இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 3 January 2024

கலைஞர் பட்டிமனறம் போடி பொறியியல் கல்லூரி

தேனிமாவட்டத் தமிழ்வளர்ச்சித்துறை சார்பில்,  போடி அரசுப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் ஆட்சிமொழிச் சட்டவாரவிழாவில் "கலைஞரின் புகழுக்குக் காரணம் இலக்கியப்பணியா? சமூகப்பணியா? எனும் தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்திற்கு புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள் நடுவராக இருந்து வழிநடத்தினார்.

இலக்கியப்பணியே என முனைவர் பத்மினிபாலா, கிஷோர், அனுப்பிரியா, சமூகப்பணியே எனும் தலைப்பில் ஆ.முத்துக்குமார், காளீஸ்வரி, யுவனேஸ்வர் ஆகிய  ஆறு பேருடைய பேச்சும் மிக அருமை. குறிப்பாக மாணவ மாணவிகள் தங்களது தலைப்புகளில் முழுமையாகத் தேடலை மேற்கொண்டு நிறைந்த செய்திகளைப் பல்வேறு பட்டிமன்றங்களில் பேசிய புகழ்மிக்க பேச்சளர்களைப் போல மிக அருமையாகப் பேசி அரங்கத்தை அதிர வைத்தனர். 

இந்த நிகழ்வினுக்குத் தலைமை ஏற்று உரைவழங்கி பேச்சாளர்கள் பேசி முடிக்கும் வரை கல்லூரி முதல்வர் அவர்கள் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தது அனைவருக்கும் உற்சாகத்தைக் கொடுத்தது. 

மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் பார்வையாளர்களாக அமர்ந்து எந்த ஒரு சலசலப்பும் இல்லாமல் கைதட்டி ஆரவாரம் செய்து அத்தனை பேச்சாளர்களையும் ஊக்கப்படுத்தினர். தமிழ் வளர்ச்சித்துறை உதவி அலுவலர் புருசோத்தமன். உதவியாளர் மஞ்சுளா, ஓட்டுநர் கண்ணன் உள்ளிட்ட அனைவரும் சிறப்பாகக் களப்பணியாற்றினர். 

 இச்சிறப்புகளுக்கெல்லாம் காரணமான தேனிமாவட்டத் தமிழ்வளர்ச்சிதுறையின் உதவி இயக்குநர் பெ.இளங்கோ ஐயா அவர்களுக்கும், கல்லூரி நிருவாகத்திற்கும் அனைவர் சார்பிலும் நன்றியை உரித்தாக்குகிறோம்.

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

No comments:

Post a Comment