental Research'. Madras University, 1952 (p.152) ஆந்திரர் என்னும் சொல்லே அம் மக்களைக் குறித்தது. ஆந்திரர்க்குப் பிராகிருதமே ஆட்சிமொழியாக இருந்தது. வட புலத்துப் பிராகிருதம் பேசிய ஆந்திரர்க்குத் தென்புலத்தார் பேசிய தமிழ் நடுவணிந்தியாவில் திரிபுற்றதால், 'தென்குலு'-தென்மொழியினர் என்னும் பொருளில் தெலுங்கர் புதுப் பெயரிடப்பட்டனர்.

கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை புகழ் பெற்று விளங்கிய ஆந்திர சாதவாகனர் காலத்தில் பிராகிருத இலக்கியங்களே புகழ்பெற்றிருந்தது. தெலுங்கு மொழியின் சுவடே சிறிதும் அறிப்படவில்லை. பிராகிருத இலக்கியங்களில் தெலுங்குச் சொற்களாகச் சுட்டப்படுபவை தமிழ்ச் சொற்களாகவே உள்ளன.

பிராகிருத இலக்கண இலக்கியக் கட்டுக்கோப்பில் தமிழின் தாக்கமே வடமொழித் தாக்கத்தினும் விஞ்சி நின்றது. பிராகிருதப் புலவர்கள் வடமொழியை வல்லொலிமொழி என இகழ்ந்தனர். பிராகிருதம் தமிழைப் போன்றே சமற்கிருதச் சொற்களை மெல்லொலிச் சொற்களாக மாற்றிக்கொள்வதால் பிராகிருதம் பாட்டுமொழி, இன்மொழி எனப்பாராட்டப்பட்டது. கி.பி. முதல் நூற்றாண்டில் ஆளன் என்னும் சாதவாகன மன்னன் எழுநூறு அகப்பாடல்களை 'காதா சப்தசதி' என்னும் பெயரில் நூலாகத் தொகுத்தான். இதிலுள்ள பல பாடல்கள் கடைக்கழகத் தமிழ்ப் பாடல்களின் மொழிபெயர்ப்புகள் போலவே காணப்படுகின்றன. திணை துறை வகுக்கப்படாமல் வெறும் பாடல்களாக உள்ளன. ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையானர் பாடிய புறநானூற்று 175ஆம் பாடலில் வரும் "என் நெஞ்சம் திறப்போர் நிற்காண்குவரே" என்னும் வரி ஆந்திர நாட்டு அகநானூறு: 1978 பக் 55) சொற்பிறழாமல் அப்படியே பிராகிருதப் புலவர்களால் எடுத்தாளப்பட்டுள்ளது.

சமற்கிருதத்தில் இத்தகைய தனிநிலைப் பாடல்களான அகப்பாடல் வகை இன்மையால் இந்நூலை கோவர்தனாசாரியார் என்பவர் 'ஆரிய சப்தசதி' என்னும் பெயரில் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துள்ளார். இதிலிருந்து தமிழிலக்கண இலக்கியக் கூறுகள் எண்ணிறந்தன பிராகிருதத்திலும் சமற்கிருதத்திலும் கால வெள்ளத்திலும் ஊடுருவிச் சென்றுள்ளன என்பதும், பிராகிருத, சமற்கிருத வல்லுநர்கள் அவ்வுண்மையை மறைத்து வருகின்றனர் என்பதும் வெளிப்படுகிறது. வடபுலத்து ஆரிய அரசன் பிருகத்தனுக்குத் (அசோகனுக்குப் பின் மூன்றாவதாகப் பட்டம் பெற்றவன்) தமிழ் அறிவுறுத்தக் கபிலர் 'குறிஞ்சிப் பாட்டு' இயற்றியதும், வடபுலத்தார் அக்காலத்தில் தமிழை விரும்பிப் படித்ததை உறுதிப்படுத்தும்.

பழந்தமிழில் 'தொன்மை' என்றும். இந்திய மொழிகள் அனைத்திலும் 'சம்பு காவியம்' என்றும் அழைக்கப்படும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் அமைப்பு, தமிழிலிருந்து பிறமொழிகள் பெற்ற கொடை என்பதில் எட்டுணையும் ஐயமில்லை. இதனைச் சமற்கிருதத்துக்கோ பிராகிருதத்துக்கோ சொந்தமானதாகக் கூறுவது அறியாமை. ஆரிய மொழிகளும் பிராகிருதம் உருப்பெறாத அறப்பழங்காலத்திலேயே செய்யுளும் உரைநடையும் விரவிவரும் பாங்கு, தமிழ் மொழிக்கே தனியுடைமையாகக் குமரிநாட்டில் தோன்றி, தொல்காப்பியத்தில் எண்வகை வனப்பு (எட்டுக் காப்பிய வகை)களுள் ஒன்றாகத் 'தொன்மை' என்னும் பெயரில் நிலை பெற்றுள்ளது.

"தொன்மை தானே
உரையோடு புணர்ந்த பழமை மேற்றே"

என்று தொல்காப்பியர் கூறுகிறார். இத்தகைய வரலாற்றுப் பின்னணி சமற்கிருதம் உள்ளிட்ட இந்திய மொழிகள் எவற்றுக்கும் அறவே இல்லை.

தெலுங்கில் கி.பி. ஏழாம் நூற்றாண்டுவரை தமிழுக்கே உரிய சிறப்பு ழகரம் இருந்தது என்பது ஆந்திரநாட்டுக் கல்வெட்டுகளால் புலனாகிறது. யுவான் சுவாங் கோதாவரி யாற்றைக் கடந்ததும் தமிழ் நாட்டைக் கண்டதாகக் கூறுகிறான்; இன்றும் குச்சரம், மராத்தி, இந்தி மொழிகளைப் பேசும் மக்களின் பேச்சுமொழியில் ழகர ஒலிப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். தெலுங்கரில் முற்போக்கு எண்ணமுடைய சிலர் தெலுங்கு எழுத்துகளில் வலியப் புகுத்தப்பட்டிருக்கும் வேண்டாத வட எழுத்துகளில் சிலவற்றையேனும் நீக்கவேண்டும் என்கின்றனர். பங்காரு ஐயா என்னும் தனித்தெலுங்கு அறிஞர், ஆந்திர மண்ணில் தோன்றிய பெருமக்கள் மீது காப்பியம் பாடாமல், பாரத இராமாயண (வட நூற்) காப்பியங்களை என்று தெலுங்கர் பேரிலக்கியமாகக் கொண்டார்களோ அன்றே தெலுங்கின் மேன்மை அழிந்துவிட்டது என்றும், 'தல்லிநுடினி மறசினவாடு சச்சினவாடே' (தாய்மொழியை மறந்தவன் இறந்தவனே) என்றும் தந்நூலில் அவருடைய உள்ளக் கொதிப்பை உருக்கமாக எடுத்துரைக்கிறார்.

தெலுங்குப் புலவர் ஒருவர், தெலுங்கு தனிமொழியென்று நிலைநாட்டத் தமிழினின்றும் வேறான தெலுங்குச் சொற்கள் பலவுள்ளன என்றார். அவ்வாறாயின் அவற்றின் வேர்ப்பொருளை விளக்கி நிறுவுக என்றேன். கோடாலு (மருமகள்), வல்லகாடு (சுடுகாடு), நூன (எண்ணெய்) என்னும் முச்சொற்களைக் குறிப்பிட்டு, கோடாலு என்பதை, கோட (மென்மை)+ஆலு (பெண்) எனப் பிரித்தார். ஏனையவை வேர்ப்பொருளறியாத் தொன்மையான என்றார். கோடாலு என்னும் சொல் விளக்கத்தின்படி, மருமகள் மட்டுந்தான் மென்மையான பெண்ணா? மற்றப் பெண்டிர் மென்மையற்றவரா? என வினவினேன்? அவர் மறுமொழியேதும் சொல்லவில்லை.

அவர் தனித்தெலுங்குச் சொற்களாகக் காட்டும் அனைத்தும் தனித்தமிழ்ச் சொற்களே என்றும், அவற்றுக்குத் தமிழிலன்றித் தெலுங்கில் வேரும் பொருளும் காணமுடியாது என்பதையும் பின்வருமாறு விளக்கிக் காட்டினேன்.

தெலுங்கு தமிழ்

1. கோடாலு (மருமகள்) கோடல்-பிறர் வீட்டிலிருந்து கொண்ட பெண். கொளல்-கோடல். தமிழ்மக்கள் 'கொள்வினை' 'கொடுப்பினை' என்று பேசுவதைக் காணலாம்.

2. வள்ளகாடு (சுடுகாடு) வெள்காடு-ஆள் இயங்காக் காடு. வெண்களமர் (பிறரைக்கொண்டு வேளாண்மை செய்பவர்), கருங்களமர் (தாமே உழுது உழைப்பவர்) என்னும் சொல்லாட்சிகளில் வெள்- செயற்படாமையைக் குறித்தல் காண்க. இச்சொல் பழங்கன்னடத்திலும் பெள்காடு என வழங்குகிறது. (தமிழில் வெண்காடு / திருவெண்காடு)

3. நூன (எண்ணெய்) நூ+நெய்-நல்லெண்ணெய், நூ=எள். தெலுங்கிலும் எள் நூகுல் எனப்படுகிறது. நோலை-எள்ளுருண்டை.

இவ்விளக்கம் கேட்டு அவர் அகமகிழ்ந்தார். ஆரிய இலக்கண இலக்கியக் கூறுகள் தெலுங்கிலும் விரைந்து புகுத்தப்பட்ட அளவிற்குத் தமிழிலக்கண இலக்கியத் தாக்கம் தெலுங்கு கன்னட மலையாள மொழிகளில் ஏற்படாதது தவக்குறைவேயாகும். ஆண்டாள் வரலாறு ஒன்று மட்டும் கிருட்டிணதேவராயரால் தெலுங்கு இலக்கியமாயிற்று.

தெலுங்கு இலக்கண நூலாகிய பால வியாகரணத்தில் ராமுடு, தம்முடு (இராமன், தம்பி) என்னுஞ் சொற்களின் பயைழய வடிவத்திற்கு ராமுடு, தம்முடு என ஆண்பாலீற்று 'ன்' (னகர) மெய் கூறப்பட்டிருந்தும், ஆரியப் புலவர்களால் தெலுங்கில் பண்டேயிருந்த மெய்யெழுத்து வரிசையில் னகர மெய்களையப்பட்டு நகர மெய்யே எல்லா இடத்திலும் ஆளப்படுகிறது. னகர மெய்யீற்றுச் சொற்களுக்குத் தெலுங்கில் 'த்ருதப்ரக்ரதமு' என்று பெயர் உள்ளது. எழுவாய் (முதல் வேற்றுமை) பெயர் தோன்று நிலையாகவே நின்று வேற்றுமை உருபு எதனையும் கொள்ளாது என்பது தொல்காப்பிய நெறி. இதனையே அனைத்துத் திரவிட மொழிகளிலும் கொண்டிருக்க, தெலுங்கில் முதல் முதல் வேற்றுமைக்கு (சமற்கிருத இலக்கணத்தையொட்டி) உருபு கூறப்பட்டிருப்பது திரவிடமொழிக் குடும்பத்துக்கு வடமொழி வெறியர் இழைத்துவரும் கொடுமைகளில் மிகப் பெரிய கொடுமையாகும். ராமுடு, தேவுடு, (இராமன், தேவன்) என வரும் சொற்களில் 'டு' முதல் வேற்றுமை உருபாம். அல்லமு (இஞ்சி) என்பதில் 'மு' முதல் வேற்றுமை உருபாம். கோட (சுவர்) என்னும் சொல்லுக்கு கோடமு என ஏன் முதல் வேற்றுமை உருபு 'மு' வரவில்லை என்று கேட்டால் தக்க மறுமொழி சொல்வாரில்லை.
தெலுங்குச் சொற்களில் பத்து விழுக்காட்டுச் சொற்களுக்கு மட்டும் பெயரீற்றில் 'டு' ஈறும் ஐந்து விழுக்காட்டுச் சொற்களுக்கு மட்டும் 'மு' ஈறும் உள்ளன. எஞ்சிய 85% சொற்கள் எழுவாயாகும் நிலையில், ஈறு எதுவும் பெறாத நிலையில், தெலுங்கில் எழுவாய் பெற்றமைக்குச் சமற்கிருதம் போல் உருபு உண்டு என்பது மிகத் தவறான செய்தி என்பது அறிஞர்கள் ஆராய்ந்து கண்ட முடிவாகும்.

சமற்கிருதத்தில் மேலாண்மையை வலுப்படுத்தவும் மாநில மொழிகளின் தனித்தன்மையைச் சீரழிக்கவும் இலக்கணம் வகுக்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டால் அந்த இலக்கண முறையைத் தாய்மொழியினர் உண்மையுணர்ந்து உதறித்தள்ளிவிடுவர். ஏனைத் திரவிடமொழியினர் உணர்வும் தெளிவும் பெறும் காலம் தொலைவிலில்லை.

பேராசிரியர் இரா. மதிவாணன்

Monday, 21 October 2024

ஆங்கில மொழியின் மூலம் தமிழ்

உலகின் முதல் மொழி தமிழ்!ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!! ஆதாரம் இதோ!!!
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி எடுத்துகாட்டுகள் :

Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.

Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.

Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது

இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
,
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
========================
தமிழ் உலக மொழிக்கெல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் )
~~~
600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll

(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )
கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )

" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , நாடு; கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

2015 ஆய்வுகளின் படி :

( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றா
ர்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (ஐரோப்பிய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.

("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.

நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்

- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)

சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = மொழி

சீனர்களின் மண்டரின் மொழி மற்றும் யூதர்களின் ஹிபுரு'வின் தாய்மொழி அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் , மேலும்1000 Km க்கு தூரத்திற்கு ஒரே மொழி நிச்சயம் சற்று வேறுபடும்!
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
1500 வருடங்களுக்கு முன் தெலுங்கு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெலுங்கு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.

1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.

700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான்.
மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.மு 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.
,,,,
ஆனால் நம் தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.மு 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.மு 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. மு 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.மு 5000 பரிபாடல்;
கி.மு 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன. மேலும் பழமையான நூல்கள் கடல் கோளாலும், சூழ்ச்சிகளாலும் அழிந்து விட்டன...
...
இத்தகைய தமிழின் சிறப்புகளை
பகிருவதற்கு தயங்க வேண்டாம்,,, தமிழ் வாழ்க!!!.

Wednesday, 2 October 2024

மதிப்புறு முனைவர் புலவர் ச.ந.இளங்குமரன்

அகில இந்திய உலக சாதனைப் பதிவு இணையப் பல்கலைக்கழகம், மற்றும் செ.வெ. ரெக்கார்டு ஹோல்டர் போரம் இணைந்து தேனி வையைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் புலவர் இளங்குமரன் அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி சிறப்பிக்கிறது. இது குறித்து ஆல் இந்திய புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத் தலைவர்  செ.வெங்கடேசன் அவர்கள் கூறியதாவது.

புலவர் ச.ந. இளங்குமரன் அவர்கள் தேனியில் வையைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி உலகளாவிய நிலையில் திருக்குறளில் பணியையும், தொல்காப்பியம் பணியையும் சிறப்புறச் செய்து வருகிறார். 

உலகின் முதன் முதலாக நடைபெற்ற தொல்காப்பியம் முற்றோதல் உலக சாதனை நிகழ்வின் வழிகாட்டியாகவும், தொல்காப்பியம் பல் சுவை உலக சாதனை நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர்களுல் ஒருவராகவும் செயல்பட்டு உலகெங்கும் தொல்காப்பியத்தை இளைய தலைமுறையினருக்குச் சிறப்பாகக் கொண்டு சேர்த்து வருகிறார். மேலும் பன்னாட்டுத் திருக்குறள் திறன் போட்டிகளை நடத்தி பள்ளி மாணவ மாணவியரை ஊக்கப்படுத்தி வருவதோடு,  திருக்குறளை முதன்மைப்படுத்தி  250 க்கும் மேற்பட்ட திருக்குறள் வழியில் திருமணங்களைச் செய்து வைத்திருக்கிறார்.

இவர் தனக்கென ஒரு தனியான வழியை ஏற்படுத்திக்கிண்டு, தனித்தமிழ் அறிஞர்கள் வழியில் நின்று கல்விப் பணியும் சமூகப் பணியும் செய்து வருவதோடு, தமிழ் மொழி வளர்ச்சி, இலக்கிய வளர்ச்சி தொடர்பாக மக்களிடமும், மாணவ மாணவியரிடமும் விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறார். அன்னாரின் தன்னலமற்ற சேவையைக் கடந்த ஓராண்டு காலமாகக் கண்காணித்து ஆய்வு செய்து அவருக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

Friday, 23 August 2024

திருக்குறள் நெறியில் திருமணம் - ச.ந.இளங்குமரன்

மூன்று நாடுகளை இணைத்த 
#முப்பால்திருமணம்

மணமக்கள் 
#ஜெ.#சக்திவேல் (எ) அலெக்சு பாண்டியன் - போடி தேனி மாவட்டம்

#கோ.#சசிதா - சுகார்போரோ ஒன்றாரியோ, ரொறன்ரோ, கனடா.

காதலாகி கசிந்த இவர்களது திருமணம் பெற்றோர்கள் ஒப்புதலோடு, சான்றோர் முன் உறுதி ஏற்று, திருக்குறள் நெறியில் தேனி வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் ச.ந. இளங்குமரன் அவர்களால்  நிகழ்த்தப்பட்டது. 

தேனி மாவட்டம் போடியில் நடைபெற்ற இத்திருமணம், மனம் நிறை மகிழ்வோடும், நெகிழ்வோடும் நெஞ்சில் நிற்கக் கூடியதாக இருந்தது. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கனடா நாட்டின் தமிழுறவுகள் குடும்பம் குடும்பமாக வந்து குழுமி இருந்த நிகழ்வு. உள்ளூரிலிருந்து மாப்பிள்ளையின் நண்பர்கள் மற்றும் உறவு முறையினர் மிகச் சிறக்கப் பங்கேற்ற நிகழ்வு. 

சுமார் ஒரு மணி நேரம் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும், நிகழ்வுக்கு வந்திருந்த சான்றோர் பெருமக்களும், அமைதி காத்து முழு ஒத்துழைப்பு வழங்கிய நிகழ்வு இது. மணமக்களின் முழுமையான தமிழ்ப்பற்றும் மக்களின் வாழ்வு நலன் கருதி பெற்றோர்கள் அளித்த முழுமையான ஒத்துழைப்பும் மறக்கவியலாது. 

திருமண வழிபாட்டு முறை குறித்து நான் ஒவ்வொரு முறையும் பேசும்போது குழுமியிருந்தோர் மிகு உற்சாகத்தோடு கைதட்டியும், ஆர்ப்பரித்தும் வியந்ததுமான நிகழ்வு. 

திருமண விழா நிறைவுக்குப் பின்பாக மேடைக்கு முன்பிருந்த சான்றோர் பெருமக்கள் பலரும் அருகில் வந்து திருமண முறை குறித்து வியந்து பேசி, கை கொடுத்து, வாழ்த்துச் சொல்லி எங்கள் இல்லத் திருமணமும் இப்படியே நடைபெற வேண்டும் என்று தொடர்பு எண் பெற்றுக் கொண்டதுமான நிகழ்வு இது. 

தமிழீழ உறவுகள் மொழி குறித்து அளவளாவிப் பேசி உற்சாகத்தோடு தற்படம் எடுத்துக்கொண்ட நிகழ்வு. மணவீட்டார் இருவரும் ஒத்த உணர்வோடு திருமண மேடையில் எனக்கும் மாலையிட்டு மதிப்பு செய்து நிகழ்வு இது... எனக்குநானே வியந்த நிகழ்வு.  

மணமகனின் உடன்பிறப்பான ஜெகதீசு பாண்டியன்,  சொக்கலிங்கம் உட்பட அனைவரது விருந்தோம்பும் பண்பும்,  மணமகளின் அண்ணன் மாமா என அனைத்து உறவுகளின் பாசப் பிணைப்பும் ஏதோ திரைப்படத்தில் பார்த்தது போன்றே இருந்தது. அன்பும் பாசமும் இன்றும் உயிர்ப்போடு இருக்கிறது என்பதற்குச் சான்றாக நடந்து இத்திருமணம் மூன்று நாடுகளைச் சேர்ந்த உறவுகளை இணைத்து,  முப்பால் திருமணமாக மலர்ந்து நெஞ்சில் நிறைந்தது. இத்திருமணம் திருக்குறள் உலகப் பொதுமறை என்று மீண்டும் ஒரு முறை நிறுவக் காரணமாக இருந்தது. 

எல்லாப் புகழும் என்னுள் இருந்து இயங்கும் தமிழ்தாய்க்கும், என்னை வழிநடத்தும் ஆசான் மார்களுக்குமே உரியது.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
98423 70792
நாள் 22-08-2024

Friday, 9 August 2024

தொல்காப்பியர் விருது

*தொல்காப்பியர் விருது*
தொல்காப்பியத் தொண்டர்களுக்கு அர்ப்ணிக்கின்றேன்... புலவர் ச.ந.இளங்குமரன்.

1-தொல்காப்பியர் விருது
2-உலக தொல்காப்பிய சாதனையாளர் பேரவையின் தலைவர். 

ஒரு புறம் விருது, ஒரு புறம் பதவி என இரு பெரும் பணியினை "அகில இந்திய சாதனைப் புத்தகப் பதிவு" (All India book of record) நிறுவனத் தலைவர் ஐயா செ.வெங்கடேசன் அவர்கள் அறிவித்திருக்கிறார்.

கடந்த 26-07-2024 முதல் 01-08-2024 வரை சுமார் ஏழு நாட்கள் நடைபெற்ற உலக தொல்காப்பிய பல்சுவை பன்னாட்டுச் சாதனை நிகழ்வின் வெற்றி விழாவில் இப்படி (ச.ந.இளங்குமரன்) எனக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

2018 ஆம் ஆண்டு வாக்கில் தற்போது மதுரைத் தொல்காப்பியர் மன்றத்தின் தலைவராக இருக்கின்ற இருளப்பன் ஐயா அவர்களும் நானும் பேசிக்கொண்டது "திருக்குறள் சென்று மக்களை அடைந்த அளவிற்கு தொல்காப்பியம் சென்று சேரவில்லை. தொல்காப்பியம் அனாதைக் குழந்தையாகக் கிடக்கிறது. அறிவாற்றல் மிக்க தொல்காப்பியர் தூக்கிச் சுமப்பாரின்றிக் கிடக்கிறார்.  அவரைத் தூக்கிச் சுமக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. தொல்காப்பியத்தின் பெருமையை எளிய மக்களுக்கும் உணர்த்த வேண்டிய கடமை நம்கண்முன் நிற்கிறது" என்று.

அதன் தொடர் சிந்தனை செயல்பாட்டில் இருளப்பன் ஐயா அவர்களால் மதுரைத் தொல்காப்பியர் மன்றம் உருவாக்கப்பட்டது. தேனி வையைத் தமிழ்ச்சங்கம் நற்றமிழ்ப் புலனம் இணைப்பில் உலகத் தமிழ்க் கூடல் வழியாகப் பல்வேறு தொல்காப்பிய உரைகள் வழங்கப்பட்டு வந்தன. வையைத் தமிழ் சங்கத்தின் முன்னெடுப்பில் உலகின் முதன் முதலாக தொல்காப்பிய மனன முற்றோதல்  செய்யப்பட்டது.  இச்சாதனையை  முத்தமிழ் சாமினியும் செந்தமிழ் சாலினியும் நிகழ்த்திக் காட்டினர். இதனை முதல் உலக சாதனையாக அகில இந்திய சாதனைப் பதிவுப் புத்தக நிறுவனர் வெங்கடேசன் ஐயா  அறிவித்ததோடு உலககின் முதல் தொல்காப்பிய தூதர் எனும் உயரிய விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார்.  தமிழ்நாட்டு முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இச்சாதனைச் செல்வங்களைப் பராட்டி பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.  இதன்பின்பு ஆங்காங்கே தொல்காப்பியம் தொடர்பாகப் பேசப்பட்டது. வலைத்தளங்களில்  தொல்காப்பியம் தொடர்பான செயல்பாடுகள் பெருகத் தொடங்கின.

இதன் நீட்சியாக வேலூர் முத்தமிழ் சங்கமம், சியாம் கலை மற்றும் கைவினைக் கூடம், அகில இந்திய சாதனைப் பதிவுப் புத்தக நிறுவனம் இணைந்து உலக தொல்காப்பிய பல் சுவை பன்னாட்டுச் சாதனை நிகழ்வை முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்தியது. இந்நிகழ்வில் சுமார் 13 நாடுகளிலிருந்து 30க்கு மேற்பட்ட தமிழ் அமைப்புகள் கலந்து கொண்டன.  3300 க்கும் மேற்பட்டவர்கள் தொல்காப்பிய நிகழ்வில் கலந்து கொண்டு கவிதை கட்டுரை பட்டிமன்றம் உரை ஆய்வுரை ஓவியம் என வழங்கி தொல்காப்பியத்திற்குப் பெருமை சேர்த்துச் சிறப்பித்திருக்கின்றனர்.  2018 ஆம் ஆண்டு நாம் எண்ணிய எண்ணம் ஆறு ஆண்டுகளுக்குப் பின் நிறைவேறி இருக்கிறது. இந்த வெற்றி கண்முன்னால் நாம் கண்ட வெற்றியாகும். இதில் என் பங்கு என்பது மிகக் குறைந்த அளவே. இன்னும் நிறைந்த களப்பணிகள் உள்ளன.

இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக மாணவர்களிடையே பெரும் மாற்றத்தை உருவாக்கியவர் தொல்காப்பியத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த தமிழ்ப்பேரறிஞர் மொழிப்போர் மறவர் சி.இலக்குவனார் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்குவனார் அவர்களது தமிழ்க்காப்புக் கழகத்தின் செயலாளராக விளங்கியவர் எமது ஆசான் செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் அவர்கள்.

கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் மொழி தொடர்பாக எந்த ஒரு எழுச்சியோ முன்னெடுப்போ இல்லாமல் இருக்கிறது என்பதை சில களப்பணிகளின் மூலம் அறிந்தேன். அங்கங்கே சில தமிழ் அமைப்புகள் பணி செய்தாலும் கூட மாணவர்களிடத்திலோ மக்களிடத்திலோ மாற்றத்தைக் கொண்டுவர இயலவில்லை. அதற்கான அரசியல் சூழலும் இடம் கொடுக்கவில்லை. இந்நிலையில் தான் தமிழ் இலக்கியங்கள் தொடர்பாக, தமிழ் இனவியல் தொடர்பாக, தமிழ் வரலாறு தொடர்பாக இயன்றவரை இளைய தலைமுறையினரிடம் இவறைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற தீராத அவாவின் விளைவாகவே வையைத் தமிழ்ச்சங்கம் எனும் அமைப்பு 2005 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. அதன் வழியாகச் செய்து வரும் பல்வேறு தமிழ்ப்பணிகளில் ஒன்றுதான் தொல்காப்பியப் பணியும். இதில் பல்வேறு தமிழ் அறிஞர்கள், தமிழ் அமைப்புகளது கூட்டு முயற்சியால் கிடைத்த சிறு வெற்றிதான் தொல்காப்பியச் சாதனை என்பது.

இந்நிலையில்தான் தொல்காபியர் விருதும் பொறுப்பும் எனக்கு  அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு நான் தகுதியானவனா? என்று என்னையே கேள்வி கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில் தமிழ்ப்பணிக்கான கூடுதல் பொறுப்பும் இருக்கிறது என்பதையும் எண்ணிப் பார்க்கிறேன். இத்தொல்காப்பிய விருதினை தொல்காப்பியம் பரப்புதல் தொடர்பாகப் பணி செய்து வருகின்ற அனைவருக்கும் அர்ப்பணிக்கின்றேன். தொல்காப்பியர் விருதினை எமக்கு வழங்க முன் வந்த வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றியை உரித்தாக்குகின்றேன்.

இனிய அன்புடன்
புலவத் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

"அனல்". ச.ந.இளங்குமரன்

அனல்

இத்தூய செந்தமிழ்ச் சொல்லை வடசொல் என்றே சில அறிஞர்கள் எண்ணுகின்றனர். 

அனல் என்பது தன்னைச் சார்ந்த அல்லது தன்னை ஒட்டிய எதனையும் எரிப்பதும், அழிப்பதும், கரியாக்குவதும் அனல் ஆகும்.

தன் முன் வைத்தது என்னவாயினும் அதனை உண்டு அழிப்பது அனல்.

இவ்வனலானது சமைக்கவும் கருவிகள் அமைக்கவும் ஒளி வழங்கவும் குளிர் போக்கவும் உதவுகிறது என்றாலும் அதன் முன்னுள்ள பொருளை அதன் தன்மையை அகலச் செய்தலை விடாமல் இருக்கிறது.  அரிசி காய்கறி ஆகியவற்றைப் பக்குவப்படுத்தினாலும் அவற்றின் இயல்பை மாற்றி அமைத்தலை எண்ணினால்  உண்மை நமக்கு தெற்றெனப் புலப்படும்.

நமது தமிழ்நாடு வெப்பமண்டில பகுதி. இவ் வெப்பமண்டிலப் பகுதியில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தேய்ந்து பொருந்துதல் வழியாக தீ உண்டாவதைத் தெளிய உணர்ந்து தீ யினுக்குரிய பல்வேறு அடிப்படையான பெயர்கள் பலற்றையும் உருவாக்கிக் கொண்டனர். 

தழு > தழு + வு > தழுவு
தழு + அல் > தழல்

கய் (இது பொருந்துதல் கருத்து வேர்) 
கய்+அல்>கயல்>கஞல்
கஞலுதல் = நெருங்குதல்  "புதுமலர் கஞல"  (புறம் :143) கஞல் > கனல் > அனல்

தகு : பொருந்து, சேர் 
தகு + அம் > தகம் : நெருப்பு
தகு + அனம் > தகனம் எரிப்பு
தகனம் எனும் சொல் இன்றும் சிற்றூர்ப் புறங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இறந்து போன ஒருவரின் உடலை எரிப்பது தொடர்பாக அவர் உடலை தகனம் பண்ணியாச்சா என்று கேட்பது வழக்கம். அனல் அது தூய செந்தமிழ்ச் சொல்லே அன்றி வடசொல் அல்ல...

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார்
சொல்லாய்வறிஞர் ப.அருளியார் அவர்களது நேரிய நெறியில்...

இனிய அன்புடன் ச.ந.இளங்குமரன்.
09-08-2024

Wednesday, 24 July 2024

செந்தமிழ் அந்தணரும் செழுந்தமிழும்

*செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரும் செழுந்தமிழும்*

புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்.
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

"அரசினர் கல்லூரி எதிலும் இளங்குமரனார் போல் அகரமுதலி பணியாற்றுவார் எவருமில்லை, ஆங்கிலப் பெரும் பட்டம் பெற்ற பண்டாரகருள்ளும் அவர் போல் இலக்கணம் கற்றாரும், ஆய்ந்தாரும் ஒருவரும் இல்லை" என்று மொழிஞாயிறு பாவாணர் அவர்களால் பாராட்டப்பட்ட செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்கள் அன்பும் அமைதியும் அடக்கமும் கொண்டவர். எளிமையும் இனிமையும் ஒருங்கே அமையப்பெற்றவர். நெஞ்சில் உறுதியும், நேர்மைத் திறனும், நுண்மான் நுழைபுலம் மிக்க ஆய்வறிவும், அரிமா நோக்கும் கொண்டு பாவாணராய் வாழ்ந்த பாவாணர். 


சுமார் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். 4800க்கும் மேற்பட்ட குறள்நெறித் திருமணங்களை நிகழ்த்தியவர். பத்துக்கும் மேற்பட்ட பழந்தமிழ் நூல்களை மீட்டெடுத்தவர். எழுத்துப் பணிக்காக நாள்தோறும் 18 மணி நேரம் செலவு செய்தவர் செந்தமிழந்தணர் அவர்கள். ஐயாவின் ஆய்வுகள் அளப்பரியன. அவர் தமிழுக்கும் தமிழருக்கும் வாய்த்த தமிழ்க் கருவூலம் அவர். உலகத் தமிழர்களின் ஒப்பிலாச்ச் சொத்துமவர். பாவணரது நேரிய நெறியில் நின்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு அவர் ஆக்கித் தந்திருக்கின்ற ஆய்வுகள் பற்பலவாம். 

சான்றாக செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம் பத்துத் தொகுதிகள். இந்நூல்களின் வழியாக சுமார் 8000 சொற்களுக்கு வேரும் விரிவும் கற்றறிந்த எவரும் மறுக்க இயலாக் கோணத்தில் நமக்குக் கொடையாக வழங்கியிருக்கிறார். 

எமது ஆசான் செந்தமிழ் அந்தணரோடு 1997 முதல் செந்தமிழ் அந்தணரின்நிறைவுக் காலம்வரை அவரைத் தொடர்ந்திருக்கிறேன். அவரது பல விழாக்களில் கலந்திருக்கிறேன். சில கூட்டங்களை நடத்தியும் இருக்கிறேன். தன் வாழ்நாளில் எனக்குத் தெரிந்த வரையில் நேரம் தவறாமையைக் கடைப்பிடித்தவர் அவரைப்போல் இதுவரையில் யாரையும் நான் கண்டதில்லை.

ஐயா அவர்களது 75 ஆம் பிறந்தநாள் விழா திருச்சி தூய வளனார் கல்லூரியில் நடக்கிறது. இவ்விழாவிற்கு தமிழண்ணல் அவர்கள் தலைமை தாங்குகிறார். அறிஞர்கள் பலரும் கலந்து கொண்டு அந்தணரை வாழ்த்தி மகிழ்கின்றனர். இப்பிறந்தநாள்  விழாவில் தான் ஐயா எழுதிய 75 நூல்கள் வெளியிடப்பட்டன. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு அறிஞருக்கும் இதுவரையில் நடக்காத நிகழ்வு. இந் நூல்களை தமிழ் மண் பதிப்பகம் வெளிக்கொண்டு வந்தது.

இந்நிகழ்வில் தலைமையேற்றிருந்த தமிழண்னால் அவர்கள் தன்னுடைய தலைமை உரையில் "என் இனிய இளவல் இளங்குமரனார், என்றாலும் அவர் தாழ் பணிந்து வணங்குகிறேன்" என்று சொன்னது எல்லோரையும் நெகிழவைத்தது.

இவ்விழா சுமார் எட்டு முப்பது மணிக்கு நிறைவாக வேண்டும். செந்தமிழ் அந்தணர் அவர்களது கையில் ஒலிவாங்கி கொடுக்கும் நேரம் 8-20. ஒலிவாங்கியைக் கொடுத்தவர் சொன்னார் "நாங்கள் அதிக நேரத்தை எடுத்துக் கொண்டோம். இருப்பினும் உங்களது நேரத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டாம்" என்று சொன்னார். 

இப்பொழுது ஐயா தொடங்குகிறார். 'காலம் பொன் போன்றது அல்ல, பொன்னை விட மேலானது. இவ்வுலகில் போனால் திரும்ப வராதது காலமும் உயிரும். எனவே நான் உரிய பொழுதுக்குள் நிறைவு செய்வேன் என்று சொன்னதோடு, ஒரு மணி நேரம் சொல்ல வேண்டிய செய்திகளின் சாரத்தை 10 நிமிடங்களில் சொல்லி எட்டு முப்பதுக்கு நிகழ்வை நிறைவு செய்தார். அவரின் காலம் தவறாமையை நேரில் கண்டவன் என்ற முறையில் இச்செய்தியைப் பதிவு செய்தேன். அவர் செல்லுகின்ற விழாக்களுக்கு உரிய நேரத்திற்கு முன்பாகவே விழா அரங்கில் அவர் இருப்பார். அப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

"தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்" இது செந்தமிழ் அந்தணர் எழுதிய நூல்களுள் ஒன்று. தமிழ் மொழியின் சிறப்பை, தமிழ்ச் சொற்களின் வேரை, தமிழ் இலக்கியங்களின் இனிமையை, தமிழ் எழுத்துகளின் மேன்மையை அதன் ஆழத்தை, நுட்பத்தை 16 கட்டுரைகளில் விளக்குகிறார்.

எழுத்துகள் பற்றி  "வட்டமே இயற்கை இயக்க வடிவம் எனக் கண்டனர் நம் முன்னோர். அதனை அடிப்படையாகக் கொண்டே உயிர் இயக்க எழுத்துக்களை அமைத்தனர்" என்கிறார். இந் நூலைப் படிக்கும் வரை நாம் நாளும் நாளும் எழுதி வரும், நம் தமிழ் மொழியின் எழுத்துக்கள் தொடர்பாக இப்படி ஒரு ஆய்வு இருப்பதை, கட்டமைப்பு இருப்பதை அறிந்திருக்கவில்லை என்பதே உண்மை.

மேலும் "அவ்வெழுத்துக்களையும் நாள் கோள் இயக்கம் போலவே வலச் சுழற்சியாகவே அமைத்தனர். இடச் சுழற்சி இயற்கையொடு மாறு பட்டது. ஊர்வலம், நகர்வலம், வலஞ் சுழி என்பவற்றை எண்ணுக.~

காற்று வகையில் ஒன்று சூறைக்காற்று. சுழன்று வளையமிட்டுக் கிளம்பும் அதனைக் கண்டவர், சூறைக் காற்று என்றனர்.

நீர் நிலையில் சுழல் உண்டு; நீர் நிலையில் எழும் அலை, ‘வட்டம்' என்பதை எவர் அறியார்? அலை வட்டம் என்பதுதானே பெயர்.

தீ, பற்றி எரிவது வட்டமாகவேயாம். நாய் வட்டமிடாமல் படுப்பது இல்லை. பருந்து வட்டமிட்டே பறக்கும்.

ஆடு மாடுகள் வட்டமாகச் சுழன்றே படுப்பன.

வாடையில் நடுங்குவார் கூனிக் குறுகி வட்டமாகவே படுப்பர்.

பூவும் காயும் தவசமணிகளும் வட்டவடிவினவே. 
நடைவண்டி முதல் எவ்வூர்தியும் 'வட்டை' உருள்கள் (சக்கரம்) அமைந்தனவே. என்று சொல்லி உயிர் எழுத்துகளின் தன்மையை விளக்குகிறார். 

செந்தமிழ் அந்தணர் அவர்கள் எழுதியவற்றுள் சுமார் 200 நூல்களைப் படித்திருப்பவன். எழுத நிறைய உண்டு. விரிவஞ்சி விடுகிறேன்.  

இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரின் படைப்புகளைச் செழுமையுடன் படித்துப் பாரங்கும் பரப்பத் தொடங்கினால் தமிழ் எழுட்சியுறும். தமிழினம் மீட்சியுறும்.

புலவர் ச.ந.இளஙகுமரன்

Sunday, 14 July 2024

சுட்டொலிகள்

சுட்டொலிகள்

மூன்று இலக்கம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழன் முதலாவது தன்னுடைய கைகால் அசைவுகளையும், கண் அசைவினையும், முகக் குறிப்பையும் கருத்து வெளியிடும் வாயில்களாகக் கொண்டிருந்தான். பின்பு வாய்ச்சைகை காட்டும் முறையில் சில ஒலிகளைப் பிறப்பித்தான்.

சேய்மைச் சுட்டாக வாயைப் படுக்கையாய் அகலித்தபோது 'ஆ' எனும் ஒலியும்,அண்மைச் சுட்டாக வாயைக் கீழ்நோக்கி விரித்த போது 'ஈ' எனும் ஒலியும், முன்மைச் சுட்டாக வாயை முன் நோக்கிக் குவித்த போது 'ஊ' எனும் ஒலியும், உயரச்சுட்டாக வாயை ஒடுக்கி நட்டுக்கு அகலித்தபோது 'ஓ' என்னும் ஒலியும் பிறந்தன இவை வாய்ச்சைகையொலிகள்.

இவ்வைந்து சுட்டுகளையும் ஒலிப்பதற்கேற்ற வாய் நிலைகள் வெவ்வேறு. ஒன்றுக்குரிய வாய்நிலையில் வேறொன்றை வேறொரு ஒலியை ஒலிக்க முடியாது.  'ஓ' எனும் நிலையில் மட்டும் 'ஆ' எனும் ஒலியைச் சிறிது ஒலிக்கலாம். இதனை நீங்கள் ஒலித்துப் பார்க்கலாம்.

பின்னர், வயிறார வுண்டபின் அடிவயிற்றிலிருந்து  மேல்நோக்கி யெழும் காற்று ஏகார வடிவாய் வெளிப்பட 'ஏ' என்னும் ஒலி எழுகைச்சுட்டாகக் கொள்ளப்பட்டது. உண்டபின் வயிற்றிலிருந்து எழும் ஒலியை ஏப்பம் என்று தமிழிலும் eructa- tion என்று ஆங்கிலத்திலும் ஏகார எகர முதற்சொல்லாகக் கூறுதல் காண்க. ஏப்பம் விடும்போதே சிலர் ஏவ் என்றும் சிலர் ஏப்பம் என்றும் ஒலிப்பது வழக்கம்.

ஆ,ஈ,ஊ,ஏ,ஓ என்னும் ஐந்து தனியுயிர் நெடில்களும் குறுகி முறையே அ, இ, உ,எ,ஒ என்னும் ஐந்து தனியுயிர்க் குறில்கள் தோன்றின. பின்னர், அகரத்தொடு இகர உகரங்கள் புணர்ந்து முறையே ஐ ஒள என்னும் உயிர்ப் புணரொலிகள் தோன்றின.

இங்ஙனம் ஆ ஈ ஊ ஏ ஓ என்னும் தனியொலிகளான ஐந்நெடில் களும் சுட்டொலிகளாக முதலாவது தோன்றின. இவ்வொலிகளே பின்பு எழுத்துவடிவம் பெற்றன. 

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

Tuesday, 9 July 2024

தொலைபேசியா? தொலைப்பேசியா?

5- தொலைபேசியா? தொலைப்பேசியா?

வானும் இருந்தது; ஒலியும் இருந்தது; வானொலி கிடைத்தது.

தொலையும் இருந்தது; காட்சியும் இருந்தது; தொலைக்காட்சியாயது.

தொலையொடு காட்சி இணையத் தொலைக் காட்சி ஆயது என்றால், தொலையொடு பேசி இணையத் தொலைப்பேசி தானே ஆக வேண்டும். தொலைபேசி என்றால் தொலைந்து போன, தொலைந்து போகிற, தொலைந்து போகும் பேசி என வினைத் தொகையாக அல்லவோ ஆகிவிடும்.

தொலைவுக்குப் பேசுதல், தொலைவில் இருந்து பேசுதல் ஆகாதே! முதற்கண் இதனை எழுதிப் பரப்பி யவர் பிழைபடப் பரப்பி விட்டார்; பெருக வழங்கிவிட்டது எழுத்திலும் பிழையாக நின்று விட்டது. எழுத்தில் இருப்பது இத்தனை அத்தனையா?

'பொது தொலை பேசி' என்பது சந்து பொந்து களில் எல்லாம் சிற்றூர் பேரூர் மூலை முடுக்கு எல்லாம் இடம் பெற்று விட்டதே. இம்முச்சொல் இணைப்பில் இரு சந்திப் பிழைகள் உள்ளனவே!

பொதுவானது என்னும் பொருள் தர வேண்டும். என்றால் 'பொதுத் தொலைப்பேசி' என்றல்லவா இருக்க வேண்டும்.

'பொது' தொலைப்பேசி என்றால் பொதுக்கப் பட்ட, பொதுக்கப்படுகின்ற, பொதுக்கப்படும் தொலைப்பேசி என்றல்லவா ஆகும். பொதுத்தல் துளையிடுதல். பொத்து வடிதல் வழக்கில் உண்டே.

பல்கால் பழகிவிட்டால், அதிலும் பெரியவர்கள் வழங்கிவிட்டால் அதுவே 'சரி' என்னும் எண்ணத்தை யும் ஊட்டிவிடுமே! ஆதலால் சீரான கலைச் சொல்லை உருவாக்குதலோடு சீரான வடிவிலும் தந்து பரப்புதல் வேண்டும் என்பது தெளிவாம்.

(செந்தமிழ் அந்தணரின் செழுந்தமிழ்)
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.

Friday, 5 July 2024

மொழிப்பற்றும் மொழிவெறியும்

மொழிப்பற்றும் மொழி வெறியும்.

தமிழ் இயற்கை மொழி. உலகின் மூத்த மொழி. உலக மொழிகள் பல கிளைப்பதற்கு வேராக இருந்து வரும் மொழி. வளர்ந்து வரும் அறிவியல் உலகத்திற்கு ஏற்றவாறு புதிய புதிய கலைச்சொற்களை உருவாக்குகின்ற ஆற்றல் படைத்த ஒரே மொழி உலகில் தமிழ் மட்டுமே என்பது மொழியியலாளர்களுடைய கருத்தாக இருக்கிறது.

இன்றைக்கு நாம் பேசுகின்ற மொழியில் 27 மொழிகளைக் கலந்து எழுதியும் பேசியும் வருகிறோம். தனித்தியங்கவல்ல தமிழ் மொழியில் தமிழர்களாகிய நாமே வலிந்து பிற மொழிகளைக் கலந்து வருகிறோம். தமிழ் மொழியைப் போல் இனிமையான எளிமையான மொழி எனக்குத் தெரிந்தவரையில் இல்லை என்கிறார் 11 மொழிகளைக் கற்றறிந்த பாரதியார்.  ஆனால் ஒரு மொழியையும் ஒழுங்காக, சரியாகக் கற்காத நாம்தான் தமிழ் எதற்கும் ஆகாது என்று வெட்டிப்பேச்சு பேசுகிறோம்,  எழுதுகிறோம். இப்படி பேசியும் எழுதியும் வரும் பலரும் தமிழைப் படித்து, தமிழில் எழுதி, தமிழால் வாழ்பவர்களே என்பதும் வேதனைக்குரியது. 

பிற மொழிச் சொற்களை தமிழில் கலக்க வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்தால், அப்படி வேண்டுகோள் வைப்பவர்களை மொழி வெறியர் என்று தன்னிலை அறியாது கேலியும் பேசி கிண்டலும் வருகின்றனர். 

வெறி என்பது என்ன? விலங்குகளுக்கு வெறி பிடித்தால் அது எதிர்ப்பட்டவர்களை எல்லாம் கடித்துக் குதறும், மிதித்துக்கொள்ளும். மனிதர்கள் சாதி வெறியும், சமய வெறியும், மதவெறியும் பற்றிக் கிடப்பதால் தான் இன்னொரு சாதிக்காரரை, இன்னொரு சமயத்தவரை, இன்னொரு மதத்தவரை இழித்தும் பழித்தும், தேவைப்பட்டால் கொலை கூடச் செய்தும் தங்கள் வெறியைத் தீர்த்து வருகின்றனர். 

அதே நேரத்தில் பற்றுடையபணிகளைர் இருந்தால் தங்கள் சாதியரை, தங்கள் சமயத்தவரை, தங்கள் மதத்தவரை முன்னேற்றும் பணிகளைச் செய்வர். 

ஒருவர் தன் தாய் மொழியின் மேல் கொண்டுள்ள பற்றின் காரணமாக தாய் மொழியில் பிற மொழிகளைக் கலந்து பேசுவதும், கலந்து எழுவதும் வேண்டாம் என்று வேண்டுகோள் வைக்கிறார் என்றால் அவர் எப்படி மொழிவெறியர் ஆவார்? 

எவரொருவர் தன் தாய் மொழியில் பிற மொழிகளைக் கலந்து எழுதுகிறாரோ, எவரொருவர் தன் தாய் மொழியில் பிற மொழிகளைக் கலந்து பேசுகிறாரோ அவரே மொழிக் கொலையர், அவரே மொழி வெறியர்.

"மொழிப்பற்று மிக்குடையோன் மொழிவெறியனல்லன்!
மொழியைக் கொல்லும் கழிசடையே மொழிவெறியன்" என்கிறார் பாவேந்தர். இதனை அவர்கள் எப்போது உணர்வார்களோ தெரியவில்லை.

வளர்ந்து வரும் அறிவியல் உலகில் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கான கலைச் சொல்லாக்கங்கள் தமிழில் நிறைந்து வந்து விட்டன. அவற்றை அறிந்து கொள்ள முயல்வோம். அறிந்து கொண்ட சொற்களை நம் வாழ்நாளில் பயன்பாட்டில் வைப்போம். நடைமுறை வாழ்வில் பயன்படுத்தி மகிழ்வோம் அதுதான் தாய் மொழிக்கு நாம் செய்யும் நன்றிக் கடன். ஒரு மனிதனின் அடையாளம் அவன் பேசும் மொழியேயன்றி வேறொன்றுமில்லை. தாய்மொழி வளர்ப்போம், தரணியில் உயர்வோம்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
05-07-2024

Sunday, 30 June 2024

வெம்பக்கோட்டை அகழாய்வு

வெம்பக்கோட்டை அகழாய்வு
(மீட்டெடுக்கப்படும் தமிழர் வரலாறு) 

30-06-2024 விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகில் நடைபெற்று வரும் அகழாய்வுத் தளத்துக்கு நேற்று சென்றிருந்தேன். சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் அகழாய்வு செய்யப்பட்டு வரும்  இத்தளம் சேதுபதி, பாண்டி சேதுபதி எனும் குறுநில மன்னர்கள் ஆட்சி செய்த பகுதியாகும்.

தொல்லியலாளர் பொன் பாசுகர் அவர்களது தலைமையில் நடைபெற்று வந்த அகழாய்வில்  இதுவரை சுடுமண்ணாலான பொம்மைகள், சூதுபவளமணிகள், சங்கு வளையல்கள், கருப்பு சிவப்பு நிறத்தினாலான அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய  பானையோடுகள், , கண்ணாடி, பாசிமணிகள் என 3500 க்கும் மேற்பட்ட பழங்காலப் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

மேலும் அக்கால மக்கள் பயன்படுத்திய அழகிய கைப்பிடியுடன் கூடிய சுடுமண்ணாலான தோசைக்கல்லும் கண்டெடுக்கப்பட்டுளது.

இங்கு கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்றும், இப்பொருட்கள் வைப்பாற்றங் கரையிலிருந்து தூத்துக்குடி கடல் வழியாக வணிகம் நடந்ததற்கான சான்றாக உள்ளன என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

தமிழகமெங்கும் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்வில் மக்கள் வாழ்விடப் பகுதிகளில் சங்கு வளையல்கள் நிறைந்து கிடைத்திருக்கின்றன. அதைப் போலவே வெம்பக்கோட்டையிலும் சங்கு வளையல்கள் கிடைத்திருக்கின்றன. மற்ற இடங்களில் கிடைத்த வளையல்களுக்கும், இங்கு கிடைத்திருக்கின்ற வளையல்களுக்கும் வேறுபாடு என்னவென்றால் வெம்பக்கோட்டையில் கிடைத்திருக்கின்ற சங்கு வளையல்கள் கலை நயமிக்க வேலைப்பாடுகளுடன் வண்ணம் பூசப்பட்டிருக்கிறது.

யானைத் தந்தங்களால் ஆன பதக்கங்கள், தங்கத்தில் கிடைக்கப்பட்ட அணிகலன்கள், அவற்றில் உள்ள வேலைப்பாடுகளை வைத்து இப்பகுதியில் வாழ்த்த மக்கள் கலைநயம் மிக்கவர்கள் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் திமிலுடன் கூடிய காளை உருவங்களும் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை செய்யப்பட்ட இரண்டுகட்ட அகழாய்வில் கீழடியில் கிடைத்ததைப்போல் முதிர்ந்த எழுத்துக் குறியீடுகள் இதுவரை வெம்பக்கோட்டை அகழாய்வில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தற்போது மூன்றாம் கட்டப் பணி  தொடங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. 

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Monday, 22 April 2024

கசல் கவிதைகள். புலவர் ச.ந.இளங்குமரன்

1- 
எவரென்னை எந்நூலில் எழுத்தாக வடிப்பார்?
எவரெல்லாம் என்வாழ்வைப் புத்தகத்தில் படிப்பார்?

எவரெல்லாம் எம்உருவை ஓவியமாய் வடிப்பார் ?
எவரெல்லாம் தன்வீட்டுச் சுற்றிலெனை அடிப்பார் ?

எவரெல்லாம் என்பயணந் தனைஇடித்து உரைப்பார் ?
எவரெல்லாம் எனைஇங்குக் குழிதோண்டிப் புதைப்பார் ?

எப்போதும் வந்திடலாம் எமன்என்னைத் தேடி
இல்லாமல் போவேனோ மண்மீது மூடி?


நீயே என் வாழ்வு 
நிலைகுலைந்து போகும்என அறியவில்லை 
நீயே என்உலகம் 
நிலநடுக்கம் எப்போது தெரியவில்லை

நீயே என்கனவு 
விழிஉறக்கம் போகும்என நினைக்கவில்லை 
நீயே என்இன்பம் 
பருகுவது நஞ்சென்னும் நினைப்புமில்லை 

நீயேஎன் உயிரும் 
நடைப்பிணமாய் ஆனதைநான் உணரவில்லை
நீயே என்அனைத்தும் 
நொடிப்பொழுதும்  கொல்கின்றாய் உணர்வுமில்லை!

3-
நினைவுகளைச் சுமப்பதுவே வாழ்க்கை ஆச்சு 
நினைவுகளே சுழியமென மாறிப் போச்சு 

கனவில்லை தூக்கங்கள் மறந்து போச்சு 
காதலியாள் சொன்னதெலாம் பொய்யாய்ப் போச்சு

செம்பவள இதழிரண்டும் வெளுத்துப் போச்சு 
செஞ்சாயம் பூசியது தெரிய லாச்சு

எதிர்காலத் திட்டங்கள் என்ன வாச்சு 
நிகழ்காலச் செயல்பாடு கரியாப் போச்சு

4
உயிரின் உருக்கம் ஆன்மா அறியும்
நிலத்தின் உயிர்ப்பு நீரால் அமையும்

வெயிலின் அருமை நிழலில் தெரியும்
பிரிவின் பெருமை உறவில் புரியும்

உழவன் பெருமை உலகம் அறியும்
உணவுப் பஞ்சம் வந்தால் தெரியும்

பெண்ணின் அன்பும் சிலநாள் குறையும்
மண்ணின் உயிர்கள் யாவும் மறையும்


வான்வெளியில் நிலவெனவே வலம்வருவாய் - என
நினைத்தவனின் நினைவாகற்றிப் புலம்பெயர்ந்தாய்

வாவென்று வாஞ்சையுடன் அழைக்கின்றாய் - நீ
தொட்டுவிடும் தூரத்திலா இருக்கின்றாய்?

வீழ்ந்தபின்னும் எதற்காக வீசுகின்றாய் - ஓ
மரணமேநீ என்னசெயப் போகின்றாய்?

தேடித்தான் அலையவைத்தாய் தேவதையை - எனைத்
தேடித்தான் அலைகின்றேன் தேவதையே!

சொல்லாமல் பிரிந்துசென்றாய் காத்திருந்தேன் - பின்
பேசாமல் பிரிந்துநின்றாய் வேர்த்திருந்தேன்!

பிழைப்பேனா தெரியாது பேச்சில்லை - இனி
பிழைத்தாலும் பிணம்எனக்குப் மூச்சில்லை !

ச.ந.இளங்குமரன் 
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

Saturday, 20 April 2024

பழந்தமிழர் மரபும் தமிழ்நெறித் திருமணமும்

21.04.2024 ஞாயிறு, காலை 10.00 மணிக்கு 
"தமிழ்ச் சான்றோர் பேரவை" சார்பில், 
"தமிழ்தேசம்" (Clubhouse)  வழங்கும் சிறப்பு நிகழ்வு.

"பழந்தமிழர் மரபும் தமிழ் நெறித் திருமணமும்" 
எனும் தலைப்பில்

புலவர்
இளங்குமரன் அவர்கள் 

நம்மிடையே உரையாற்றுகிறார்; உரையாடுகிறார்.
வாருங்கள், தோழர்களே!
கற்போம், ஒன்றிணைவோம்,  மாற்றத்தை முன்னெடுப்போம்!!

இணைய வழி இணைப்பு

https://bit.ly/TamilDesam21042034

Saturday, 9 March 2024

தேனிமாவட்ட ஆட்சியருக்கு நன்றி தேனி மு.சுப்பிரமணி

தேனி மாவட்ட ஆட்சியருக்கு நன்றி... நன்றி... நன்றி...!!!

தமிழ்நாடு அரசு, மாவட்ட அளவிலான புத்தகக் கண்காட்சியை மாவட்ட நிருவாகத்தின் கீழ் நடத்தி வருகிறது. இப்புத்தகக் கண்காட்சிக்கான சிறப்புப் பேச்சாளர்கள், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து அழைக்கப்பெற்று வருகிறார்கள். இக்கண்காட்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பெற்று வருகின்றன. ஒரு மாதத்திற்கு முன்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிக்கான ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட அளவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்ட அனைத்துப் படைப்பாளர்களும் மாவட்ட நிருவாகத்தால் சிறப்பு செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் சிறப்பு செய்யப்படுபவர்களிலிருந்து இருவர் உரையாற்ற வாய்ப்புகள் வழங்கப்பெற வேண்டும் என்று தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நானும் (தேனி மு. சுப்பிரமணி), வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் புலவர் ச. ந. இளங்குமரனும் கோரிக்கை வைத்திருந்தோம். 

எங்களது கோரிக்கை ஏற்கப்பட்ட நிலையில்,  தேனி மாவட்ட இரண்டாவது புத்தகக் கண்காட்சியில் ‘இலக்கிய அரங்கம்’ எனும் புதிய நிகழ்வு சேர்க்கப்பட்டது. இதன் மூலம்,  ஆறு நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளில் தேனி மாவட்டப் படைப்பாளர்கள் சுமார் 60 படைப்பாளர்கள் சிறப்பிக்கப் பெற்றதுடன், ஒவ்வொரு நாளும் இருவர் வீதம் 12 படைப்பாளர்கள் உரையாற்றிட வாய்ப்பும் வழங்கப்பெற்றது.   

தமிழ்நாட்டிலேயே முதன் முறையாகப் புத்தகக் கண்காட்சியில், மாவட்டப் படைப்பாளர்களுக்கு மதிப்பு செய்திடும் நோக்கத்தில் வைக்கப்பெற்ற எங்களது கோரிக்கையை ஏற்று, அதனைச் செயல்படுத்திய தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆர்.வி. ஷஜீவனா இ. ஆ. ப அவர்களுக்கும், இந்நிகழ்வினை முன்னின்று நடத்திய மாவட்ட நூலக அலுவலர் இரா. சரவணக்குமார் உள்ளிட்ட நூலகர்கள் அனைவருக்கும், தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் பெ. இளங்கோ உள்ளிட்ட அலுவலகப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி... நன்றி... நன்றி... 

(இனி தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களில் நடத்தப்பெறும் புத்தகக் கண்காட்சிகளிலும், குறிப்பிட்ட மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டப் படைப்பாளர்களும் சிறப்பிக்கப்படலாம் என்று நம்புவோம்...)

செய்தி 
தேனி மு.சுப்பிரமணி

Saturday, 24 February 2024

திருக்குறள் உலகச்சாதனை

தேனி மாவட்டத்தில் முதன்முறையாக திருக்குறள் முற்றோதல் உலகச்சாதனை நிகழ்ச்சி போடிநாயக்கனூர் சவுண்டீசுவரி நடுநிலைப் பள்ளியில் தேனி வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது. 

தலைமை ஆசிரியர் சதீஷ்குமார் வரவேற்புரை வழங்க,  போடி வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன் திருக்குறளார் முத்துக்காமாட்சி, மகாலிங்கம்  ஆகியோர் வாழ்த்துரை வழங்க  அகில இந்திய சாதனைப் பதிவு நிறுவனத்தின் தலைவர் வெங்கடேசன் அவர்களும், ஆசியன் சாதனைப் பதிவு நிறுவனத்தின் தலைவர் விவேக் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வினைக் கண்காணித்துச் சிறப்புரை வழங்கி உலகச் சாதனைப் பட்டயத்தை வழங்கினர். பள்ளிச் செயலர் சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நூலாடை அணிவித்துச் சிறப்பித்தார். 150 மாணவர்கள் 1330 குறட்பாக்களை 107 நிமிடங்களில் முற்றோதல் செய்து உலகச் சாதனை படைத்த இந்நிகழ்வினை பள்ளியின் தமிழாசிரியர் அ.இலட்சுமி குமரேசன் நெறிப்படுத்தினார். பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும், நிர்வாகக் குழுவினரும், பெற்றோர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Saturday, 10 February 2024

பாவாணர் வழியில் பைந்தமிழ் வளர்த்த இளங்குமரனார்

08-02-2024
பாவாணர் பிறந்தநாள் விழாப்பேருரை.
இடம்: மகாத்மாகாந்தி கலை அறிவியல் கல்லூரி, பாரதிதாசன் தமிழ் இலக்கியத்துறை ,  சோலைசேரி - தென்காசிமாவட்டம். 
'பாவாணர் வழியில் பைந்தமிழ் வளர்த்த இளங்குமரனார்" எனும் தலைப்பில் வையைத் தமிழ்ச் சங்கம், தேனி சார்பில் கலந்துகொண்டு உரைவழங்கிய இனியபொழுது... நிகழ்ச்சி ஏற்பாடு : உலகத் தமிழர்கழகம் முறம்பு.

இனிய அன்புடன் 
வையைத் தமிழ்ச்சங்கம் - வையைப் பதிப்பகம் தேனி நாகலாபுரம்.

Sunday, 4 February 2024

செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்

04-02-2024

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் 94 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா.
உலகத் தமிழ்நெறிக் கழகம் - திருக்குறள் உலகம் கல்விச்சாலை இணைந்து நடத்தும்  திருக்குறள் முத்தமிழ் பரிசளிப்பு விழா கோவை சன்மார்க்க சங்க அரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழ்நெறிக் கழகச் செயலாளர் சிவலிங்கம் அவர்கள் வர்வேற்க, முனைவர் நாகரத்தினம் தலைமையில் "திருக்குறளும், செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரும்" எனும் தலைப்பில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் புலவர்ச.ந.இளங்குமரன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். 

நிகழ்வின் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையே இயல் இசை நாடகம் தொடர்பாக முத்தமிழ்ப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. சுமர் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும்,  ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களது திருவுருவப்படத்தையும், திருவள்ளுவர் படிமத்தையும் மாணவ மாணவிகள் திறந்து வைத்து மலர்தூவி வழிபாடு நடத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி திருக்குறள் முனைவர் அன்வர் பாட்சா, கவிஞர் வள்ளியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணிக்கவாசகம் உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் அறிக்கையைப் படிக்க இருகூர் ஆறுமுகம், சக்திமதி ஆகியோர் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினர்.

திருக்குறள் ஆய்வாளர் கணேசன் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நன்றியுரை வழங்கினார்.

கோவை தமிழ்ச் சங்கத்திலிருந்து மானூர் புகழேந்தி ஐயா அவர்கள், சோதிமைய அறக்கட்டளையின் சார்பில் முனைவர் இராதாகிருட்டிணன்,  உலகத் தமிழ்க்கூடல் சார்பில் மகாலிங்கம்  ஆகியோர் சிறப்பு விருந்திருந்தினருக்கு நூலாடை அணிவித்துச் சிறப்பித்தனர்.

Tuesday, 30 January 2024

தமிழ்க்காடு (கவிதைகள்) பாவலர் வையவன்

நூல் : தமிழ்க்காடு
நூலாசிரியர் : பாவலர் வையவன்
வெளியீடு : நெசவுக்குடில்

அறம், பொருள், இன்பம் என்பது போல காதல், வீரம், மானம் எனும் மூன்று தலைப்புகளில் 66 உட்தலைப்புகளைக் கொண்டு 192 பக்கத்தில் நிறைவாகியிருக்கும் நூல் தமிழ்க்காடு.

படிக்கப் படிக்கத் திகட்டாத பாக்கள் படிப்பவரைப் பரந்த சிந்தனைக்கு நகர்த்துகிறது. மொழி, இனம், மானம் மூன்றன் சிறப்பு, இருப்பு, இழப்பு என்பதோடு கடந்து செல்லாமல் இழந்ததை மீட்கும் வழிமுறைகளோடு முறைப்படுத்தி தமிழ் சமூகத்திற்கு வழங்கி தமிழ்த் தாய்க்குப் பெருமை சேர்த்திருக்கிறார் பாவலர் வையவன் அவர்கள்.

தமிழ்க்காடு நூல் முழுமைக்கும் செழுமையான செந்தமிழ் நடை. அதே நேரத்தில் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் எளிய நடையில் இனிமை ததும்ப எழுதியிருக்கிறார். 

தாயவள் எனும் தலைப்பில் தொடங்கி தாய்த்தமிழ் மலரட்டும் என நிறைவாகி இருக்கிறது நூல். காதல் தலைப்பிலும் கூட வீரத்தையும் மானத்தையும் சொல்லி உணரவைத்திருப்பது நூலாசிரியருக்குரிய தனித்திறன் என்றே சொல்லலாம். அதேபோல் இந்நூலில் உள்ள கவிதைகளைப் படிக்கின்ற பொழுது மொழியும்,  இனமும், மானமும் நூலாசிரியரின் குருதி ஓட்டத்தில் இரண்டறக் கலந்து ஊறிக் கிடக்கிறது என்பதை உணர முடிகிறது. அவரைப் போலவே நாமும் ஊறித் திளைக்க வேண்டும் என்று கவிதைகள் முழுமைக்கும் நமக்கு உணர்த்திச் செல்கின்றன.

பல பாடல்கள் சங்க இலக்கியங்களை ஒட்டியே இருக்கின்றன. ஆனால் அது இன்றைய கால நிகழ்வுகளைப் பேசுகின்றன. 

தலைவனைப் பற்றித் தோழியிடம் தலைவி இப்படிச் சொல்கிறாள்
 " பேரன்பதுவோ தமிழன் தானாம் பெற்றவள் அவளும் பைந்தமிழ் தாயாம்
 உயிருடல் மூச்சு உணர்வது வெல்லாம்
 உயர்செந் தமிழே உயர்செந் தமிழே 
நாடும் மொழியும் நாடா மனிதன் நடைப்பினம் என்றே நவிழ்கின்றானாம்"...
"தேன்மொழித் தமிழைத் தேர்ந்தவன்
 நான் தவித்திருப்பதை நனி மறந்தனனே" இது காதலன் வரவு காய் ஏங்கும் காதலியின் கூற்றாய் ஒலிக்கும் கவிதை.

மனம் நிறைய படி" எனும் ஒரு தலைப்பு விடியும் முன் எழுந்து காலை 
வினைகளை முடித்தல் வேண்டும்
 படித்திடத் தொடங்கும் முன்னர் 
பச்சைநீர் அருந்த வேண்டும் 
படித்ததை மீண்டும் மீண்டும் 
பாராமல் உரைத்தல் வேண்டும் 
படித்ததைப் புரிந்து நெஞ்சில் 
பதித்திட முயல்தல் வேண்டும்...

ஒருமையுள் கற்ற கல்வி 
எழுமையும் ஏமாப் பென்றால் 
பெருமைசேர் கல்வி மீது 
பேரவா கொள்ள வேண்டும்
கருமைசேர் தீய எண்ணம் 
கனவிலும் போக்க வேண்டும்
கருமுதல் வளர்த்த தாயின்
கனவினை ஆக்க வேண்டும். 

காதல் ஆணுக்கும் பெண்ணுக்குமானது  மட்டுமல்ல,  அது மண்ணுக்குமானது, தமிழ் மனம் சமூக அக்கறையுடன் கூடிய கல்வியின் மீதும் காதல் கொள்கிறது. தகப்பன் பாடிய தாலாட்டிலும் காதல் கொள்கிறது. மண் விடுதலைக்காய்ப் போராடிய ஈகியர் மீதும், தமிழர் பண்பாட்டின் மீதும், சிதைப்பவரை எதிர்த்து மீட்டுருவாக்கம் செய்த பண்பாளர்கள் மீதும் காதல் கொள்கிறது இது பாவலர் வையவனாருக்கு மட்டும் சொந்தமானதல்ல. ஒவ்வொரு தமிழனுக்கும் சொந்தமாய் இருக்க வேண்டும் என்பதை உணர்த்திச் செல்கிறது காதல் தலைப்பு.

இரண்டாவது தலைப்பாக வீரம். வீரம் என்றால் என்னவென்று கேட்கத் தோன்றுகிறதா?  இழப்பு எதுவாக இருந்தபோதும் அதை மீட்பதே வீரமாகும் என்பது பதில்.  இழந்ததை மீட்பது கடினம் என்று நினைத்து ஊமையாகி உறங்கிக் கிடந்தால் நாளை நாம் உடுத்துவதற்கு ஒரு உடையும் கிடைக்காது. எனவே எதையும் இழந்துவிடக் கூடாது. இழந்த ஒன்றை மீட்காமல் இருந்து விடவும் கூடாது. இது பாவலர் வையவன் அவர்களது உள்ளக்கிடக்கை. வீரமாய் இருக்க என்னும் ஒவ்வொருவருடைய உள்ள கிடக்கையும் இதுதான். இக் கருத்துகளை உள்ளடக்கிய பாடல்கள் இத்தலைப்பில் உலா வருகின்றன. 

கலை என்னும் பெயரில் சிதைக்கப்படும் மொழி, சிதைக்கப்படும் பண்பாடு, சிதைக்கப்படும் நாகரிகம், சிதைக்கப்படும் ஒழுக்கம், திரைக்கலைஞர்கள் மேல் தீராத நோய் பிடித்து அலையும் இளைஞர்கள் என இவை திருத்தப்பட வேண்டும். அதேநேரம் இப்படியான கெடும்புகளைச் செய்யும் எவரானாலும் இம்மண்ணில் எவரையும் ஏமாற்றும் வழியின்றி  அந்த நச்சைத் தீயிட்டு கொளுத்த வேண்டும் என்கிறார் பாவலர் ஆங்கில மாயையில் சிக்குண்டு கிடப்பவர் மேல் இப்படிச் சீறுகிறார்.

'என்பேர் தமிழன்; என்னூர் தமிழ்மண் என்குலக் குடிதமிழ் நாடு ; என்தன் அப்பன் என்தன் பாட்டன் வாழ்ந்தது தமிழ்மண் வீடு ; எங்கள் வாயும் எங்கள் சேயும் தின்றது தமிழ்மண் சோறு ; எங்கள் நடுவே ஆங்கிலம் ஏனென' இனிநீ சினந்து சீறு!. 

களைபோலும் செந்தமிழ்ச்சொல் குறளும் கூட
 'இளைதாய முள்மரத்தைக் கொல்'லச் சொல்லும்
 களைந்தோமா சாதிமத வருணக் காடு?
 வளைப்பாம்பு ஆரியத்தை வணங்கும் கேடு! 
இளைப்பாறி இருக்கின்றோம் இந்நாள் தோழா 
விளைந்திடுமா பெருவெற்றி எண்ணிப் பாராய் 
தளைப்பட்ட விலங்கெல்லாம் தகர்த்துப் போக்கித் 
தடைதாண்டிப் பொங்கிடடா அன்புத் தோழா!

வீரத்தின் விளைநிலமாம் வ உ சி, தந்தைப் பெரியார், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாவலர் தமிழேந்தி உள்ளிட்ட பல அறிஞர்களும் அவர்களது தலையாய பணிகளும் இன்னும் மீட்கப்படாமலேயே கிடக்கின்றன என்பதைச் சுட்டி மீட்கும் வீரத்தைத் தமிழர் பெற வலியுறுத்துகிறார்.

நாம் நமது மண்ணில் எத்தனையோ இழந்து விட்டோம். இழந்ததை மீட்கவும், இருப்பதைக் காப்பாற்றவும், இளைய சமூகம் எழுந்து வர வேண்டும். விழுந்து கிடக்கின்ற நம் மானத்தை, மண்ணை, மரபை மீட்க வேண்டும் என்னும் மான உணர்வோடு மானம் என்னும் இத்தலைப்பில் கவிதைகளைப் படைத்திருக்கின்றார். 

தமிழ்க்காடு கவிதைகள் எங்கும் தமிழரின் உரிமை பேசுகிறது. உரிமையை மீட்கும் வீரம் பேசுகிறது. வீரத்தின் விளை நிலமாம் மானம் பேசுகிறது.  இந்த மொழிப்பற்றும், இனப்பற்றும், மானமும் இதைப் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உருவாகும் என்ற நம்பிக்கை எனக்கும் இருக்கிறது. அருமையான சமூக எழுச்சிக்கான விதைகள் இத்தமிழ்க்காடெங்கும் செழித்து கிடக்கின்றன. இவை முளைக்க வேண்டும். ஒரு நாள் கட்டாயம் முளைக்கும் என்ற நிறைந்த நம்பிக்கையோடு நூலாசிரியர் பாவலர் வையவன் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துகிறேன்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்
தேனி நாகலாபுரம்.

Monday, 22 January 2024

பழுப்பேறிய நாட்குறிப்பைத் திருப்புதல் - இர.அறிவழகன்

புத்தகப் பார்வை...

கவிஞர் இர.அறிவழகன் அவர்களது "பழுப்பேறியே நாட்குறிப்பைத் திருப்புதல்" திருப்பிப் பார்த்தேன். திருப்பிய பக்கங்கள் எங்கும் காதல் சுவை இழையோடிக்கிடந்தது.

காதல் காதல் காதல்! காதல் போயின் சாதல் சாதல் சாதல்! என்று வழிவழியாகத் தமிழ்ச்சமூகத்தில் எஞ்சியும், மிஞ்சியும் கிடக்கும்  வார்த்தை.  இது இது பாரதியின் வரிகளில் நிலைநிறுத்தப்பட்டது.

காதல் இல்லாத உயிர்களே கிடையாது! காதல் மட்டும் இல்லை என்றால் உலகம் தொடர்ந்து இயங்காது! அதனை விளங்கவும் முடியாது, விளக்கவும் முடியாது. உணர்வால் மட்டுமே உணர முடியும். சிலருக்கு இது கைகூடலாம். சிலருக்கு கையை விரிக்கலாம். எதுவாக இருப்பினும் காதல் ஒன்றுதான். 

பழுப்பேறியே நாட்குறிப்பில் கை கூடாத காதலை, ஆண்டுகள் பலகடந்து, கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கிறார் காதலனாக நூலாசிரியர். இளமைக் கால நினைவுகள் நூலெங்கும் இசை பாடுகிறது. தலைப்புகளே இல்லாத கவிதைகள், பாதங்களால் (வரிகளால்) நடையிடுகிறது. குறிப்பாக இக்கவிதைகளில் நிறைந்து பேசப்படுவது தனிமையின் வலிகள்...

" வெட்டுண்டு 
வீழ்ந்த மரத்தில் 
தன் கூடு தேடி அலையும் 
பறவையாய்த் தொடங்கினேன் 
உன்னுள் 
எனக்கான துஞ்சுமிடத்தை" இது தொடக்கக் கவிதை முதற்சொல்லே துண்டித்தல் பற்றியே தொடங்குகிறது. இது பெரும்பான்மையாக நூலெங்கும் தொடர்கிறது.

"என் பழுப்பேறிய நாட்குறிப்பின் 
மூலை மடித்த முப்பதாம் பக்கம் 
நிரப்பாமல் தவிர்த்து 
பிரிவின் தூசிபடிந்து புரட்டாமல் 
வெறுமை தாங்கலாக இருக்கிறது 
வா
மீதமிருக்கும் நாட்களை
இரண்டு பேர்களும் எழுதுவோம்..."  இது தலைப்பு குறித்த கவிதை நெடிய நாட்களுக்குப் பின் புரட்டப்படும் 30 ஆம் பக்கம் நிகழ்காலம் வரையிலும் நிறப்பப்படவில்லை.

"மவுனங்களில் கட்டுப்படாத
கசியும் கண்ணீர்
தற்போதைய தகவல்களில்
நனைப்பது இழந்த நாட்களையும்
இருக்கும் நாட்களையும்
நீயாகிய நானும்
நானாகிய நீயும்
இப்பிரபஞ்சத்தின்
முதுபெரும் அன்பை
சாய்வு நாற்காலியில் அமர்ந்தே வாசிப்போம்.... 

இது நிறைவுக் கவிதை. தொடக்கமும் நிறைவும் நூலுக்குள் இருக்கும் செய்திகளை நமக்கு தெளிய விளங்க வைத்து விடுகிறது. 

கடந்து போன காதலை கடைசி வரையிலும் விடாப்பிடியாக பிடித்துக் கொண்டிருப்பவருக்கு இந்நூல் படைக்கப்பட்டிருக்கிறது.  இந்த நூலைப் படிக்கும் படிப்பாளிகள் தங்களுடைய இளமைக் கால நினைவுகளில் நீந்துவது திண்ணம். 

அருமையாக இந்த நூலை ஆக்கி இருக்கும் நூலாசிரியர் கவிஞர் இர.அறிவழகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். நூல் வெளியீடு "பன்முக மேடை"  தேனி. விலை உரூபா 100. 

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன், நிறுவுநர்,
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

என் உயிர் தமிழுக்கே... (கவிதைகள்) கருங்கல் கி.கண்ணன்

புத்தகப் பார்வை 

என் உயிர் தமிழுக்கே...

நூலாசிரியர் : கருங்கல் கி.கண்ணன். 
நூல்குறித்து : புலவர் ச.ந.இளங்குமரன்.

"எந்நிலை வந்தாலும்
தன்னிலை தவறேன் 
என் தாய் தமிழ்
என் உயிர் தமிழ் 
என் இதயத்தின் ஓசை தமிழ் 
என் சுவாசத்தின் காற்றும் தமிழ்" 
என்று என் உயிர் தமிழுக்கே எனும் தலைப்பில் தொடங்கி ...

"காதல் வளர்த்ததும் தமிழ்
ஞானத்தை ஆண்டதும் தமிழ்
விழுப்பும் கண்டதும் தமிழ் 
வீரனை வணங்கியதும் தமிழ் 
இயல் இசை நாட்டியமும் தமிழ் 
அறத்தோடு வாழ்ந்ததும் தமிழ்
மறத்தமிழனின் தாயின் தமிழ்! தமிழே!
உணர்த்திட எமக்கு வரம்கொடு தாயே வல்லமை தாராயோ சக்தி 
வல்லமை தாராயோ" என வல்லமை தாராயோ என்னும் தலைப்பில் நிறைவு செய்திருக்கின்ற என் உயிர் தமிழுக்கே எனும் இந்நூல் 51 தலைப்புகளையும் 135 பக்கங்களையும் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் கருங்கல் கண்ணன். கோவை ரேணுகா பதிப்பகம் நூலினைப் பதிக்க தமிழன்னை தமிழ்ச் சங்கம்  இதனை வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

தனித்து இயங்கவல்ல தமிழ்மொழி பல மொழிகளின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கிறது என்பதைப் பலரும் அறிவர். இதற்கு என்ன செய்யலாம்? என்ன செய்ய வேண்டும்?. பெரும்பான்மையான அமைப்புகள் எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள்? மொழியை அடுத்த கட்டத்திற்கு எப்படி நகர்த்தவேண்டும்? என்கிற பல கேள்விகள் நம் நெஞ்சத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. 

இவ்வாறான சூழலில் தம்முடைய பேச்சு, தம்முடைய எழுத்து என அனைத்தும் பிற மொழி கலவாத தனித்த தமிழிலேயே இருக்க வேண்டும் என்பதோடு, வட எழுத்துகள் என்று சொல்லப்படுகின்ற கிரந்த எழுத்துகள் பயன்பாட்டை அறவே தவிர்க்க வேண்டும் என்ற இலக்கோடு இந்த நூல் முழுமைக்கும்மான செய்திகளாகக் கவிதை வடிவில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் கருங்கல் கண்ணன் அவர்கள்.

தொடர்ந்து ஆங்காங்கே சமூகம் குறித்தும், பெண்ணியம் குறித்தும்,  காதல், பக்திகுறித்தும் தன்னுடைய எண்ணங்களைப் பதிவு செய்யத் தவறவில்லை. 

நூலில் பல்வேறு கவிதைகளில் இயல்பாகவே சந்தம் மிளிர்கின்றது சில கவிதைகள் பாடல் வடிவிலேயே எழுதப்பட்டிருக்கிறது

"ஏர்முனையே பசி தீர்க்கும் 
பார் போற்றும் இயந்திரமே 
ஏர்முனையே இல்லையெனில் 
தீராது பட்டினியே" உழவுத் தொழிலே உலக உயிர்களை காக்கும் தலையாயத் தொழில் எனப் போற்றுவதோடு 

"உழை உழை 
உழைப்பில் சறுக்கல் வந்தாலும்
உழைப்பின் பின்னால் பார்க்காதே உழைப்பே உயர்வு நிச்சயமே" என உழைத்தும் பயனில்லாமல் கிடக்கும் உழைப்பாளர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாகப் பதிவு செய்திருப்பது அருமை.

"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
 பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
 எட்டுத்திக்கும் இன்று ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்..." எனும் பாரதியின் வைர வரிகளை "ஆளுகின்ற மங்கை என"  எனும் தலைப்பில் மிக அழகாகக் கவிதை வடித்துள்ளார்.

மாமதுரைக் கவிமன்றத்தின் தலைவர் கவிச்சித்தர் வீரபாண்டியத் தென்னவனாரின் நேரிய கொள்கையினை நெஞ்சில் தாங்கி, நூல் முழுமைக்கும் கிரந்த எழுத்து தவிர்க்கப்பட்டு எழுதியிருப்பது  மிகப் பாராட்டுவதற்குரியது. 

பிறமொழி கலவாமல் எழுத வேண்டும் என்ற என்று கொள்கையோடு கருங்கல் கி.கண்ணன் அவர்கள் தமிழ்த்தாய்க்குக் கோயில் அமைப்பதை தன் வாழ்நாள் குறிக்கோளாகவும் கொண்டு செயல்பட்டு வருகிறார். அன்னாரின் இலக்கும் கொள்கையும் வெல்க. தொடர்ந்து பல்வேறு எழுத்தாக்கங்களை மொழிக்குத் தந்து சிறக்க "தேனி வையைத் தமிழ்ச் சங்கம், வையைப் பதிப்பகம் சார்பில் வாழ்த்துகிறோம்.

"என் உயிர் தமிழுக்கே" நூலின் விலை உரூ 150. வாங்கிப் படித்துப் பயன் பெறுக...

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்.
வையைத் தமிழ்ச்சங்கம் & வையைப் பதிப்பகம், தேனி நாகலாபுரம்.

Wednesday, 3 January 2024

காதலாகி... கவிதை ச.ந.இளங்குமரன்

காதலாகி....

அவன்...

சித்திரமே செங்கரும்பே சித்தமதைத் தின்றவளே 
முத்துமணி ரத்தினமே முத்தத்தால் வென்றவளே 
தத்தையென நித்தநித்தம் தந்திட்ட  முத்தமெலாம் 
மொத்தமாய் தந்திடுவேன் வா!

அவள்...

கண்ணங் கருப்பழகா கட்டிவெல்லப் பேச்சழகா
எண்ணம் நிறைந்தவனே என்னுயிராய் ஆனவனே
எண்ணிக்கை இல்லாமால் ஏந்திழைநான் தந்ததெல்லாம்
என்னுயிரே உன்றனுக்கே தான்!

அவன்...

கூடிக் குலவிடுவோம் கொஞ்சுமொழி பேசிடுவோம்
சோடிப் புறவெனவே சொர்க்கவாழ்வு வாழ்ந்திடுவோம்
பாடிப் பறந்திடுவோம் பாரில் உலவிடுவோம்
வாடி வசந்தம்நீ வா!

அவள்

உலவும் நிலவுக்கோ உற்றவளாம் அல்லி
மலர்ந்திடும் தாமரைக்கோ மன்னவனாம் சூரியன் 
நிலவும் கதிரும் எனக்குநீ அத்தான்
பொழுதெல்லாம் நானுனக்குப் பொன்!

ச.ந.இளங்குமரன் 
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.

கலைஞர் பட்டிமனறம் போடி பொறியியல் கல்லூரி

தேனிமாவட்டத் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில்,  போடி அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழிச் சட்டவாரவிழாவில் "கலைஞரின் புகழுக்குக் காரணம் இலக்கியப்பணியா? சமூகப்பணியா? எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள் நடுவராக இருந்து வழிநடத்தினார்.

இலக்கியப்பணியே என முனைவர் பத்மினிபாலா, கிஷோர், அனுப்பிரியா, சமூகப்பணியே எனும் தலைப்பில் ஆ.முத்துக்குமார், காளீஸ்வரி, யுவனேஸ்வர் ஆகிய  ஆறு பேருடைய பேச்சும் மிக அருமை. குறிப்பாக மாணவ மாணவிகள் தங்களது தலைப்புகளில் முழுமையாகத் தேடலை மேற்கொண்டு நிறைந்த செய்திகளைப் பல்வேறு பட்டிமன்றங்களில் பேசிய புகழ்மிக்க பேச்சளர்களைப் போல மிக அருமையாகப் பேசி அரங்கத்தை அதிர வைத்தனர். 

இந்த நிகழ்வினுக்குத் தலைமை ஏற்று உரைவழங்கி பேச்சாளர்கள் பேசி முடிக்கும் வரை கல்லூரி முதல்வர் அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது அனைவருக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது. 

மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் பார்வையாளர்களாக அமர்ந்து எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் கைதட்டி ஆரவாரம் செய்து அத்தனை பேச்சாளர்களையும் ஊக்கப்படுத்தினர். தமிழ் வளர்ச்சித்துறை உதவி அலுவலர் புருசோத்தமன். உதவியாளர் மஞ்சுளா, ஓட்டுநர் கண்ணன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகக் களப்பணியாற்றினர். 

 இச்சிறப்புகளுக்கெல்லாம் காரணமான தேனிமாவட்டத் தமிழ்வளர்ச்சிதுறையின் உதவி இயக்குநர் பெ.இளங்கோ ஐயா அவர்களுக்கும், கல்லூரி நிருவாகத்திற்கும் அனைவர் சார்பிலும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.