இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 4 February 2024

செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார்

04-02-2024

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் 94 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா.
உலகத் தமிழ்நெறிக் கழகம் - திருக்குறள் உலகம் கல்விச்சாலை இணைந்து நடத்தும்  திருக்குறள் முத்தமிழ் பரிசளிப்பு விழா கோவை சன்மார்க்க சங்க அரங்கில் நடைபெற்றது. உலகத் தமிழ்நெறிக் கழகச் செயலாளர் சிவலிங்கம் அவர்கள் வர்வேற்க, முனைவர் நாகரத்தினம் தலைமையில் "திருக்குறளும், செந்தமிழ் அந்தணர் இளங்குமரனாரும்" எனும் தலைப்பில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் புலவர்ச.ந.இளங்குமரன் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார். 

நிகழ்வின் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையே இயல் இசை நாடகம் தொடர்பாக முத்தமிழ்ப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர் அனைவருக்கும் பரிசுத்தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. சுமர் 150 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும்,  ஆசிரியர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் என 250 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களது திருவுருவப்படத்தையும், திருவள்ளுவர் படிமத்தையும் மாணவ மாணவிகள் திறந்து வைத்து மலர்தூவி வழிபாடு நடத்தினர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி திருக்குறள் முனைவர் அன்வர் பாட்சா, கவிஞர் வள்ளியப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணிக்கவாசகம் உலகத் தமிழ்நெறிக் கழகத்தின் அறிக்கையைப் படிக்க இருகூர் ஆறுமுகம், சக்திமதி ஆகியோர் நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினர்.

திருக்குறள் ஆய்வாளர் கணேசன் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நன்றியுரை வழங்கினார்.

கோவை தமிழ்ச் சங்கத்திலிருந்து மானூர் புகழேந்தி ஐயா அவர்கள், சோதிமைய அறக்கட்டளையின் சார்பில் முனைவர் இராதாகிருட்டிணன்,  உலகத் தமிழ்க்கூடல் சார்பில் மகாலிங்கம்  ஆகியோர் சிறப்பு விருந்திருந்தினருக்கு நூலாடை அணிவித்துச் சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment