இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 27 December 2021

திருக்குறள் சொல்போட்டி

மாநில அளவிலான திருக்குறள் சொல் போட்டி....

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ் கூடல்" சார்பில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தேனி, கோவில்பட்டி, இராசபாளையம், ஒட்டன்சத்திரம், கோவை சென்னை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிகாரத்தின் பெயர் சொல்லி திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறளின் முதல் அல்லது கடைசி வார்த்தையை சொல்லி அதற்குரிய குறளைச் சொல்வது, வரிசை எண்ணைக் கூறி அதற்கான திருக்குறளை ஒப்புவித்தல் என பல வடிவங்களில் 6 சுற்றுகளாக போட்டி நடந்தது. போட்டியில் இராசபாளையத்தை சேர்ந்த பாலகுமாரா, தேனி மாவட்டம் போடியை சேர்ந்த அபிநயா, கோவையைச் சேர்ந்த தேஜஸ் ஸ்ரீராம் ஆகியோர் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர். மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியினை கவிஞர் லட்சுமி குமரேசன் கவிஞர் செல்வராணி ஆகியோர் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். புலவர் ச.ந.இளங்குமரன், தமிழ்ச்செம்மல் முத்துமணி,  புலவர் இராசேந்திரனார் ஆகியோர் நிகழ்ச்சி அமைப்பாளராக பணியாற்றினர். நிகழ்வின் முதல் மூன்று பரிசினை எழுத்தாளர் முத்துக்கிருட்டிணன், புலவர் இராசேந்திரனார் ஆகியோர் இணைந்து வழங்கினர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசினை செந்தமிழ் தேனீ ஜெயராமனார் வழங்கிச் சிறப்பித்தார்.  நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வினை வையைத் தமிழ்ச்சங்க நிறுவனரும், உலகத்தமிழ்க் கூடல் அமைப்பாளருமான புலவர் இளங்குமரன் இணைய வழியில் ஒருங்கிணைத்துச் செயலபடுத்தினர். நிகழ்வு தேனி வையைத் தமிழ்ச்சங்கம் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.

முதல்இடம் பெற்றவர் - பாலகுமரா- இராசபாளையம் 
பரிசு உரூ 600 மற்றும் சான்றிதழ்

இரண்டாவது இடம்-  அபிநயா தேனி பரிசு 500/- மற்றும் சான்றிதழ்

மூன்றாவது இடம்-  தேஜஸ்ஸ்ரீராம்
கோவை உரூ -400 மற்றும் சான்றிதழ்

நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு / 100/- பெறுகிறார்கள்

பரிசு வழங்கியவர்கள்
 திரு . முத்துகிருட்டிணன் - 1000/-
புலவர் ராசேந்திரனார் - 500/-
செந்தமிழ்த்தேனீ - அனைவருக்கும் 100 ஊக்கப் பரிசு வழங்குகிறார்கள்.

அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்.

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன் நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி
அமைப்பாளர் 
உலகத் தமிழ்க்கூடல்

Sunday, 26 December 2021

சிறுகதை

நூல்:- சொர்க்கத்தில் சில காலங்கள்.
நூல்வகை :- சிறுகதை
நூலாசிரியர்:- காசி ஆறுமுகம் 
வெளியீடு:- பைந்தமிழ் இலக்கியப் பேரவை.
விலை :- 100.

 உலகப் பரப்பில் எல்லா நாடுகளிலும், எல்லா மக்களிடமும் வாய்மொழியாகவே காலங்காலமாகக் கதைகள் சொல்லப்பட்டு வந்திருப்பதை பல்வேறு ஆய்வாளர்களின் ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது.

மனிதகுல வரலாற்றில் நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே இனக்குழுக்களாக மக்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொள்வதற்காகவும், ஓய்வு நேரங்களில் சக மனிதர்களோடு உரையாடவும், குடும்ப உறுப்பினர்களோடு கொஞ்சிக் குலவி சிரித்து மகிழவுமான பொழுதுபோக்கு நிகழ்வே நாளடைவில் கதையாக வளர்ந்திருக்கிறது. தான் பார்த்த ஒன்றை, கேட்ட ஒன்றை, தான் பார்த்ததைப் போலவே, கேட்டதைப் போலவே பிறர் விரும்புமாறு காட்சிப்படுத்தி உரைப்பது கதையாகும்.

இன்றும் குழந்தைகளுக்கோ அல்லது இளைஞர்களுக்கோ கதை சொல்லத் தொடங்கும் போது "ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்..." என்று தொடங்குவது மரபாக இருந்து வருகிறது. கதைகளில் பொய்க்கதை, பழங்கதை புனைகதை, கட்டுக்கதை என பல வடிவங்கள் உள்ளன. தமிழ்நாட்டைப் பொருத்தவரை குழந்தைகளுக்கு கதை சொல்வது. "பாட்டி சொன்ன கதை" இன்றும் சிற்றூர்ப் புறத்தில் வழக்கில் இருந்துவருகிறது. தற்காலத்தில் சிறுகதை என்பது எழுத்துலக வரலாற்றில் பிரிக்க முடியாத ஒன்றாக, தவிர்க்க முடியாத ஒன்றாக வளர்ந்திருக்கிறது. அறிவியல் வளர்ச்சி மிக்க நாடு என்று சொல்லப்படுகின்ற அமெரிக்கா, பிரான்சு போன்ற நாடுகளில் கூட சிறுகதை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

அவ்வகையில் சிறுகதை என்பது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் தவிர்க்க முடியாத அங்கமாக இருந்து வருவதோடு, அவர்களது வாழ்வியல் விழுமியங்களை எதிரொளிக்கும் காலக் கண்ணாடியாகவும் மிளிர்கிறது. 

"சொர்க்கத்தில் சில காலங்கள்" என்னும் தலைப்பிலான இந்நூல் 12 சிறுகதைகளை உள்ளடக்கியது. முழுமைக்கும் நெல்லை மாவட்ட மக்களின், குறிப்பாக மண்மணம் மாறாத சிற்றூர்ப்புற மக்களின் வாழ்வியலைச் செம்மையாகப் பதிவு செய்திருக்கிறது. பெரும்பான்மையான சொற்கள் பேச்சு வழக்கில் உள்ளவைகளாக இருக்கின்றன. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழக்கில் இருந்த புழங்கு சொற்கள் இந்நூலில் ஒவ்வொரு கதையிலும் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. 

"சொர்க்கத்தில் சில காலங்கள்" இந்நூலின் ஆசிரியர் காசி ஆறுமுகம், இவர் பொறியாளர் படிப்பை நிறைவு செய்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர். கவிதை, சிறுகதை எழுதுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இவர் படிப்பவர் உள்ளம் கொள்ளுமறு சுவை குறையாமல் 12 சிறுகதைகளையும்  கொடுத்திருப்பது மிகவும் பாராட்டுதற்குறியது.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு சிற்றூர்ப் புறத்திலும் மருத்துவச்சிகள் இருந்தார்கள். அங்கு பேறு காலம் என்பது இயற்கையாகவே நடந்தது. அறுவை சிகிச்சை முறைகள் இல்லை. இப்படி  நூற்றுக்கணக்கான பிள்ளைகளுக்குப் பேறுகாலம் பார்த்த மருத்துவச்சிகள் வாழ்வு அவர் வாழும் காலத்திலேயே மதிக்கப்படவில்லை. 

ஆனால் இன்று அறிவியல் வளர்ச்சி அடைந்திருக்கிற இந்தக் காலகட்டத்தில் பேறு காலம் என்பது பெரும்பாலும் மருத்துவமனையில் தான் நடக்கிறது. பெரும்பான்மையான பேறுகாலம் அறுவை சிகிச்சையில் தான் நடக்கிறது. நமது சிற்றூர்ப் புறங்களில் மருத்துவச்சிகள் வாழ்ந்த பகுதிகளில் அவர்களைப் புரந்து, அவர்களிடம் இயற்கை மருத்துவ முறைகளைக் கற்றுக் கொள்ளாமலும், அதனை விட்டதன் விளைவாகவும், செயற்கை முறையிலான மேல்நாட்டு மருத்துவத்தைப் பின்பற்றியதன் விளைவாகம் நம் நாட்டு மக்கள் தாயையும் சேயையும் புதைகுழிக்குள் தள்ளி வருகின்றனர் என்ற நிலையை பல நூறு "பிள்ளைகளைப் பெற்றவள்" என்ற கதை மூலம் மிகத் தெளிவாக படம் பிடிக்கிறார் நூலாசிரியர்.

மனிதன் நாகரிக வளர்ச்சி அடைந்ததாகச் சொல்லப்படுகின்ற இன்றைய நிலையிலும், தன்னுடைய முதன்மையான வேட்டைத் தொழிலை விட்டபாடில்லை,  என்றாலும் தற்போது விலங்குகளை வேட்டையாடுவதைத் தாண்டி சக மனிதனை வேட்டையாடும் நிலைக்கு மனிதன் மாறி கிடக்கின்றான். இப்படியான சூழலில் வேட்டைத் தொழிலில் தான் செய்த வேலையால் தாயும் சேயும் துடிதுடித்துச் சாவதைத் தன் கண்முன்னால் கண்ட பின்பு நிறைமாதக் கர்ப்பிணியான தனது மனைவி நினைவுக்கு வர அன்று முதல் வேட்டையாடுகின்ற தொழிலை விட்டு விடுகின்றான் என்ற இரண்டாவது கதையின் மூலமாக "எவன் ஒருவன் பிற உயிர்களைத் தன் உயிர்போல் கருதுகின்றானோ, அப்போதே அவனுக்குள் மனிதம் விழித்துக் கொள்கிறது"  என்று பதிவு செய்வது சிறப்பு.

மனித வாழ்வியலில் பண்டைய விழுமியங்களை, கலை கலாச்சாரங்களைச் சேமித்து வைத்திருக்கின்ற கருவூலங்களாக ஒவ்வொரு குடும்பத்திலும் பெரியோர்கள் திகழ்கின்றனர்.  அவர்கள் சேமித்து வைத்திருந்த கருவூலங்களே எதிர்காலத் தலைமுறையினரைச் செப்பம் செய்திருக்கின்றன. அந்தக் கருத்துக் கருவூலங்களில் ஒன்றுதான் கதை. கதை கேட்டுக் கதை கேட்டு வளர்ந்த மக்கள் தான் அதிகம். அவர்களே வீரத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர் என்பது வரலாறு.

இன்றைக்கு எந்தக் குடும்பத்திலும் கதை சொல்லுகின்ற பாட்டிமார்கள் இல்லை. ஒரு குடும்பத்தில் ஒரு பெரியவரை நாம் இழக்கிறோம் என்றால், அந்தக் குடும்பத்தின் வரலாறான நூலகத்தை நாம் இழக்கிறோம் என்பது பொருள். இதனை மூன்றாவது கதையில் அருமையாகல் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.

"சமூகத்தில் சமையல் தொழில் செய்து பிழைப்பு நடத்தும் நல்ல நண்பர்களது வாழ்வியல்"
 "பீடி சுருட்டு என்ற தொழிலைச் செய்து வருகின்ற ஏழை குடும்பத்தில் பிறந்த பெண் பிள்ளைகளைப் பொறியாளர் நிலைக்கு உயர்த்துவதற்காக பெற்றோர்களது கடின உழைப்பு"
"ஊரெங்கும் ஓடி ஆடி விளையாடிய குழந்தைகள், மனித வாழ்வில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து பழகிய உறவு முறைகள், குடும்ப விழாக்கள் என அனைத்தையும் தொலைத்துவிட்டு கைப்பேசி, தொலைக்காட்சி போன்றவற்றில் தன்னை புதைத்துக் கொண்டு, தனக்குத் தானே தனிமையில் பேசிக் கொண்டிருக்கின்ற அவலநிலை"
மது என்னும் அரக்கன் பட்டிதொட்டியெல்லாம் புகுந்து மனித மனங்களை சீரழிப்பது தொடர்பாக"
ஊரெங்கும் உள்ள உறவு முறைகளில் யார் மனமும் நோகாமல், திருடு போன்ற சிறு சிறு தவறுகளையும் சரிசெய்ய அவர்கள் கடைப்பிடித்த நெறிமுறைகள் " 
காலந்தோறும் ஒவ்வொரு ஊர்களிலும் ஊறிக்கிடக்கும் நம்பிக்கைகள் "
அறிவியல் வளர்ச்சியில் தற்பொழுது காலத்தால் மறந்துபோன மழைக் கஞ்சி விழா, எடுத்த சமூகத்தில் மழையைத் தள்ளிப்போக பிள்ளைகள் பாடும் பாட்டு"
'ரெயின் ரெயின் கோ அவே'
" விரும்பியது கிடைக்கவில்லை என்றால் அது ஏக்கமாக மாறி அவனுக்கு காய்ச்சலை உண்டாக்கி விடும் என்ற சமூகத்தில் இருக்கின்ற நம்பிக்கைகள்"
"தொழிலைப் பெருக்குவதற்காக கையிருப்பு இல்லாத சூழலில் வட்டிக்கு வாங்கி வட்டி கட்ட முடியாமல் நின்ற அப்பாவிகளின் நிலை" "உழவர்களின் நண்பனான தேவாங்கு" என சமூகம் தொலைத்துச் சென்ற பலவற்றை மீட்டுருவாக்கம் செய்யும் முகமாக,  ஒவ்வொரு நிகழ்வுகளையும் அலசி ஆராய்ந்து மண் மனம் மாறாத மக்கள் மொழியில் பதிவு செய்திருக்கின்ற கவிஞர் சிறுகதை ஆசிரியர் காசி ஆறுமகம் அவர்களை பாராட்டுகிறோம்.  

இந்தச் சிறுகதைகள் நூலாக்கம் தொடர்பான பணிகளை முன்னெடுதிருக்கின்ற பைந்தமிழ் இலக்கியப் பேரவையின் தலைவர் பாசத்திற்குரிய மகன் அதிவீரபாண்டியன் அவர்களை வாழ்த்துகிறோம்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் - வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

Sunday, 5 December 2021

தேனீக்கள் அறக்கட்டளை விழா

தேனிக்கள் அறக்கட்டளை இரண்டாமாண்டு தொடக்கவிழா!

தேனீக்கள் அறக்கட்டளையின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில்  கூடியிருக்கின்ற அவையோர் அனைவருக்கும் தேனி வையைத் தமிழ்ச் சங்கத்து இளங்குமரனின் இனிய வணக்கம். 

தேனி மாவட்டத்தில் தொடர்ந்து தனித்தனியே இயங்கி கொண்டிருந்த மாற்றுத்திறனாளிகளின் அமைப்புகளை எல்லாம் ஒருங்கிணைத்து, தேனி மாவட்ட அளவிலான ஒரு மிகப்பெரும் எழுச்சியை உண்டாக்கி இருக்கின்ற தேனீக்கள் அறக்கட்டளை செயல் வீரர்களையும், ஜெயம் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கச் செயல் வீரர்களையும்,  வின்னர் ஸ்போர்ட்ஸ் குழுவினரையும் மிகுந்த மகிழ்வோடு நிறைந்து பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.

பொதுவாக உலக வரலாற்றில் பெரும்பான்மையான இடத்தில் தனக்கென தனி முத்திரையைப் பதித்து இருப்பவர்கள் மாற்றுத் திறனாளிகள் என்பதுதான் பேருண்மையாகு.  இது கடந்த காலமாக இருந்தாலும் சரி, தற்கால மாக இருந்தாலும் சரி எக்ககாலத்திற்கும் பொருந்தும்.

இந்த உலகத்தில் ஆயிரக்கணக்கான அறிவியல் கண்டுபிடிப்புகளை உலகுக்கு கொடுத்தவர்கள் மாற்றுத்திறனாளி களாகவே இருந்திருக்கின்றனர்.  இசை தொடர்பான நுணுக்கங்களை கொடுத்தவர்களும் மாற்றுத்திறனாளிகள். மேலும்  உலக நாடுகளை யெல்லாம் வென்று, ஒரு குடையின் கீழ் ஆள நினைத்து, போர் தொடங்கி பெரும் வெற்றியைப் பெற்ற பேரரசர்கள் பலரும் மாற்றுத்திறனாளிகள் என்பது மறுக்க முடியாத உண்மை.

தாமஸ் ஆல்வா எடிசன்,  கெலன் கெல்லர், பீதோவான், அலெக்சாண்டர், கிட்டலர் என பல வரலாற்று நாயகர்களைப் பற்றி விளக்கிச் சொன்ன்னால் நேரம் நீளும்  எனவேதான் மேலோட்டமாகவே சொல்லிச் செல்கிறேன். கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் என் உரையை நிறைவு செய்ய வேண்டும். நிறைவு செய்வேன்.

இன்றைய காலத்தில்  சக்கர வண்டியில் உட்கார்ந்து கொண்டு உலகின் பெரு வெடிப்புக் கொள்கை குறித்து பேசியவர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவர். அதைப்போல உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டிற்கு தங்கப்பதக்கம் தேடித்தந்த மாரியப்பன் மாற்றுத்திறனாளி. தற்பொழுது எனக்கு முன்பாக வெங்கட்பூபதி அய்யா அவர்கள் பேசினார். அவர்களுடைய அறக்கட்டளையில் இருந்து பயிற்சி பெற்று மாற்றுத் திறனாளிகளுக்கான கூடைப்பந்துப் போட் டியில் குறிப்பாக இந்திய அளவிலான போட்டிக்குத் துணை தளபதியாக இருந்தவர் நம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதை பெருமையோடு பகிர்கிறேன்.

இப்படி திறன் மிக்கவர்கள் பலரும் நமது தேனி மாவட்டத்தில் இருப்பது நமக்குப் பெருமை. நான் அறிந்தவரையில் அங்கங்கே சில போட்டிகள் நடைபெற்றது மாற்றுத் திறனாளிகளுக்காக. ஆனால் இன்றைக்கு பல அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மிகப்பெரிய அளவில் மாற்றுத்திறனாளிகளை கலந்து கொள்ளச் செய்து அவர்களுக்கான போட்டியை நடத்தி வென்றவர்களுக்கு மட்டுமல்ல, கலந்து கொண்டவர்களுக்கும் பரிசு வழங்கும் பெரும் முயற்சியை, பெரும் ஊக்கத்தை வழங்கி இருக்கின்ற தேனீக்கள் அறக்கட்டளை நண்பர்களையும் அதன் செயல் வீரர் களையும் மீண்டும் வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 
உலகப் பேராசான் சொல்வார் "

"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி"

என்று சொல்வார் உடலில் அக உறுப்புகளும், புற உறுப்புகளும் மிகச் சரியாக இருந்தும் பயனில்லை அக உறுப்பாகிய கண்ணுகுத் தெரியாத மனமென்னும்  உறுப்பும் மனத்தின் உள்ளுறுப்புகளான தன்னம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை சரியாக இருக்க வேண்டும். அப்படிச் சரியாக இருந்தால் மட்டுமே, இருப்பவர் மட்டுமே மட்டுமே இந்த உலகில் சாதனைகளை நிகழ்த்த முடியும். அந்தச் சாதனைகளை மாற்றுத் திறனாளிகள் மிகச் சரியாகச் செய்து வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் நமது உலகப்பேராசன் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாக இருக்கின்றனர் என்பதை இந்த இடத்தில் பதிவு செய்கிறேன். புற உறுப்புகளும், அக உறுப்புகளும் மிகச்சரியாக இருக்கின்ற எத்தனையோ மனிதர்கள் சாதிக்காத பலவற்றையும் மாற்றுத்திறனாளிகள் சாதித்து வருகின்றனர். 

சாதாரண மனிதர்களிடம்  புற உறுப்புகள் நன்றாக இருந்தாலும் கூட, மனத்தின் உள்ளுறுப்பான விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் ஊக்கமும் தொடர் பயிற்சியும் இல்லாத நிலை பலருக்கு இருக்கிறது. ஆனால் மாற்றுத்திறனாளிகள்  இவற்றைச் சரியாக இயக்குகின்றனர் அல்லது மாற்றுத்திறனாளிகளால் சரியாக இயக்கப்படுகிறது. அந்த இயக்கமே அவர்களுக்கான வெற்றியாக வளர்கிறது என்பது வரலாற்று நெடுகிலும் அறியக்கிடக்கின்ற உண்மையாகும்.

இன்றைக்கு தேனி மாவட்டத்தில் இருக்கின்ற மாற்றுத்திறனாளிகளை மாவட்ட அளவில் ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகள் நடத்தி அவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ள, அவர்களை  உலகம் அறிந்துகொள்ள ஊக்கப்படுத்தி வருகின்ற தேனீக்கள் அறக்கட்டளை தலைவர் பாண்டி, செயலர் அழகேசன், பொருளாளர் எமது அன்பு மகன் போட்டோ பாண்டி உளிட்ட அனைவரையு, மற்றும் தோழமை அமைப்பினரையும் பாராட்டுவதோடு, வாழ்த்துவதோடு இன்னொரு செய்தியையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.

அதாவது இன்று உலகப்பேராசன் திருவள்ளுவர் இயற்றிய 1330 குறட்பாக்களையும் 29 நிமிடங்களில் சொல்லி உலக சாதனை படைத்து இருக்கின்ற இரட்டையர்கள் முத்தமிழ்சாமினி, செந்தமிழ் சாலினி ஆகிய இருவரும் நம்மோடு இதே மேடையில் இருக்கிறார்கள். திருக்குறள் தொடர்பான உலகச் சாதனை வரலாற்றில் தேனி மாவட்டத்திற்கு ஒரு மிகப்பெரும் பெருமையைத் தேடித் தந்திருக்கின்ற இந்த குழந்தைகளை தேனீக்கள் அறக்கட்டளை பாராட்டுவது மகிழ்வுக்கும், போற்றுதலுக்கும் உரியதாகும்.

நமது இந்த விழாவுக்குத் தலைமை ஏற்று இருக்கின்ற கம்பம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மதிப்பிற்குரிய இராமகிருட்டினன் ஐயா அவர்கள் இந்த குழந்தைகளுக்கான அரசு நலத் திட்டங்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டுமாய் தேனீக்கள் அறக்கட்டளையின் சார்பாகவும்,  தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாகவும் வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

ஐயா கம்பம் இராமகிருட்டினன் அவர்களோடு ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு முன்னால் பல்வேறு அரசியல் காலங்களில் களப்பணிகள் செய்திருக்கிறேன். அன்று என் அரசியல் தலைவன் புரட்சிப்புயல் வைகோ அவர்களது அமைப்பில் ஒருவனாக.

தற்போது தொடர்ந்து இன்றைக்கு வையை தமிழ் சங்கத்தின் நிறுவனராக இந்த மேடையில் பேசுவதை பெருமையாகக் கருதுகிறேன். அருமையான விழாவினை ஒருங்கிணைத்து சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கு. தேனீக்கள் அறக்கட்டளை உள்ளிட்ட அனைத்துத்  தோழமைகளுக்கும்  தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நன்றி கூறி எனது வாழ்த்துரையினை நிறைவு செய்கிறேன்.  நன்றி

வாழ்க வள்ளுவம்! வாழ்க வையகம். 
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன், நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி.

Monday, 15 November 2021

தம்ழகப் பெருவிழா

வையைத் தமிழ்ச்சங்கமும் உலகத் தமிழ்க்கழகமும் இணைந்து நடத்திய நவம்பர் - 1  "தமிழகப் பெருவிழா" 

தமிழறிஞர் உலகத் தமிழ்க்கழகத்தின் மேனாள் தலைவர் அரணமுறுவல் அவர்களது நினைவேந்தல் என இரண்டு நிகழ்வினையும் மொழிஞாயிறு பாவாணர் அவர்கள் தொடங்கிய "முதமொழி" நூலில் வெளியிட்ட ஆசிரியர், பொறுப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும்  நன்றி

இனிய அன்புடன் 
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Saturday, 30 October 2021

தேவர் சமயம் சன்மார்க்கம்

தேவர் சமயம் சன்மார்க்கம்...!

ஈரத் துறவி வள்ளல் பெருமான்!
வீரத் துறவி விவேகா நந்தர்!
இரண்டும் ஒன்றாய் இணைந்த உருவம் !
இறவாப் புகழுடன் வாழும் தெய்வம் !

திருக்குறள் தன்னில் தோய்ந்தவர் தேவர் !
அருட்பா வாழ்வு வாழ்ந்தவர் தேவர்!
கருப்படு பொருளை உருப்பெற வைக்கும் 
அறநெறி அண்ணல் பசும்பொன் தேவர்!

வள்ளல் பெருமான் வழியில் நின்ற
வெள்ளுடை வேந்தர் தேவர் பெருமான் !
உள்ளம் அனிச்ச மலரினும் மெல்லிது !
வள்ளல் தன்மையோ வானினும் உயர்ந்தது!

காவி உடையினை விரும்பிய தில்லை !
காவிக் கொள்கையை ஏற்றவர் இல்லை !
நாவலந் தீவினைத் தாண்டிய மதத்தையும் !
நாவால் பழித்து நயந்தவர் இல்லை !

அறச்செயல் அற்ற அரசியல் வாதிகள் !
திறம்படத் திரித்த பொய்களி னாலே !
அரசியல் களத்தில் சூழ்ச்சிகள் அறியா !
அறச்செயல் மறவர் பழிகளைச் சுமந்தார் !

தேவரை மதத்தில் அடைப்பது தவறு !
தேவரைச் சாதியில் அடைப்பதும் தவறு !
தேவர் நமது தேசியத் தலைவர்!
தேவர் மக்கள் அனைவருக்கும் பொதுவர் !

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி

Sunday, 17 October 2021

கார் நாற்பது (முலமும் உரையும். பாடல் எண் 8, 9) ச.ந.இளங்குமரன்

கார் நாற்பது (மூலமும் உரையும்) 

8) மண்ணியன் ஞாலத்து மன்னும் புகழ்வேண்டிப் பெண்ணிய  னல்லாய் பிரிந்தார் வரல்கூறும் கண்ணிய லஞ்சனந் தோய்ந்தபோற் காயாவும் நுண்ணரும் பூழ்த்த புறவு.

அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு  என பெண்ணுக்கே உரிய இயல்பான குணங்கள் நன்கு அமையப் பெற்ற நல்லாய், மண்ணாலான இந்த உலகத்தில், நிலையான புகழை விரும்பிப் பிரிந்து சென்ற நமது தலைவர்,  மீண்டு வருவதைக் கண்ணிற்கு இயற்றப் பட்ட மையைப்  (கண்மை) பூசியிருப்பது போல் காயாஞ் செடிகளும், நுண்ணிய அரும்புகளும் மலரப் பெற்ற காடுகள்  கூறுகின்றன.

9) கருவிளை கண்மலர்போற் பூத்தன கார்க்கேற் றெரிவனப் புற்றன தோன்றி - வரிவளை முன்கை யிறப்பத் துறந்தார் வரல்கூறும் இன்சொற் பலவு முரைத்து.

கருவிளம் பூக்கள் கண்மலர் போலப் பூத்தன.  கார்ப்பருவத்திற்குரிய  தீயினது நிறமுடைய சிவந்த தோன்றிப் பூக்கள் பூத்து வனத்தை அழகு செய்தன. இவை எதனைச் சொல்கிறதென்றால், வரியை உடைய வளையல்கள் முன்னங் கைகளிலிருந்து கழல  மனத்திற்கு இதமான இனிய சொற்கள் பலவும் சொல்லி, நம்மைப் பிரிந்து சென்ற தலைவர், வருவதைச் சொல்கின்றன.

உரை : 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

கார் நாற்பது மூலமும் உரையும் ச.ந.இளங்குமரன்

கார் நாற்பது 
(மூலமும் உரையும்)

6) தொடியிட வாற்றா தொலைந்ததோள் நோக்கி
வடுவிடைப் போழ்ந்தகன்ற கண்ணாய் வருந்தல்
கடிதிடி வான முரறு நெடுவிடைச்
சென்றாரை நீடன்மி னென்று.

பொருள் : மா வடுவின் நடுவே பிளந்தாற் போன்ற அகன்ற கண்களை உடையவளே, நெடிய வழியில் பொருள் தேடிச் சென்றிருக்கும் நம் தலைவரை இனியும் காலம் தாழ்த்தாமல் விரைந்து செல்க என  வலியுறுத்தி, கடுமையாய் வானம் இடித்து முழங்கி அறிவித்திருக்கிறது. ஆதலால் தலைவனின் பிரிவால் வளையலிட ஆற்றாத உன் மெலிந்த தோள்களைப் பார்த்து  வருந்துதல் வேண்டாம்.

7) நச்சியார்க் கீதலும் நண்ணார்த் தெறுதலுந் 
தற்செய்வான் சென்றார்த் தரூஉந் தளிரியலாய்
பொச்சாப் பிலாத புகழ்வேள்வித் தீப்போல 
எச்சாரு மின்னு மழை.

தளிர்போலும் இயல்புடையவளே, தம்மை விரும்பி வந்தவருக்குக் கொடுத்து உதவவும், தம்மை விரும்பாத பகைவரின் செருக்கை அழிக்கவும், தம்மை நிலைப்படுத்திக் கொள்ளவுமான பொருளின் தன்மையறிந்து, அவற்றைத் தேடிச் சென்றிருக்கும் நமது தலைவரை மறப்பில்லாத புகழை உடைய வேள்வித் தீயைப் போல, எல்லாப் பக்கமும் மின்னி வானமானது நம்மிடம் கொண்டுவரும்.

உரை : 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி

Friday, 15 October 2021

கார் நாற்பது மூலமும் உரையும் - பதினெண்கீழ்க்கணக்கு ச.ந.இளங்குமரன்

தோழி பருவங்காட்டி தலைமகளை வற்புறுத்தியது

4) ஆடு மகளிரின் மஞ்ஞை யணிகொளக்
காடும் கடுக்கை கவின்பெறப் பூத்தன
பாடு வண்டூதும் பருவம் பணைத்தோளி
வாடும் பசலை மருந்து.

கூத்தாடும் மகளிர் போல மயில்க அழகுபெற ஆடுகின்றன, காடுகள் அழகுபெறும் படியாக கொன்றை மலர்கள் பூத்துக் குலுங்கின. பாடும் வண்டுகள் மலர்களின் தாதுக்களை ஊதி மகிழ்ந்தன. ஆகவே மூங்கிலையொத்த தோள்களை உடையவளே இந்தக் கார்காலப் பருவமானது உன்னை வாட்டுகின்ற பசலை நோய்க்கு மருந்தாகும்.


5) இகழுநர் சொல்லஞ்சிச் சென்றார் வருதல்
பகழிபோ லுண்கண்ணாப் பொய்யன்மை யீண்டைப்
பவழஞ் சிதறி யவைபோலக் கோபந்
தவழுந் தகைய புறவு.

அம்புபோன்ற கூர்மையான கண்களை உடையவளே, பவழமானது சிதறிக் கிடப்பதுபோல் காடெங்கும் இந்திரகோபப் பூச்சிகள் பரந்து கிடக்கின்றன. தக்கார்க்கு ஈந்துவாழும் தகைசான்ற வாழ்வினுக்காய் பொருள் தேடிச் சென்ற நம் தலைவர் இக்காலத்தே வருவதாய்ச் சொல்லிச் சென்றது பொய்யல்ல மெய்.

உரை : 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Thursday, 14 October 2021

கார் நாற்பது (மூலமும் உரையும்) ச.ந.இளங்குமரன்

கார் நாற்பது
(மூலமும் உரையும்)

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தியது.

2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய் இன்னே வருவர் நமரென் றெழில்வான மின்னு மவர்தூ துரைத்து.

வளைந்த அழகிய காதணிகளை அணிந்தவளே, கதிரவனின் நிறைந்த செல்வமான வெப்பம் குறையும் படியாக, நெடிய காடானது மிகுந்த அரும்புகளை ஈன்று கார்காலத்தின் வளத்தை வெளிப்படுத்த, எழுச்சிமிக்க வானம் நமது தலைவர் இப்போதே வருவார் என்று  மின்னி தூதாக உரைத்தது.

3. வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற் றண்புறவி னாலி - புரள
உருமிடி வான மிழிய வெழுமே
நெருந லொருத்தி திறத்து.

வேனிற் பூவான வரிநிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாடும்படியாக காற்றானது உள்ளேபுக, நுண்ணிய இளமணலையுடைய குளிர்ந்த காட்டில் ஆலங்கட்டிகள் புரள, தலைவனை எண்ணித் தனித்திருக்கும் ஒருத்தி வருந்தும் படியாக வானமானது இடியிடித்து  மழையைப் பொழிந்தது.

உரை :- 
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி.

Wednesday, 29 September 2021

அந்தோணி ஐயா நினைவேந்தல் உரை - ச.ந.இளங்குமரன்

18-09-2021 திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை நடத்திய வாசிக்கலாம் வாங்க குழுவின் தலைவர் அந்தோணி ஐயா அவர்களது நினைவேந்தல் நிகழ்வில் எனது உரை...

வசிக்கலாம் வாங்க... இந்தக் குழு சரியாக நேரடியாகவும், இணைய வழியாகவும் நாற்பத்தி ஏழு நிகழ்வுகளை நடத்தியிருக்கிறது. சுமார் 900 நூல்கள் மதிப்பீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தக் குழு எப்படி உருவானது என்றால் அன்றொரு நாள் எனது படைப்புலகம் குறித்து தினமலர் அக்கம் பக்கம் நிகழ்வுக்காக நேர்காணல் எடுப்பதற்காக கார்த்திக் ஐயா என்னுடைய அலுவலகத்திற்கு வந்தார். எனது பணிக்கும், எனது படைப்புக்கும் சற்றும் தொடர்பு இல்லாததைப் புரிந்துகொண்ட அவர்களுக்கு அது வியப்பைத் தந்தது போலும். உடனே கார்த்திக் ஐயா அவர்களுக்கு என் மேல் என் பணி தொடர்பாக வியப்பும் உருவாகியிருக்கிறது. 

நேர்காணல் முடிந்ததும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது நூல் வாசிப்பு பற்றிக் கேட்டார். நூல் வாசிப்பு தொடர்பாக விமர்சனக் கூட்டம் நடத்தலாமே என்றும் சொன்னார். அதற்கு நான் "தங்களைப் போலவே எனக்கும் ஆசை இருக்கிறது ஐயா, ஆனால் இடமும் பொருளும் இல்லை. ஒரு இலக்கிய நிகழ்வு நடத்த சில ஆயிரம் ரூபாய்கள் செலவிட வேண்டிவரும். ஒவ்வொரு மாதமும் நிகழ்வுக்காக அரங்க வாடகை கொடுக்க வேண்டியது வரும். அதற்குரிய பொருளியல் நிலை நம்மிடம் இல்லை" என்று சொன்னேன். அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவர் இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் தொலைபேசியில் அழைத்தார். மாயா புத்தகக் கடை உரிமையாளர் அண்ணன் ஜெயதுரை அவர்கள் அவருடைய புத்தக நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளும் படியாக சொன்னார் என்றும், அது தொடர்பாக நாளை நாம் கூடிப் பேசலாம் என்றும் சொன்னார்.

அடுத்த நாள் இது குறித்து முடிவு செய்வதற்காக மாயா புத்தக நிலையத்திற்குச் சென்றேன். உரிமையாளர் ஜெயதுரை அண்ணன் அவர்கள் அன்போடு வரவேற்றார். பின்பு "உங்களுக்கு முன்னே ஒருவர் இங்கு வந்திருக்கிறார்" என்று ஒருவரை அடையாளம் காட்டினார். அவர் அந்தப் புத்தக கடைக்குள் சில புத்தகங்களைத் தேடிக் கொண்டிருந்தார். என்னை பார்த்தார், கும்பிட்டார் பின்பு பேசினார். அவர்தான் அந்தோணி ஐயா. இதுதான் எங்களின் முதல் சந்திப்பு. எப்படி அந்தோணி ஐயா அவர்களை திண்ணை மனித வள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் பாசமிகு செந்தில் ஐயா அவர்கள் கண்டெடுத்தார்களோ, அதைப் போலத்தான் நாங்களும் அந்தோணி ஐயா அவர்களைக் கண்டெடுத்தோம்.

மாயா புத்தக நிலையத்தில் எனது ஒருங்கிணைப்பில் சில மாதம் வாசிக்கலாம் வாங்க நிகழ்வு தொடர்ந்தது. அதன் பின்புதான் குழு கட்டமைக்கப்பட்டது. அக்கட்டமைப்பில் அந்தோணி ஐயா அவர்கள் தலைவராகவும், நந்தகோபால் ஐயா அவர்கள் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுமார் 22 நிகழ்வுகளுக்கு ஜெயதுரை அண்ணன் அவர்கள் தன்னுடைய இடத்தைக் கொடுத்தும், நூல்கள் பரிசாகக் கொடுத்தும் தேநீர் கொடுத்தும், உதவி செய்தார். வாசிக்கலாம் வாங்க நாற்பத்தி ஏழு நிகழ்வுகளை நடத்தி இருக்கிறது என்றால் அதற்கு அடி வேராக இருந்த அன்றைய தினமலர் செய்தியாளர், இன்றைய விகடன் மாவட்டச் செய்தியாளர் கார்த்திக் ஐயா அவர்களையும், மாயா புத்தக நிலைய உரிமையாளர் அண்ணன் ஜெயதுரை அவர்களையும் விட்டுவிட்டு நான் கடந்து சென்றுவிட முடியாது. அவ்வாறு நான் கடந்து சென்றால் நன்றி கொன்றவன் ஆகிவிடுவேன்.

அந்தோணி ஐயா அவர்களைத் தலைவராகப் பெற்றது பெரும் பாக்கியம் தான். ஏனென்றால் நிகழ்வு தொடர்பாக முழுமையான உரிமை எனக்குக் கொடுத்திருந்தார். அதனால்தான் என்னால் சுதந்திரமாக இயங்க முடிந்தது தொடர்ந்து அமைப்பைக் கொண்டு செலுத்த முடிந்தது.

தமிழன்னைக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என்பது தொடர்பாக கருங்கல்லிருந்து ஐயா பாவலர் கண்ணன் அவர்கள் தேனிக்கு வந்திருந்தார்கள். நிகழ்வினை கவிஞர் அனுராஜ் அண்ணன் அவர்கள் ஒருங்கிணைத்தார். இது விஜய் நிவாசு விடுதிகளில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் என்னோடு அந்தோணி ஐயா அவர்களும், அண்ணன் தங்கப்பாண்டி, ஜெயபாண்டி ஆகியோர் கலந்து கொண்டார்கள். தமிழனை தமிழ்ச்சங்கம் தமிழ்நாட்டில் இருக்கின்ற தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்தல் தொடர்பான கூட்டம் அது. அந்த வகையில் அந்தோணி ஐயா அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். "இலக்கிய நிகழ்வுகளில் நான் கலந்து கொண்டதில்லை. இப்பொழுது நான் கலந்து கொள்வதற்கு இளங்குமரன் ஐயா தான் காரணம். இவரே எனக்கு நல்ல வழிகாட்டி. இவருடைய நட்பு மட்டும் எனக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கிடைத்திருந்தால் நான் பெரும் பாக்கியம் உடையவனாக இருந்திருப்பேன்" என்று அவர் பேசியது என்னை நெகிழ வைத்தது.

ஐயா அவர்கள் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுபவர் இல்லை. அவர் உள்ளத்தில் என்ன எண்ணினாரோ அதை அப்படியே பேசுவார். சில நேரங்களில் சட்டென்று கோபப்பட்டும் விடுவார். அந்தோணி ஐயாவிடம் நான் பேசும்போதே அவர் என்னிடம் அதிகமாக பகிர்ந்து கொண்டது இருவர். ஒருவர் பாஸ்கர் சக்தி, இன்னொருவர் திண்ணை செந்தில்குமார்.

செந்தில் ஐயா அவர்கள் பேசும்பொழுது சாளரம் திட்டம் பற்றியும் பேசினார்கள். அந்த சாளரம் திட்டம் தொடர்பாக செந்தில் ஐயா அவர்களோடு கைகோர்த்து அதற்கான தொகையைச் சேர்ப்பதற்காக பல இடங்களுக்குச் சென்று வந்திருக்கிறார். அதன் விளைவாகச் சொன்னார் "நான்குபேர் நன்றாக இருக்க வேண்டும் என்றால் நான் ஒருவன் பிச்சை எடுப்பதில் தவறில்லை" என்று சொன்னார்.

பின்பு கதை எழுதுவதில் ஆர்வம் காட்டினார். கவிதை எழுதுவதிலும் ஆர்வம் காட்டினார். ஒவ்வொரு முறையும் அவர் ஒரு சிறிய குறிப்பேட்டில் எழுதி அதனை சரி பார்க்கும்படி என்னிடம் கொடுப்பார்.

அது தொடர்பாக எனது தமிழ்ச் சங்க அலுவலகத்தில் பலமுறை சந்தித்துப் பேசி இருக்கிறார். தொடர்ந்து வையைத் தமிழ் சங்கம் நடத்திய கவியரங்கத்தில் கலந்துகொண்டு கவிதை வாசித்தார். அதன் தொடர்ச்சியாக மரபில் கவிதை எழுத வேண்டும் என்று விரும்பினார். எனவே நான் நடத்தி வந்த மரபு பயிலரங்கம் தொடர்பான புலனத்தில் ஐயாவை இணைத்து விட்டேன். அவர் குறள் வெண்பாவும், நேரிசை வெண்பாவும் எழுதக் கற்றுக் கொண்டார். ஒவ்வொரு முறையும் எழுதிய பின்பு அது சரியாக இருக்கிறதா? இலக்கண விதியின்படி சரியாக இருக்கிறதா என்று சரி பார்க்கச் சொல்லுவார். 

ஐயா அவர்களிடம் எனக்கு பிடித்த இன்னொன்று அவருடைய அகவைக்கு தக்கவர்களோடு பேசும்போது அந்த உயர்விலும், அதேநேரத்தில் இளைஞர்களோடு பேசும் போது அவர்களுடைய வயதுக்கு இறங்கி வந்தும் பேசுவது அந்தோணி ஐயாவின் இயல்பாக இருந்தது. அது அவருக்கே உரிய சிறப்புகளில் ஒன்றாகவும் இருந்தது. 

ஐயா அவர்கள் 92 நாட்களில் 92 நூல்களை வாசித்து மதிப்புரை பதிவு செய்து இருந்தார்கள் என்று செந்தில் ஐயா தனது குறிப்பில் சொன்னார்கள். இன்னொன்று அந்தோணி ஐயா அவர்களுடைய பெயரால் படைப்பாளர்களுக்கு நினைவு விருது ஏற்பாடு செய்து வழங்குவது தொடர்பாக உள்ளபடியே செந்தில் ஐயா அவர்களை பாராட்டுகிறேன். அதிலும் அந்தோணி ஐயா அவர்களால் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அவர் பெயராலேயே விருது வழங்குவது நெகிழ்சசியைத் தருகிறது. வாழ்ந்த காலத்திலேயே அந்த மனிதருக்கு வரலாற்று நிகழ்வை ஏற்படுத்தியிருக்கிறார். இதனை செந்தில் ஐயா அவர்கள் செய்யவில்லை என்றால் வேறு யாரும் செய்வது கடினம்தான். அதற்காக ஒத்துழைத்தை திண்ணை மன்தவள மேம்பாட்டுக் குழுமத்தை வாழ்த்துகிறேன். இச்செயலின் மூலமாக வரலாற்றில் அந்தோணி ஐயாவை நிலை நிறுத்தியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

அந்தோணி ஐயா அவர்கள் பதிவு செய்த 100 நாட்களில் 100 நூல்களின் மதிப்புரைகளைத் தொகுத்து வைத்துள்ளேன். அவற்றை விரைந்து நூலாக்கம் செய்ய வேண்டும் என்று செந்தில் ஐயாவும் வேண்டுகோள் விடுத்தார். அந்த நூலின் பக்கம் என்பது 486 பக்கங்கள், தற்பொழுது ஏற்பட்ட ஊரடங்கால் தொழில் முடக்கம் காரணமாக, பொருள் முடக்கம் காரணமாக இந்த நூல் வருவதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆகும். ஆனால் வரலாற்றில் அவர் பெயர் நிலைக்கும் படியாக அவரது மதிப்புரைகள் அடங்கிய நூல் இருக்கும், அதனை விரைவில் வெளிக்கொணர்வேன் என்று கூறி ஐயாவின் பெயரால் விருது பெற்றவர்களுக்கு வாழ்த்தினையும், விருதாளர்களை அறிமுகப் படுத்திய ஆளுமைகளுக்குப் பாராட்டுகளையும், திண்ணை மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் ஐயா உள்ளிட்ட தோழமைகளுக்கு நன்றியும் கூறி அமைகிறேன்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
நிறுவனர்-வையைத் தமிழ்ச்சங்கம், தேனி மற்றும வாசிக்கலாம் வாங்க... தேனி.

(நன்றி - ஒளிப்படம் அன்பு மகன் தேனி பாண்டி)

Monday, 27 September 2021

திருக்குறள் திருமணம் - இளங்குமரன்

https://tamil.news18.com/news/local-news/theni/theni-marriage-happened-through-thirukkural-in-theni-skd-570979.html

யார் இந்த இளங்குமரன்

நன்றி...
சுதர்சன் செய்தியாளர்
அழகேசன் புதிய செய்தி

Tuesday, 14 September 2021

நம் அண்ணா (கவிதை) ச.ந.இளங்குமரன்

தமிழ்நாட்டு அரசியலில்
தவிர்க்க முடியாத
பேரதிசயம்
அண்ணா!

இலக்கியத்தில்
நிலையாமையை
உணர்த்தும் திணை
காஞ்சி!

அண்ணா உன்
பிறப்பால் 
நிலைத்துப் 
புகழ்பெற்றது
காஞ்சி!

முந்தைய காலத்தின்
தொடர்ச்சி!
பிந்தைய காலத்தின்
பெரும் புரட்சி
அண்ணாவின் ஆட்சி!

மண்ணுக்கும் 
பெண்ணுக்கும்
பொன்னுக்கும் 
போர்செய்த 
வரலாற்றைப்
புறம்தள்ளி
பேசும் மொழிக்காக
அரசியல் களம்
கண்ட அறிஞர்
அண்ணா!

தமிழ் தமிழரென்ற
பேசுபொருளுக்குச்
சொந்தக்காரர்!

இந்தியின் ஆதிக்கத்தை
இல்லாது ஒழிக்க
இருமொழிக் 
கொள்கையை
ஏந்திய ஏந்தல்!

தமிழ்நாடு பெயர்தந்தாய்!
தமிழ் வாழப் பணிசெய்தாய்!
தமிழர் திருமணங்கள்
தழைக்கச் செய்தாய்!

எழுத்தில் புதுநடை!
பேச்சில் புரட்சி!
நாடகத்தில் 
பகுத்தறிவு!
மக்களுக்குச் சமூகநீதி!
சாதியத்திற்குச் சவுக்கடி!
மூடத்த தனங்களுக்கு
முற்றுப்புள்ளி!

அண்ணலே
உன் பிறந்தநாளில்
பெருமிதம் கொள்கிறோம்!

ச.ந.இளங்குமரன்.

Sunday, 12 September 2021

காதல்... விதை... - ச.ந.இளங்குமரன்.

காதல் விதை...

விழியால்
விருந்து
வைக்கும்
வியத்தகு
பூக்களின்
தேவதை!

மெளன 
மொழியால்
மனத்தை
மயக்கும்
மன்மத
மதுக்கிண்ணம்!

நீலவான்
ஆடைக்குள்
ஒளிந்து
முகம்காட்டும்
முழுநிலா!

கொஞ்சலில்
மிஞ்சலில்
கோபத்தில்
சினுங்களில்
அவளொரு கவிதை!

என் காதல்
கவிதைகளுக்கு
அவளே
உயிரான விதை!

ச.ந.இளங்குமரன்

Friday, 10 September 2021

குறள்நெறித் தமிழ்த் திருமணம் - புலவர் ச.ந.இளங்குமரன்

10-09-2021 இன்று சங்கரன் கோவிலில் இ.மகேந்திரன் - இரா.கவிதா இணையருக்கு குறள் நெறியில் திருமணம் நிகழ்த்தி வைத்தேன். நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.பசும்பொன், தமிழாசிரியர் மகேந்திரன், ஆகியோர் வாழ்த்துரைக்க, நாம்தமிழர் கட்சியின் தங்கவேலு அவர்கள் நன்றி சொல்ல சங்கரன் கோவில் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் பட்டிமன்றப் பேச்சாளர் முனைவர் சங்கர்ராம் அவர்கள் விழா ஏற்பாட்டைச் சிறப்பாகச் செய்திருந்தார். அனைவரது சிறப்பான ஒத்துழைப்போடு திருமணம் நடந்தது. திருமண நிறைவில் இளைஞர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திருமண விழா மிகவும் சிறப்புடையது. பரவலாக்கப்பட வேண்டியது என்று சொல்லி இளைஞர்கள் பலரும் நாங்கள் பலரும் பல உங்களுக்குத் துணையாக நிற்போம் என்று ஊக்கம் கொடுத்தது நெகிழ்வாக இருந்தது. இந்த நல்லதொரு விழவிற்கு இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்த உலகத் தமிழ்க் கழகத் தலைவர் ஐயா நிலவழகனாருக்கும், சங்கரன் கோவிலில் இறங்கியதுமுதல் கூடவே இருந்து உணவளித்து தமிழர்கள் விருந்தோம்பல் பண்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சங்கர்ராம் ஐயா, அவர்களது துணைவியார் உள்ளிட்ட குடும்பதார்க்கும் நன்றி சொல்லி மணமக்களுக்கு நான் எழ்திய திருக்குறள் உரையைப் பரிசாக வழங்கி மீண்டும் தேனிக்குப் பயணமானேன். பாவாணர் கோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்ற நினைவு நெஞ்சை வாட்டினாலும் உடல் நலக்குறைவால் மீண்டும் தேனிக்குத் திரும்பினேன்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

Thursday, 26 August 2021

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் - ச.ந.இளங்குமரன்


தேனி மாவட்டத்தில் வரலாற்றுக் காலத்தில் குழந்தைநகர் என்றும், தற்காலத்தில் பெரியகுளம் என்றும் போற்றப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர், அகமலையின் அடித்தளமாகவும் இருக்கின்றது.

பெரியகுளத்தை வளப்படுத்தும் வராக நதியின் தென்கரையில்   அமைந்திருக்கிறது அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில். 

இக்கோயில் சோழர்காலக் கட்டடக் கலைக்குச் சான்றாகவும்,  தேனிமாவட்டத்தின் பெரியகோயில் என்றும் பேசப்பட்டு வருகிறது. முழுமைக்கும் கற்களால் ஆன கோயில் இது. இக்கோயில் இராசேந்திர சோழனால் கட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது.

ஒரு காலத்தில்  சோழ நாட்டிற்கு உட்பட பகுதியாக பெரியகுளம் இருந்திருக்கிறது.  சோழ மன்னன் இராசேந்திர சோழன் என்பவன் ஆட்சி செய்து வந்தான், இராசேந்திரச் சோழன் ஒருமுறை பெரியகுளத்திற்கு அருகே உள்ள அகமலைக் காட்டுப்பகுதிக்குள் வேட்டையாடச் சென்றிருந்தான். வேட்டையின் போது அவன் எய்த அம்பு ஒன்று, குட்டிகளை ஈன்றிருந்த பன்றியின் மீது பட்டதல்  பன்றி இறந்து போனது. தன் தாயை இழந்த பன்றிக் குட்டிகள் பசியால் துடித்தன. பசிக்குப் பால் கிடைக்காமல் சத்தமிட்டன. 

பன்றிக் குட்டிகளின் கதறலைக் கண்ட மன்னன், ‘தாய்ப் பன்றியைக் கொன்று, அதன் குட்டிகளுக்குப் பால் கிடைக்காமல் செய்து விட்டோமே’ என்று மனம் வருந்தினான்.

இந்தச் சூழலில்  அந்தப் பன்றிக் குட்டிகளின் மேல் இரக்கம் கொண்ட குன்றக் கடவுள் குமரன் அவ்விடத்தில் தோன்றி, பன்றிக்குட்டிகளின்  பசியைப் போக்கினார். குட்டிகளின் மேல் பரிவு கொண்ட குமரக் கடவுளின் கருணையைக் கண்ட மன்னன், தாய்ப் பன்றியைக் கொன்ற தனது பாவத்தைப் போக்கவும், பன்றிகளுக்கு அருளிய முருகப்பெருமானின் பெருமையை மக்களுக்கு உணர்த்தவும், அகமலையின் கீழ் தரைப்பகுதியில் புதிய கோயில் ஒன்றைக் கட்டினார்.

அந்த ஆலயத்தில்  சிவபெருமான், மலைமகள் (பார்வதி) ஆகியோருடன் முருகப்பெருமானையும் சேர்த்து மூன்று தெய்வங்களை முதன்மையான தெய்வங்களாக்கி வழிபட்டான் என்று இக்கோயில் அமைக்கப்பட்ட தல வரலாறு சொல்கிறது.

அருணகிரிநாதர் தன்னுடைய திருப்புகழில் இக்கோயில் குறித்த சிறப்புனைப் பாடியுள்ளார். 

இராசேந்திர சோழனால் கட்டப்பட்ட இந்தக் க இக்கோயிலில், மூலவராக இறைவன் சிவபெருமான் வீற்றிருக்கிறார். அவரை ‘இராசேந்திர சோழீசுவரர்’ எனும் பெயரில் வழிபடுகிறார்கள். அம்பாள் ‘அறம் வளர்த்த நாயகி’ என்ற பெயரில் தனித கருவறையில் இருக்கிறார். மற்றொரு கருவறையில் முருகப்பெருமான் ஆறு முகங் களுடன் ‘பாலசுப்பிரமணியாக’ வள்ளி-தெய்வானை யுடன் சேர்ந்து அருள்காட்சி தருகிறார்.

இந்தக் கோவிலுக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் வராக நதியின் இரு கரையிலும், நேரெதிராகப் பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆண் மருத மரமும், பெண் மருத மரமும் இருக்கின்றன. காசிக்கு அடுத்ததாக இங்கு மட்டுமே இரண்டு மருத மரங்களுக்கு இடையில் நதி பயணிக்கிறது என்கின்றனர். எனவே, காசிக்குச் சென்று வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அனைத்தும், பெரியகுளம் முருகப் பெருமான் ஆலயத்திற்கு சென்று வழிபட்டாலும் கிடைக்கும் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

திருமணத்தடை உள்ளவர்கள், வராக நதியில் நீராடி, பின்னர் கோவிலுக்குச் சென்று, இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் அவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடைபெறும். இதே போல், குழந்தைப்பேறு வேண்டும் கணவன் - மனைவி இருவரும் இங்கு நீராடிவிட்டு, கோவிலுக்குச் சென்று வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும் என்பது பெரியகுளம் மக்களிடையே பேச்சு வழக்காக இருக்கிறது.

Thursday, 19 August 2021

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். தமிழ்நாடு முதல்வர்.

தமிழ்நாட்டுக் கோயில்களில் அனைத்துச் சாதியினரும் வழிபாடு நடத்தலாம் என்று ஆணை வழங்கிப் பணி நியமனமும் வழஙமிகிய தமிழ்நாட்டின் முதல்வர் அவர்களுக்கு நிறைந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்.

ழ்நாட்டில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோயில்கள்  ஆகம முறைப்படி கட்டப்பட்டு, ஆகம முறைப்படியே பூசைகள் நடத்தப்படுகின்றன; வேத முறைப்படியல்ல.
தமிழக அரசு அமைத்துள்ள பயிற்சி மையங்களில் ஆகம முறைகள், தமிழில் வழிபாடு ஆகியவற்றில் நன்கு பயின்று சான்றிதழ்கள் பெற்ற பிற்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்கள் 38 கோயில்களில் அர்ச்சகர்களாக நியமித்து ஆணை பிறப்பித்த தமிழ்நாட்டின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் மனமாரப் பாராட்டுகிறோம்.
திருநாவுக்கரசர், இராமானுசர் போன்றவர்கள் காலத்திலிருந்து வள்ளலார், பெரியார் காலம் வரை இறைவழிபாட்டில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் கூடாது என்பதையும், தமிழில் வழிபாடு நடத்தப்படவேண்டும் என்பதையும் வலியுறுத்தி வந்த கனவு இப்போது நனவாகியுள்ளது.  இது உள்ளபடியே பெருமையைத் தருகிறது. அதே நேரம் இச்செயல்பாட்டுக்கு எதிராக சாதிய ஆதிக்க மனோபாவம் கொண்டவர்கள் எதிர்ப்புக் கூச்சலிடுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

குறிப்பாக, சுப்ரமணிய சுவாமி போன்றவர்கள் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அரசின் முடிவு தவறானது என்றும், இந்த ஆணையை திரும்பப் பெறாவிட்டால் உரிய நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என தமிழக அரசை மிரட்டுவது வெட்கக் கேடானதாகும். 

2011ஆம் ஆண்டு இந்திய அரசு எடுத்த மக்கள் தொகைக் கணக்கீட்டின்படி 133கோடி மக்களில் சமற்கிருத மொழியை எழுத, படிக்கத் தெரிந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,821 மட்டுமே ஆகும். தமிழ்நாட்டில் இவர்களின் எண்ணிக்கை வெறும் 803 ஆகும். இவர்களில் ஆண்கள் 402பேரும், பெண்கள் 401பேரும் ஆவார்கள். அர்ச்சகர்களாக பெண்களை ஆதிக்க சாதியினர் அனுமதிப்பதில்லை. எனவே, தமிழ்நாட்டில் சமற்கிருதம் தெரிந்த அர்ச்சகர்களின் எண்ணிக்கை வெறும் 402 மட்டுமே ஆகும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள 32,000க்கும் மேற்பட்ட கோயில்களில் வடமொழியில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களில் மிகப்பெரும்பாலோருக்கு வடமொமொழி தெரியாது என்பதே அப்பட்டமான உண்மையாகும். அது இப்போது வெளிப்பட்டுள்ளது. 

சமற்கிருத மந்திரங்களைத் தமிழிலேயே எழுதி வைத்துக்கொண்டு தப்பும், தவறுமாக ஓதுகிற அர்ச்சகர்களே இங்கு அதிகம். எனவே, வடமொழியில் அர்ச்சனை செய்பவர்களுக்குத் தேர்வு நடத்தி, அந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும். தேர்வு பெறாதவர்களை நீக்கிவிட்டு அந்த இடங்களில் அரசு பயிற்சி மையங்களில் தமிழ் அர்ச்சனை செய்வதில் தேர்ச்சிப் பெற்றவர்களை உடனடியாக நியமிக்கும்படி முதல்வர் அவர்களை தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் வேண்டிக் கொள்கிறோம்.

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.

Wednesday, 18 August 2021

எல்லாப் புகழும் தமிழுக்கே - ச.ந.இளங்குமரன்

எல்லாப் புகழும் தமிழுக்கே...

தேவாரம் பகுதியைச் சேர்ந்த அறிவுச்செல்வம் ஜெயமணி இணையரின் செல்வக்குழந்தைகள்  சாலினி, சாமினி, ரோசினி ஆகிய 3 பேரும் இன்று திருக்குறளில் வலம் வருகின்றனர். 1330 குறட்பாக்களையும் சுமார் 1 - 30 மணி நேரத்தில் சொல்லி சாதனை படைத்து வருகின்றனர். இந்தக் குழந்தைகள் நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தில் திருக்குறள் முற்றோதல் செய்து மன்றத்தின் சார்பில் 1330  ரூபா பரிசு பெற்றனர். பின்பு தேனி வையைத் தமிழ்ச்சங்கம்  மூலமாக ரூபாய் ஈராயிரம் தொழிலதிபர் கல்வி வள்ளல் கருணாகரன் அவர்களால் கொடுத்துப் பெருமைப் படுத்தப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளுக்கும் வையைத் தமிழ் சங்கத்தின் மூலமும், நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தின் மூலமாகவும் விருதுகளை வழங்கி சிறப்பித்த நிலையில்,  தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் போட்டியிலும் நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு போட்டியில் கலந்துகொண்டு  வெற்றி  பெற்று அரசின் பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரம் பரிசு பெற்றுள்ளனர். தற்பொழுது இந்த குழந்தைகளுக்கு சென்னை தமிழ்நாடு திருவள்ளுவர் கலை இலக்கியச் சங்கம் சாதனையாளர் விருது அளித்து சிறப்பித் இருக்கின்றது. இந்த குழந்தைகளைப் பற்றிய நீண்ட கட்டுரை தம்பி கதிர்மாயக் கண்ணன் அவர்களின் மூலம் தினத்தந்தியில் வெளியானது. தற்போது தினமலர் நாளிதழில் அக்கம்பக்கம் பகுதியில் இந்தக் குழந்தைகளைப் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த செய்தியை பார்த்தவுடன் எனக்கு வியப்போடு கண்ணீர் பெருக்கெடுத்தது.   காரணம் இந்த மூன்று குழந்தைகளையும் அரும்பாடுபட்டு திருக்குறளின் பால் பற்றுக் கொள்ள வைத்து அந்த பெற்றோர்களுடைய  பேட்டியில் "எனக்கு திருக்குறளில் ஆர்வம் ஏற்படக் காரணம் குறளாய முறையில் திருமணம் நடத்தி வரும் வையைத் தமிழ்ச்சங்கம் இளங்குமரன் என்று எனது பெயரைப் பதிவு செய்துள்ளதை பார்த்தேன். கண்கள் குளமாகின. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழுக்கும் குறளுக்கும் தொண்டு செய்வதையே இலக்காக கொண்டு  மொழிக்கும், இனத்திற்குமான மீட்சியைக் கருத்தில் கொண்டு இயங்கி வருகின்ற இளங்குமரன் எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ நடத்திவைத்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அந்தத் தாய் ஜெயமணி அவர்கள் திருக்குறளின் பால் பற்று கொண்டு தன்னுடைய குழந்தைகளை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் நாம் செய்கின்ற தமிழ்த்தொண்டு ஏதோ ஒரு மூலையில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது, எங்கோ ஒரு மூலையில் அது விதையாகி முளைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். அதே பொழுது இதைப் போன்று எத்தனை பெற்றோர்கள் முன்னெடுத்து இருக்கிறார்கள்? என்று கேள்வியும் எனக்குள் எழுகிறது. இயல்பாக ஜெயமணி அம்மையார் அவர்களிடம் இருந்த தமிழ் உணர்வு அந்தத் திருமணத்தின் மூலமாக முடுக்கி விடப்பட்ட தாகவே எண்ணுகிறேன். இதில் என் பங்கு எதுவும் இல்லை. எல்லாமே தமிழின் பங்கு, திருவள்ளுவர் பங்குமாம். என்னை இவ்வழியில் உருவாக்கிய என் ஆசான்மார்கள் ச.சிவசங்கர், இரா.இளங்குமரனார்க்கும், தமிழ்ப்பெருமாட்டி ஜெயமணி அம்மையார்க்கும் அவரின் கணவர் அறிவுச் செல்வத்திற்கும் எனது நன்றியும் வாழ்த்தும்.

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்.

Thursday, 12 August 2021

கேரளா திருவள்ளுவர் ஞானமடம் நிறுவனர் சிவானந்தர் அவர்களோடு ச.ந.இளங்குமரன்

கேரள திருவள்ளுவர் ஞானமடத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.சிவானந்தர் அவர்கள் எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பலனிற்றி இறந்து விட்டார் . 09/08/2021.

அன்னாரின் இறப்பு அனைத்து ஞானமடத்திற்க்கும் பேரிழப்பு , திருக்குறள் பற்றாளர்களுக்கும், வள்ளுவ வாழ்வியலாளர்களுக்கும், தமிழ் கூறும் நல்லுலகத்திற்கும் பேரிழப்பாகும்.

ஐயா சிவானந்தர் அவர்கள் நடத்திவந்த ஞானமடத்திற்குச் சென்று நேரடியாகவே ஒரு நிகழ்வில் கலந்திருக்கிறேன். சென்னை, கன்னியாகுமரி, தஞ்சை உட்பட பலநிகழ்வுகளில் சந்த்திதுப் பேசியிருக்கிறேன். அத்தோடு, தேனி வையைத் தமிழ்ச்சங்கம், நாகலாபுரம் திருவள்ளுவர் மன்ற நிகழ்வுகளிலும் பயன்படுத்தி இருக்கிறேன்.

அவரின் குடும்பத்தார் மற்றும் ஞானமடத்தின் பொறுப்பாளர் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கள் மற்றும் ஆறுதல் கூறிக்கொள்கிறோம் -   

புலவர் ச.ந.இஇளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்-தேனி, & திருவள்ளுவர் மன்றம் நாகலாபுரம்.
98423 70792

************************************

திருவள்ளுவர் எங்கள் ஞானகுரு திருக்குறள் எங்கள் வேதம்!

இது கேரள ஆச்சரியம்

திருவள்ளுவரை நாம் எந்த அளவு மதிக்கிறோம்? கேரளாவில் அவர் கடவுள். வள்ளுவ மதம் அங்கே வேகமாக வளர்கிறது.

வாழ்க்கைக்கான அத்தனை அறங்களையும் உள்ளடக்கியுள்ள நூல் திருக்குறள். அதை வெறும் மனப்பாடப் பாடலாக பிள்ளைகளுக்கு போதிப்பதைத் தவிர வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் தமிழர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். ஆனால் கேரளத்தில் திருவள்ளுவர் ஒரு இறைவனாகவே கொண்டாடப்படுகிறார். திருக்குறள் வேதமாக போற்றப்படுகிறது.

கேரளாவின் கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் இருக்கிறது ஆதிபகவான் திருவள்ளுவா¢ கோயில். திருக்குறளை மந்திரமாக ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை தெய்வமாக வணங்குகிறார்கள். திருவள்ளுவர் கோயிலை ‘ஞானமடம்’ என்கிறார்கள். கருவறையில் வள்ளுவரின் சிலை அல்லது படம் உள்ளது. வெளியே கல்விளக்குத் தூண். எந்நேரமும் பஞ்சமுக விளக்குகள் எரிகின்றன.

இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல வள்ளுவ மதத்தை கேரளாவில் ஸ்தாபித்திருக்கிறார் இடுக்கியை அடுத்த மூவாற்றுப்புழாவைச் சேர்ந்த சிவானந்தர். தனியொரு மனிதராக இதை சாதித்த சிவானந்தர், குடுமியும் தாடியுமாக குட்டி திருவள்ளுவரைப் போலவே இருக்கிறார். ‘தமிழ் நமக்கு அம்மா மொழி. அம்மா மொழியில் வல்லிய கவிதை பாடிய திருவள்ளுவர் ஞானகுரு. திருக்குறள் வேதப்புத்தகம். ஞானமடம், தேவாலயம்’ - இதுதான் வள்ளுவ மதத்தின் உள்ளடக¢கம்.

சிவானந்தரின் பெற்றோர் கிறிஸ்தவர்கள். மிகவும் ஏழைப்பட்ட குடும்பம். 8 பிள்ளைகளில் சிவானந்தருக்கு மட்டும் கிறிஸ்தவத்தில் பிடிப்பு இல்லை. ‘‘பூப்பாறை தேயிலைத் தோட்டத்தில 1974ல வேலை செஞ்சேன். அங்க ஒரு தமிழர் டீக்கடை வச்சிருந்தார். அந்தக் கடையில இயேசு, திருவள்ளுவர், புத்தர் படங்களைப் போட்டு ‘உலகத்தைத் திருத்திய உத்தமர்கள்’னு எழுதி இருந்தது.

 எனக்கு இயேசுவையும் புத்தரையும் தெரியும். தாடி மீசையோட உக்கார்ந்திருந்த வள்ளுவரை அதுவரை பார்த்ததில்லை. ஆனா, பார்த்ததும் பெரிய மரியாதை வந்துச்சு. கடைக்காரர்கிட்ட விசாரிச்சேன். ‘அவரு எங்க நாட்டில பெரிய புலவர். பேர் திருவள்ளுவர், அவர் எழுதிய திருக்குறள் புகழ்பெற்ற புத்தகம்’னு சொன¢னார்.

ஆறு மாதமா கடை கடையா அலைஞ்சேன். கடைசியா வெண்ணைக்குளம் நாராயண குரூப் மலையாளத்தில் மொழிபெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடைச்சது. ஒரு மாசம் படிச்சேன். நான் தேடுன எல்லாமும் அதில் இருந்தது. அப்பவே வள்ளுவர்தான் ஞானகுருன்னு முடிவு பண்ணிட்டேன். திருவள்ளுவர் படம் வாங்கினேன். 1975 சித்திரை முதல¢ தேதி, நான் வேலை செஞ்ச சேனாபதி கிராமத்தில திருவள்ளுவர் படத்தை வச்சு வணங்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வரத் தொடங்கினாங்க’’ என்கிறார் சிவானந்தர்.

வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது, புகையிலை பொருட்களைப் பயன¢படுத்தக்கூடாது. பொய், களவு செய்யக்கூடாது. 33 வருடத்தில் திருவள்ளுவர் சாட்சியாக ஏராளமான காதல் திருமணங¢கள் நடந்துள்ளன. சிவானந்தரும் சரஸ்வதியுமே காதல் தம்பதி தான். ‘‘சரஸ்வதிக்கு சங்கிலி வேதனை நோய் இருந்தது. கோயில், குளம்னு அலைஞ்சும் நோய் தீரல. கடைசியா அவளோட அப்பா, எங்க திருவள்ளுவர் கோயிலுக்கு கூட்டி வந்தார். கொஞ்ச நாள்ல நோய் சரியாயிருச்சு. பிறகு வள்ளுவ மதத்துக்கே குடும்பத்தோட வந்துட்டா. ஒரு கட்டத்தில காதல்... கல்யாணம். இப்போ ரெண்டு குழந்தைங்களும் பிறந்தாச்சு’’ - சிரிக்கிறார் சிவானந்தர்.

ஞானமட திருமணத்தில் தாலி இல்லை. மோதிரம் மாற்றுவதும் இல்லை. மடத்தில் இருக்கும¢ திருமணப் பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படும். பெற்றோரும் மடபதியும் வாழ்த்த, இல்லற அதிகாரத்தில் உள்ள திருக்குறள் ஓதப்படும். அவ்வளவே! இறந்தவர்களை அடக்கம் செய்ய தனி இடுகாடு உண்டு. கோயிலில் உடலை வைத்து, நிலையாமை பற்றிய குறள்களை ஓதி, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து புதைக்கிறார்கள்.

‘‘திருவள்ளுவரை நாடி வந்த அனைவரும் ஒடுக்கப்பட்ட மக¢கள். அவங்க பிரதான உணவே மாமிசம்தான். கேரளாவில் எருமை மாமிசம்கூட சாப்பிடுவாங்க. சாராயம், கள்ளுன்னு போதைய போட்டுட்டு படுத்துருவாங்க. வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு இப்ப சைவமாகிட்டாங்க. பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க’’ என்கிறார் சிவானந்தர்.
ஆனால் ஞானமடங்கள் எழும்பத் தொடங்கியபோது இந்துத்துவ, கிறிஸ்தவ அமைப்புகள் எதிர்த்தன.

மடங்கள் உடைக்கப்பட்டன. மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயிலா’ என்று கொதித்தனர். எல்லோருக்கும் பதில் சொன்னார் சிவானந்தர். ‘இன்றைக்கு இருக்கிற மதங்களின் பிதாக்கள் எல்லாம் இந்த நாட்டில் பிறந்தவர்களா? எங்கெங்கோ இருந்து வந்தவர்களை கடவுளின் அவதாரங்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஏற்றுக்கொண்ட நீங்கள் எங்களைக் குறை சொல்லாதீர்கள்’ என்றார். எதிர்ப்புகள் ஒடுங்கின.

கார்த்திகை மாதம் திருவள்ளுவருக்கு மாலை அணியும் திருநாள் நடக்கிறது. சபரிமலை செல்வது போலவே மாலை அணிந்து, 41 நாள் விரதமிருந்து தலைமை ஞானமடமான கூர்மலைக்கு யாத்திரை செல்கிறார்கள். கூர்மலை உச்சியில் பூக்களால் வள்ளுவர் சிலையை அலங்கரித்து வணங்குகிறார்கள்.

ஞானமடங்களின் ஆண்டு விழாக்களும¢ திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் செண்டை மேளம் முழங்க கொடியேற்றப்படும். பச்சைநிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம். இதுதான் வள்ளுவ மதத்தின் கொடி. கொடியேற்றலுக்கு பின் ஜெபம். மதியம் அனைவருக்கும் சம போஜனம். இரவு தாளப்பொலி. ஆண்கள் திருவள்ளுவரை சுமந்து வர, பெண்கள் பச்சை, சிவப்பு உடை அணிந்து பூக்கள் நிரம்பிய தாம்பாளத்தில் விளக்கேற்றி ஊர்வலமாக வருவார்கள். வள்ளுவரையும், திருக்குறளையும் போற்றி 300க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதித் தொகுத்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் தினமும் இருவேளை ஞானமடத்தில் சமூக ஜெபம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு மடத்துக்கும¢ ஒரு மடபதி. சிவப்பு வேட்டி, பச்சை மேலங்கி. இதுவே மடபதியின் சீருடை. மடபதிகளை மக்கள் ‘ஆச்சார்யா’ என்று அழைக்கிறார்கள்.

‘‘71 ஜாதியை சேர்ந்தவுங்க ஞான மடத்தில் அங்கமா இருக்காங்க. இங்க வந்த பின்னாடி யாருக்கும¢ ஜாதி, மத அடையாளமில்லை. 2015க்குள்ள கேரளாவில் உள்ள அத்தனை கிராமத்திலயும் எங்க ஆதிபகவானுக்கு ஞானமடம் கட்டணும்ங்கிற இலக்கோட செயல்படறோம்’’ என்ற சிவானந்தரை இடைமறித்து, ‘‘உங்களில் எத்தனை பேருக்கு 1330 திருக்குறளும் தெரியும்’’ என்றோம். ‘‘அத்தனை குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிச்சு பரிசு வாங்கறதால என்ன பயன்?

அந்த வேதப்புத்தகத்துல உள்ள பத்து குறளை ஆழப் படிச்சு, அந்தக் கருத்துகளை மனசுக்குள்ள வாங்கி, அதன்படி நடந்தாப் போதும்... அதைத்தான் நாங்க படிப்பிக்கிறோம்’’ -பொட்டில் அடித்தது போல் சொல்கிறார் சிவானந்தர். வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க

 மலையாள ஆர்வலர்கள் பலர், ‘தமிழ்நாட்டுக் கவிக்கு கேரளாவில் கோயிலா’ என்று கொதித்தனர்

          தமிழர்களாகிய நாம் திருவள்ளுவரை எந்த அளவு போற்றி நடக்கிறோமோ தெரியாது. ஆனால் கேரளாவில் சில பகுதிகளில் அவர் கடவுள். வள்ளுவ மதம் அங்கே வேகமாக வளர்கிறது. திருக்குறள் வேதமாகப் போற்றப்படுகிறது.
          வாழ்க்கைக்கான அத்தனைஅறங்களையும் உள்ளடங்கியுள்ள நூல் திருக்குறள். அதை வெறும் மனப்பாடப் பாடலாக பிள்ளைகளுக்குப் போதிப்பதைத் தவிர வாழ்க்கையில் கடைபிடிக்கும் தமிழர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.
          ஆனால் கேரளாவில் கோட்டயம், இடுக்கி, எர்ணா குளம், மூவாற்றுப்புழா போன்ற பகுதிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆதிபகவான் திருவள்ளுவர் கோயில் இருக்கிறது. திருக்குறளை மந்திரமாக ஓதி சுமார் 60 ஆயிரம் பேர் வள்ளுவரை தெய்வமாக வணங்குகிறார்கள். திருவள்ளுவர் கோயிலை ஞான மடம் என்கிறார்கள். கருவறையில் வள்ளுவரின் சிலை அல்லது படம் உள்ளது. வெளியே கல் விளக்குத் தூண். எந்நேரமும் பஞ்சமுக விளக்குகள் எரிகின்றன.
          இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் போல வள்ளுவ மதத்தை கேரளாவில் ஸ்தாபித்திருக்கிறார்.இடுக்கியை அடுத்த மூவாற்றுப் புழாவைச் சேர்ந்த சிவானந்தர். தனியொரு மனிதராக இதைச் சாதித்த இவர், குடுமியும் தாடியுமாகக் குட்டி திருவள்ளுவரைப் போலவே இருக்கிறார்.
          ‘தமிழ் நமக்கு அம்மா மொழி’. அம்மா மொழியில் வல்லிய கவிதை பாடிய திருவள்ளுவர் ஞானகுரு. திருக்குறள் வேதப்புத்தகம். அவரது கோயில் ஞான மடம், தேவலாயம் – இது தான் வள்ளுவ மதத்தின் உள்ளடக்கம் என்கிறார் அவர்.
          சிவானந்தரின் பெற்றோர் கிறிஸ்தவர்கள். மிகவும் ஏழ்மையான குடும்பம். எட்டு பிள்ளைகளில் சிவானந்தருக்கு மட்டும் கிறிஸ்தவத்தில் பிடிப்பு இல்லை.
          வள்ளுவர் மீது தமக்கு ஈர்ப்பு உண்டானதை சிவானந்தர் கூறுகிறார். “பூப்பாறை தேயிலைத் தோட்டத்தில் 1974 ல் வேலை செஞ்ச்சேன். அங்க ஒரு தமிழர் டீக்கடை வச்சிருந்தார். அந்தக் கடையில் இயேசு, திருவள்ளுவர், புத்தர், படங்களுக்குக் கீழ் , “உலகத்தைத் திருத்திய உத்தமர்கள்” னு எழுதி இருந்தது.
          “எனக்கு இயேசுவையும் புத்தரையும் தெரியும். தாடி மீசையோட உக்காந்திருந்த வள்ளுவரை அதுவரை பார்த்ததில்லை. ஆனா பார்த்ததும் பெரிய மரியாதை வந்துச்சு. கடைக்காரர்கிட்ட விசாரிச்சேன். அவரு எங்க மாநிலத்தில் பெரிய புலவர். பேர் திருவள்ளுவர். அவர் எழுதிய திருக்குறள் புகழ் பெற்ற புத்தகம்” னு சொன்னார்.
          “ஆறு மாதம் கடை கடையா அலைஞ்சேன். கடைசியா நாராயணகுரு மலையாளத்தில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகம் கிடைத்தது. ஒரு மாதம் படிச்சேன். நான் தேடுன எல்லாமும் அதில் இருந்தது. அப்பவே வள்ளுவர் தான் ஞான குருன்னு முடிவு பண்ணிட்டேன். திருவள்ளுவர் படம் வாங்கினேன். 1975 சித்திரை முதல் தேதி, நான் வேலை செஞ்ச சேனாபதி கிராமத்தில் திருவள்ளுவர் படத்தை வச்சு வணங்க ஆரம்பிச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மக்கள் வர ஆரம்பிச்சாங்க.”
          வள்ளுவரை ஏற்றுக் கொண்டவர்கள் அசைவம் சாப்பிடக்கூடாது. மது, புகையிலை பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது. பொய், களவு, கூடாது. 33 வருடத்தில் வள்ளுவர் சாட்சியாக ஏராளமான திருமணங்கள் நடந்துள்ளன. சிவானந்தருக்கும் அவரது மனைவி சரஸ்வதிக்கும் இங்கே தான் திருமணம் நடந்தது.
          “சரஸ்வதிக்கு ஒரு நோய் இருந்தது. எங்கு அலைஞ்சும் நோய் தீரல. கடைசியா அவளோட அப்பா, எங்கள திருவள்ளுவர் கோயிலுக்குக் கூட்டி வந்தார். கொஞ்ச நாள்ல நோய் சரியாயிருச்சு. பிறகு வள்ளுவ மதத்துக்கே குடும்பத்தோட வந்துட்டா. ஒரு கட்டத்தில் கல்யாணம்… இப்போ ரெண்டு குழந்தைகள் ….”சிரிக்கிறார் சிவானந்தர்.
          ஞான மட திருமணத்தில் தாலி இல்லை. மோதிரம் மாற்றுவதும் இல்லை. மடத்தில் இருக்கும் திருமணப் பதிவு புத்தகத்தில் பதிவு செய்யப்படும். பெற்றோரும் மடாதிபதியும் வாழ்த்த, இல்லற அதிகாரத்தில் உள்ள குறள்கள் ஓதப்படும். அவ்வளவே! இறந்தவர்களை அடக்கம் செய்ய தனி இடுகாடு உண்டு. கோயிலில் உடலை வைத்து, நிலையாமை பற்றிய குறள்களை ஓதி, இறப்புப் பதிவேட்டில் பதிவு செய்து புதைக்கிறார்கள்.
          “திருவள்ளுவரை நாடி வந்த அனைவரும் பிற்படுத்தப்பட்ட மக்கள். அவங்க பிரதான உணவே மாமிசம் தான்.சாராயம், கள்ளுன்னு போதைய போட்டுட்டு படுத்துருவாங்க. வள்ளுவர் சொன்னதை ஏத்துக்கிட்டு இப்ப சைவமாயிட்டாங்க. பல ஆயிரம் இளைஞர்கள் போதைப் பழக்கத்தை விட்டொழிச்சு நிம்மதியா வாழுறாங்க என்கிறார்” சிவானந்தர்.
          ஆனால் ஞானமடங்கள் எழும்பத் தொடங்கிய போது கிறிஸ்தவ மற்றும் சில அமைப்புகள் எதிர்த்தன. மடங்கள் உடைக்கப்பட்டன. மலையாள ஆர்வலர்கள் பலர் “தமிழ்நாட்டுக்குக் கவிக்கு கேரளாவில் கோயிலா?” என்று கொதித்தனர். எல்லோருக்கும் பதில் சொன்னார் சிவானந்தர். இன்றைக்கு இருக்கிற மதங்களின் பிதாக்கள் எல்லாம் இந்த நாட்டில் பிறந்தவர்களா? எங்கெங்கோ இருந்து வந்தவர்களைக் கடவுளின் அவதாரங்களாகவும், வழிகாட்டிகளாகவும் ஏற்றுக் கொண்ட நீங்கள் எங்களைக் குறை சொல்லாதீர்கள் என்றார்.
கார்த்திகை மாதம் திருவள்ளுவருக்கு மாலை அணியும் திருநாள் நடக்கிறது. சபரிமலை செல்வது போலவே மாலை அணிந்து, 41 நாள்    விரதமிருந்து தலைமை ஞானமடமான கூர்மலைக்கு யாத்திரை செல்கிறார்கள்.
          கூர்மலை உச்சியில் பூக்களால் வள்ளுவர் சிலையை அலங்கரித்து வணங்குகிறார்கள்.
          ஞான மடங்களின் ஆண்டு விழாக்களும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. அதிகாலையில் செண்டை மேளம் முழங்க கொடி ஏற்றப்படும். பச்சை நிறக் கொடியின் நடுவே சிவப்பு வட்டம். இது தான் வள்ளுவ மதத்தின் கொடி. கொடியேற்றலுக்கு பின் ஜபம். மதியம் அனைவருக்கும் சம போஜனம். இரவு தாளப் பொலி ஊர்வலம். ஆண்கள் திருவள்ளுவரைச் சுமந்து வர, பெண்கள் பச்சை, சிவப்பு உடை அணிந்து பூக்கள் நிரம்பிய தாம்பளத்தில் விளக்கேற்றி ஊர்வலமாக வருவார்கள்.
          வள்ளுவரையும், திருக்குறளையும் போற்றி 300 – க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதித் தொகுத்திருக்கிறார்கள். மற்ற நாட்களில் தினமும் இரு வேளை ஞானமடத்தில் சமூக ஜெபம் நடத்துகிறார்கள். ஒவ்வொரு மடத்துக்கும் ஒரு மடாதிபதி. சிவப்பு வேட்டி, பச்சை மேலங்கி. இதுவே அவர்களின் சீருடை மடாதிபதிகளை மக்கள் ஆச்சார் என்று அழைக்கிறார்கள்.
          “71 ஜாதியை சேர்ந்தவுங்க ஞான மடத்தில் அங்கமா இருக்காங்க. இங்க வந்த பின்னாடி யாருக்கும் ஜாதி, மத அடையாளமில்லை. சில ஆண்டுகளுக்குள் கேரளாவில் உள்ள அத்தனை கிராமத்திலயும் எங்க ஆதிபகவானுக்கு ஞானமடம் கட்டணும்ங்கிற இலக்கோட செயல்படறோம்” என்கிறார் சிவானந்தர்.
          அவரிடம் “உங்களில் எத்தனை பேருக்கு 1330 திருக்குறளும் தெரியும்?” என்று கேட்கப்பட்டது.
          அத்தனை குறளையும் மனப்பாடம் செய்து ஒப்பிச்சு பரிசு வாங்கிறதில் என்ன பயன்? அந்த வேதப் புத்தகத்துல உள்ள ஏதேனும் பத்து குறளை ஆழப்படிச்சு, அந்தக் கருத்துகளை மனசுக்குள்ள வாங்கி, அதன்படி நடந்தாப் போதும்… அதைத்தான் நாங்க கடைப்பிடிக்கிறோம்”என்று சொல்கிறார் சிவானந்தர்

Monday, 2 August 2021

செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமர் நினைவேந்தல்

கருத்துகள் - views
search
AUG
2
முதுமுனைவர் இரா.இளங்குமரனார் நினைவேந்தல் 08.08.21
 அகரமுதல


இலக்குவனார் திருவள்ளுவன்      02 August 2021      No Comment



(தை 17, 1951 / 30.01.1930 ***ஆடி 09, 2052 / 25.07.2021)



தமிழே விழி!                                                                                                      தமிழா விழி!

தமிழ்க்காப்புக்கழகம்
புலவர்மணி முதுமுனைவர் இரா.இளங்குமரனார்
நினைவேந்தல்
ஆடி 23/2052 ஞாயிறு 08.08.21 காலை 10.00 மணி
தலைமை & நினைவுரைஞர்கள் அறிமுக உரை :
 இலக்குவனார் திருவள்ளுவன்
இணை நிகழ்த்துநர்: தோழர் தியாகு
தொடக்க நினைவுரை :
முனைவர் மறைமலை இலக்குவனார்
முதன்மை நினைவுரை : மாண்புமிகு கோ.தளபதி, ச.ம.உ
நினைவுரைஞர்கள்:
திருமிகு பா. ஆனந்து, தலைமையாசிரியர், மு.மு.மே.பள்ளி, திருநகர்
முனைவர் இரேவதி இராகவன்
புலவர் ச.ந. இளங்குமரன்
முனைவர் மு.இளங்கோவன்
திருவாட்டி சீதா இராமச்சந்திரன்
திருமிகு செயக்கொடி, ஆசிரியர் (ஓய்வு), மு.மு.மேனிலைப்பள்ளி.
திருமிகு பி.பாண்டியன்
திருமிகு பொன். மனோகரன்
முனைவர் கரு.முருகேசன்
சிறப்பு நினைவுரை :
முனைவர் ச.சு. இராமர் இளங்கோ
நிறைவு நினைவுரை: 
கவிஞர்  முனைவர் பொன்னவைக்கோ
குடும்பத்தினர்  பகிர்வுரை : இளங்கோ இளங்குமரன்

Sunday, 25 July 2021

சாதி... ஆய்வறிஞர் ப.அருளி

சாதி!


சாதி!..
அருமையான தூய தமிழ்ச்சொல்! இச்சொல் உருவாக்கப் பெற்று நடைமுறைப்படுத்தப்படுகையில் மாசு மருவில்லாத தெளிவான விளக்க அமைப்பில் கூட்டம்(திரள்) என்ற பொருளில் தமிழர்களால் வழங்கியது!

"நாற்றம்" என்னும் சொல் பழங்காலத்தில் நறுமணத்தை மட்டுமே குறித்து வழங்கப் பெற்று நாளடைவில் தீயமணத்தைக் குறித்து வழங்கி இன்று "இழிபொருள்பேறு" பெற்றுவிட்ட நிலை போன்றே-கூட்டம் (திரள்) என்னும் கருத்தைக் குறித்து வழங்கிய இச் 'சாதி' என்னும் அப்பழுக்கற்ற விலங்காண்டியுணர்ச்சியில் ஒருமடயன் அல்லது தான் அல்லது தாம் தனிப்பட்ட கொடிவழிமரபினன்(ர்) என்னும் வெறிப்புணர்வோடு சூட்டிக்கொண்டு இழிவேற்படுத்திக் கொள்ளும் கட்டப் பெயரைச் சுட்டும் பொதுக் கொடுஞ்சொல்லாகி இழிவேறிப் பயிலப்பெறுகின்றது!

"நீர் வாழ் சாதியும் அது பெறற்குரிய” -“நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே" என்றவாறுள்ள மிகப் பழைய தொல்காப்பிய நூற்பாக் களுள்ளேயே இந்தச் சாதி என்னும் சொல், கூட்டம் (திரள்) என்னும் பொருளில் மட்டுமே ஆளப்பெற்ற உண்மையைக் காணலாகும்.

இவ்வாறு சாதி என்ற சொல்லுக்கு இக்காலத்தே வழங்கும் பொருள் அன்று இல்லாதிருந்தது என்று கூறுவதால் அந்தக் காலத்தில் அத்தகு உணர்வே நம் தமிழ் மக்களிடம் இல்லை; பிறர் ஏதோசூழ்ச்சியால் நம்மீது திணித்தது என்றவாறான பொருள்களில் நாம் இதனைக் கூறவரவில்லை.

சாதி உணர்வே தமிழர்களிடம் முற்காலத்தில் இருந்ததில்லை. ஏனெனில் “சாதி" என்ற சொல்லே தமிழ்ச்சொல் இல்லை என்பது போலும் விளக்கங்கள் இம்மண்ணில் முழக்கப்பெறுகின்றன! இவை தவறான கருத்துக்களாகும்.

நிற அடிப்படையாக வெண்களமன் - காராளன் இருளன் என்றவாறும்; இட அடிப்படையாக சோழிய வெள்ளாளன் தென்னார்க்காட்டு இருளர் ஆர்க்காட்டு முதலி என்றவாறும்; திசையடிப்படையாக தென்திசை வேளாளர் என்றவாறும்; குடியிருப்பு அடிப்படையாக கோட்டை வேளாளன், தெருவான் என்றவாறும்; உணவு அடிப்படையாக (சைவ) சிவனிய வேளாளன் புலையன் தவளைதின்னி என்றவாறாகவும். அணிமுறை அடிப்படையாக கொண்டை கட்டி - பச்சைகுத்தி வேளாளர் -நீறுபூசி வேளாளர் என்றவாறாகவும்; விற்பனைப் பண்டங்கள் அடிப் படையாக கூலவாணியன் இலைவாணியன் எண்ணெய் வாணியன் என்றவாறாகவும்; கோயில்தொண்டு அடிப்படையாகதேவ கணிகையர் பூவாண்டிப் பண்டாரம் உப்பாண்டிப் பண்டாரம் என்றவாறாகவும்; கருவிகள் பயன்படுத்திய அடிப்படையாக கவண்டன் செங்குந்தன் - வலையன்- மேளக்காரன் - சிறுபாணள் பெரும்பாணன் படையாட்சி என்றவாறாவும்: பண்பு அடிப்படையாக கள்ளன் - கள்ளன் என்றவாறாகவும்; அலுவல் அடிப்படையாககணக்கன் என்றவாறாகவும்; கல்வி அடிப்படையாக புலவன் - பண்டாரம் - ஓதுவான் என்றவாறாகவும். முன்னோர்பட்ட அடிப்படையாக உடையான்- முதலி - பிள்ளை களம்வென்றான் என்றவாறாகவும்; சடங்கு அடிப்படையாக பன்னிரண்டு நாள் போன்றவாறும்; முறை அடிப்படையாக அம்மாப்பள்ளர்-ஆத்தாப் பள்ளர் என்றவாறாகவும்; தொகையடிப்படையாக ஆயிர வணிகள். ஐஞ்ஞற்றான் பாணன் என்றவாறாகவும் விலங்கு வேட்டை அடிப்படையாக வேட்டுவன் - நரிக்குறவன் நாயாடி - எருதையாடி என்றவாறாகவும் சுடந்த ஈராயிரம் ஆண்டுகள் காலச்சுழற்சியில் தொடர்ந்து தொடர்கின்ற குலவழி- தொழில்வழி பிரிவுகள் இம்மண்ணில் முறிந்தபடியாகவே இயல்பாய் இயங்கினதாம்.

இவற்றில் மிகப்பல ஆரிய வருகைக்கு முற்பட்டே இங்கு நிலைத்திருந்தனதாம்! இவ் வகைக் குலப்பிரிவுகள் எவற்றையும் எந்த ஆரியப் பார்ப்பானும் தனியே உருவாக்கி நிலை நிறுத்தவில்லை. இவற்றைச் செய்தவனும் இயக்கியவனும் அதற்குட்பட்டு இயங்கினவனும் இந்தத் தறுதலைத் தமிழனே!

'பறை பதினெட்டு நுளை நூற்றியெட்டு" என்றவாறு (சொலவடை) பழமொழி வரியமைப்பை உண்டாக்கியவனும் அவை உருவாவதற்கு மூலகாரணனாக இருந்தவனும் இதே தமிழமுட்டாள்தான் ! இந்தியாவில் (இந்திய நாடாம் இந்தியநாடு!) உள்ள மக்கள் தொகையில் ஏழு விழுக்காடு அளவுள்ள நம் தமிழ்க் குலத்தில் மட்டும் மலைசாதிகளாக 36 பிரிவுகள் அலைகின்றன! தாழ்த்தப்பட்டசாதிகளாக 80 பிரிவுகள் அல்லாடுகின்றன! பிற்பட்ட சாதிகளாக 150 பிரிவுகள் பிய்ந்துப் பிளவுற்று இரண்டுங்கெட்டான் களாக இடுக்கணாடுகின்றன! முற்பட்ட சாதிகளாக 50 பிரிவுகள் முழங்கிக் கிழிக்கின்றன. இப்படி 300 பிரிவுகளுக்கும் மேற்பட்ட கழிவுக் கூலங்களாகத் தமிழ்க்கூடு சிதறிச் சீரழிந்துக்கிடக்கின்றது,

இந்த முந்நூறு பிரிவுகளுக்குள்ளும் அகப்பிரிவுகள், புறப்பிரிவுகள், அகப்புறப்பிரிவுகள், புறப்புறப்பிரிவுகள் பேராளப் பேராளமாகப் பிளவுற்றுப் பீற்றுகின்றன!

மொத்தத்தில் தமிழ்க்குலமே சாதிச் சாய்க்கடையில் தனித்தனிப் புழுக்குலப் பிரிவுகளாகிப் போய்விட்டது. ஒவ்வொரு புழுக் குலமும் தனித்தனி நொதிமச் சேற்றில் தாம்தாம் தோன்றினோமென்று அறிவியலும் அரசியலும் பேசுகின்றன! இந்நிலைகள் இத்தமிழ்மண்ணில் மட்டுமன்றி இந்த நாவலத்தீவு

(இந்தியா) முழுமைக்கும் சொந்தமாகவே இருந்து வருகின்றன.

கன்னடத்தில் சாதியை ஒழிக்கக்கிளம்பிய பன்னிரண்டாம் நூற்றாண்டு பசவர் இயக்கத்தவர்கள் இன்றைக்கு "லிங்காயத்து" சாதிக்காரர்களாக தனித்து நிற்கிறார்கள். கபீர்தாசு இயக்கம் 15-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சாதிகளை ஒழிக்க எழுந்து இன்று "கபீர்பாந்தி" என்னும் தனிச் சாதியாகித் தனித்து வாழ்கின்றது. “மெய் மட்டுமே கடவுள். சாதிகள் ஒழியவே வேண்டும்" என்று சுடுங் கட்டியங்கூறிக் கிளம்பிய சகவேன்தாசென்னும் அரசபுத்திர இயக்கத்துக்காரர்கள் அனைவரும் 17-ஆம் நூற்றாண்டின் இறுதி யிலிருந்து “சத்தமி" என்னும் சாதிப்பிரிவாகிச் சந்தியில் தனியே நிற்கிறார்கள் 19-ஆம் நூற்றாண்டின் ரயிதாக இயக்கத்தவர்கள் சாதியை ஒழிக்க முயன்ற சாதியினராகி சமார் சாதிக்காரர்களாகத் தனிப்பட்டார்கள். ஆக, சாதியை ஒழிக்க முனைந்தவர்களே தனிச்சாதிகளாக சாதிமுறைகளின் தன்மைகளை அப்படியே கடைப்பிடித்துக் குட்டிச்சுவராகிப் பீறிப் பிளவுற்றியங்கும் காட்சிகளும் களங்கக் களங்களும் இந்த நாட்டில் மிகப் பேராளம்!

தொழில் வழியாகவும் மரபு வழியாகவும் வெறும் பிரிவும் வெறும் பிளவும் உற்று வெற்று நிலையில் இயங்கிய குலப்பிரிவுகள் அனைத்தையும் பிறப்பு அடிப்படையில் தோன்றிய பிரிவுகளாகக் கட்டுக்கதையிட்டுபொய்ந்நெய்யிட்டு போலிப் புனைவாடைகள் உடுத்திப் புழுத்துப் போகுமாறும், நாற்றமெடுத்து நலியுமாறும் செய்த பெருமை இம் மண்ணில் வந்தேறிய ஆரியர்களுடையதே!

இன்னும் மேலும் மேலும் வளர்த்தெடுப்பதில் கண்ணுங் கருத்துமாகச் சூழ்வினைகளில் தொய்யாது ஈடுபடுகின்றனர். "ஜா" என்ற வடமொழிச்சொல்லுக்குப் பிறப்புக் கருத்து மூலம் இருப்பதை வைத்துக் கொண்டு "சாதி" என்ற கூட்டத்திற்கான பொதுத் தமிழ்ச்சொல்லையே "ஜாதி" என்றவாறு பலுக்கி (உச்சரித்து) தங்கள் சூழ்ச்சிக் கருத்துக்கு நிலைப்பாடு கற்பித்தனர்! வெண்ணிறமும் உரத்த கட்டுர இழுப்பும் பறிப்புமான குரலில் அதிர்வெய்திய பண்டை யறிவினரும் மதிகலங்கி மருண்டனர்!சாதியுணர்ச்சியென்னும் கீழ்மைக்கும் கீழாகத்தீண்டாமை, அண்டாமை,காணாமை போன்ற கொடுங்கடிய கீழ்மையுணர்ச்சிகளும் இத்தென்னாட்டில் விளைந்தன. இவற்றின் சாயல்கள் இன்னும் சாய்ந்து போய்விடவில்லை!

இத் தமிழகத்திலுள்ள சாதிகளை இன்று கட்டிக்காத்து வரும் மூலக்காவல்நாயாகப் பார்ப்பனியம் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. அது, இந்து மதம் என்னும் கற்பனைப் பூதத்தின் இயக்க மூலமாகச் செயல்பட்டுக்கொண்டு வருகின்றது. ஒரு சாதிக்காரன் என்பவன் தனக்குக் கீழாகச் சொல்லப்பட்டு வரும் மற்ற சாதிக் காரர்களுக்கு முன் செம்மாப்பும் இறுமாப்புங் கொண்டு நடக்கின்றான். தன் சாதிக்கும் உயர்ந்ததாகச் சொல்லப்படும் சாதிக்காரர்களை அதேபொழுதுமேலாக மதிக்கின்றான். ஒவ்வொரு சாதிக்காரனிடமும் இவ்வகைக் கீழ்மைக்குணம் அல்லது தாழ்வுணர்ச்சி கருவுணர்ச்சியாக அமைந்துள்ளது.ஒவ்வொருவனும் தன்னினும் தாழ்ந்த குலம் என்ற பிற குலத்தின் முன் கொள்ளும் ஒருவகைப் பீற்றலான செருக்குணர்வில்தான் சாதியின் நிலைப்பே பெரும்பாலும் கட்டுக்குலையாமல் கிடக்கின்றது. சாதியமைப்புகளின் மேல்தளத்தில் இவ்வகை இனிப்பு நன்கு மெழுகிப் பூசப்பட்டுக்கிடக்கின்றது. இப் போலிமைப் பூச்சினை நக்கிக்கிடக்கும் நாயாகவே சாதியுணர்வாளன் ஒவ்வொருவனும் வாலாட்டித் திரிகின்றாள்.

குமுகாயப் புரட்சியை விளைக்கவும் பொதுவுடைமை நிலமாக இத் தமிழகத்தையே தலைகீழாய்ப் புரட்டி நிலைநிறுத்தவும் பகுத்தறிவு நிலமாகவே தமிழகத்தையே சமைக்கவும் கிளம்பி எழும்பியுள்ள இளைஞர்களில் பெரும்பாலோரும் மறைமுகமாக சில சூழல்கள் தங்களை அறியாமலேயே வெளிப்படையாக தத்தம் பொய்ச் சாதிப் போலிமையுணர்ச்சிகளுக்கு ஆளாகிப் பிதற்றுவதைக் காணலாம்.

திருமணம் செய்து கொள்ளும் பருவம்வரை பகுத்தறிவும் பொதுவுடைமையும் சாதியொழிப்பும் எழுதிய சுத்திய இளைஞரிற் பலர் திருமணம் செய்யும் நேரம் வந்ததும் வாயடங்கி கைகட்டி “ எல்லாம் பேசலாம்; செயலுக்கு ஒத்துவராது; உலகத்துக்கு ஒத்துவராது" என்று பழங்குப்பையுணர்வுக்கூட்டங்களோடு கூட்டாகிப் போவதையும் நாம் காண்கிறோம்.

பெரும்பாலான புரட்சியுள்ளம் கொண்ட, சாதியுணர்ச்சி ஒழியவேண்டும் என்ற சுடுமையான உணர்வுகொண்ட இளைஞர்கள் பலரும் சீர்திருத்தத் திருமணம் - திருமண ஒப்பந்தம் என்றவாறான ஏமாற்றுத் தலைப்புகளின் கீழ் பார்ப்பானை மட்டும் ஒதுக்கிவைத்துவிட்டு சாதியொழிப்பு, பகுத்தறிவு, பொதுவுடைமை போலும் புரட்சிக் கருத்துகளைப் பேசும் வழக்கங் கொண்ட பேச்சாளிகளை அல்லது கவர்ச்சியான அரசியல் தலைவர்களை முன்வைத்து தன் சொந்தச் சாதியிலேயே(!) தன் சொந்தக் கொடிவழியிலேயே(!) முறைப்படியான பேரங்களால் முடிந்த மணப் பரிசப் பொருள்கள் சுற்றஞ்சூழ நான்கைந்து (வைதிக) வேதியச் சடங்குகளை மட்டும் தவிர்த்துவிட்டு மற்ற பிறவெல்லாம் முறைப்படி நடக்கத் தாம் ஏதோ புரட்சி செய்து கிழித்துவிட்டதாக உள்ளுணர்வோடு பேசித் திரியும் பீற்றல்களில் ஈடுபடுவதையும் நாம் அடிக்கடி காணுகின்றோம்!

மூடப்பழக்க வழக்கங்களுக்கு ஒரு வகையில் எதிர்ப்பு தெரிவிக்கும் நடைமுறையாவும் - காலவளர்ச்சிக்கு ஓரளவில் இயைந்து போகும் நடைமுறையாகவும் - பகுத்தறிவுக்கு ஓரளவில் இயைபு காட்டும் நடைமுறையாகவும் இதனைக்கொள்ளலாமே தவிர - இதில் மிகப்பெரிய சீர்திருத்தம் இருப்பதாக நாமே தவறாக எண்ணி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளவும் அல்லது உலகத்தை ஏமாற்றவும் கூடாது.

சாதிப் போலிமையுணர்ச்சியை ஒழிப்பதொன்றே முதலில் செய்யவேண்டியதாகும்! ஒவ்வொரு இளைஞனும் இளைஞையும் இதில் விடாப்பிடியாக இருக்க வேண்டும். நம் முன்தலை முறையினரை நாம் அப்படியே விடுவோம்! அவர்கள் திருந்தினால் திருந்தட்டும்

கிடந்துழன்றால் உழலட்டும்!

சாதியுணர்ச்சியில் வெறிகொண்டியங்கும் ஒவ்வொரு தமிழனும் பெரும்பாலும் தன்னல வெறியனாகவும், பொறாமைக்காரனாகவும், பிற மாந்தனை அடக்கியொடுக்க விரும்பும் செருக்குள்ளவனாகவும், வலியவொருவனுக்கு வால்குழைத்தியங்கும் நாயுணர்வினனாகவும், எவ்வொரு கூட்டுணர்வையும் சிதைத்தழிக்கும் தீயுணர்வினனாகவும், போலிப் பெருமையில் நாட்டங்கொள்பவனாகவும் இருப்பதை நன்கு ஊன்றிப்பார்க்கும் பகுத்தறிவார் ஒவ்வொருவராலும் தெளிய உணரலாகும்.

சாதியுணர்ச்சி ஒருவகை விலங்குணர்ச்சி; சாதியில் ஏதோ ஒரு பெருமை இருப்பதாக எண்ணுவது ஒருவகைக் கடைகெட்ட அறியாமை!

பழம் பேரினமாகிய வீரம் செறிந்த பைந்தமிழ் இனம் வீறலுற்று விரிசலடைந்து வேறுவேறாகி இன்று, வீறும் விழிப்பும் விடிவும் அற்று இற்றுக் கிடப்பதற்கு. இந்தச் சாதியுணர்ச்சி என்னும் சாய்க்கடைக் கழிவுத் தேக்கமானது பிரிவுக்குப் பிரிவு நாற்றமெடுத்துக் கிடப்பதே காரணமாகும்.

இப்படிப்பட்டக்கேடுகளையுடைய சாதியை ஒழிக்க வேண்டிபல ஆண்டுகளாக பேசியும் எழுதியும் வந்த தந்தை பெரியார் அவர்களின் உழைப்புக்கு சிறிதளவு பயனேகிட்டியது.

எனவே இவற்றை ஒட்டுமொத்தமாகப் புதைத்து மண் பரப்பவேண்டியது நம் தமிழிளைஞர்கள் அனைவருடைய கடமையுமாகும்.

ஒவ்வொரு தமிழிளைஞனும் தமிழிளைஞையும் இவ் வகை நல்லுணர்வு கொண்டு நம் செந்தமிழினத்தின் பழம்பெருவலிவை மீட்போமாக!

சாதியொழிப்புக்கு ஒரே வழிதான் உள்ளது! அது கலப்பு மணம் ஒன்றே! அது தமிழகமெங்கும் மணம் பெறவேண்டும்! அந்நிலையை நம் இளம் பெறவேண்டும்! அதுஅதுஓர் இளைஞன் அல்லது ஓர் இளைஞை நம் இனத்திற்கு செய்யும் கடமைகளுள் மூலமான ஒன்றாகும்! அக்கடமையை நேர்மையாகவும் ஒழுக்கமாகவும் பெருமையாகவும் நல்லோர்கள் துணையுடன் நடத்திக்கொள்ள வேண்டும்! அத்தகு திறமும் துணிவும் அன்ளோருக்குப் பெருக வேண்டும்!

மீண்டும் கூறுகிறோம்: சாதியுணர்ச்சி ஒருவகை விலங்குணர்ச்சி
அது ஒருவகை அறியாமை !
அது ஒருவகை முட்டாள் தனம் !

அது எவர் உள்ளத்தில் இருந்தாலும் அது அழிக்கப்பட வேண்டும் அவ்வகை அறியாமைக்காரர் திருத்தப்பெற வேண்டியவர்! அவரால்தான் இனவொற்றுமை கூடாமல் கிடக்கின்றது!

மதி (திங்களிதழ்)
(17-7-86)

Friday, 23 July 2021

திருவள்ளுவர் உள்ளம் (அமிழ்தம்)

திருவள்ளுவர் உள்ளம்.

அமிழ்தம்.

திருவள்ளுவர் தமதுநூலில்  "அமிழ்தம்" என்னும் சொல்லை ஆண்டுள்ள குறள்களையும், அவற்றின் சிறப்புகளையும் ஆய்வதே இப்பதிவின் நோக்கம்.

அதிகாரம் - 2. வான் சிறப்பு.
குறள் எண் - 11.
"வான் நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுஉணரற் பாற்று".

தேவநேயப்பாவாணர் இக்குறளுக்கு வழங்கிய ஆய்வுரை வருமாறு:- 
"மழை உலகிற்குச் சாவா மருந்து எனக்கருதப்பெறும் தன்மையது. உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத சோறும் நீரும், தொடர்ந்த பசி, தகை (தகை = தாகம்) நோய்களால் நேரும் சாவைத் தவிர்த்தால், 'இருமருந்து' எனப்படும். நீரும் சோறும் மழையாலேயே பெறப்படுதலால், மழை உலகிற்கு அமிழ்தமாயிற்று. 

ஆயினும், பிணி மூப்பு சாக்காடு ஆகியன இருத்ததால், சாவாமை என்பது சாக்காடு வரையுள்ள நிலைமையேயாம். மருந்தினால் நோய் நீங்கியவரை சாவினின்று தப்பினானென்று கூறும் வழக்கைக்காண்க.

அமிழ்தம் என்னுஞ்சொல், சோற்றையும் பாலையுங் குறிக்கும் இருவேறு சொற்களின் திரிபாகும். அவிழ் = வெந்து மலர்ந்த சோற்றுப்பருக்கை, சோறு. அவிழ்- அவிழ்து- அவிழ்தம்-அமிழ்தம் = உணவு. "அறுசுவை நால்வகை யமிழ்தம்" (மணி. 28:16). அவிழ்து-அமிழ்து- அமுது = சோறு, உணவு, நீர். நீரும் உணவாதலால் அமுதெனப்பெற்றது. அமிழ்தம்-அமுதம் = சோறு, நீர்.

மருமம்- (மம்மம்) - அம்மம் = முலை, தாய்ப்பால், குழந்தையுணவு. பாலும் ஒருவகை யுணவாதலாலும், அம்மம், அமுது என்னுஞ்சொற்களின் ஒருபுடை யொப்புமையினாலும், அமுது என்னுஞ்சொல்லும் பாலைக்குறித்தது. அமுது = பால், அமுதம் = பால், அமிழ்து = பால்.

அமுதம் என்னும் தென்சொல் வடமொழியில் அம்ருத என்னும் வடிவுகொள்ளும். அவ்வடிவை அ+ம்ருத என்று பிரித்து, சாவை(மரணத்தை)த்தவிர்ப்பது என்று பொருளுணர்த்தி, அதற்கேற்ப தேவரும் அசுரரும் திருப்பாற்கடலைக்கடைந்தெடுத்த அமிர்தம் என்று கதையுங்கட்டிவிட்டனர் வடமொழியாளர். தேவர் அமுதமுண்டார் என்பது கட்டுக்கதையாதலால், தேவாமிர்தம் என்னும் இல்பொருளை உண்மையாகக் கூறுவதால் ஒரு பயனுமில்லையென்று உணர்க".

பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் ஆகியோர் உரைகள், அமிர்தம் என்பதற்கு பாற்கடலைக்கடைந்து பெறப்பட்ட தேவாமிர்தம் என்னும் பொருளையே தருகிறது. இது எவ்வாறு தவறென்பதை இறுதியில் காண்போம்.

அதிகாரம் - 7. மக்கட்பேறு.
குறள் எண் - 64.
"அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறுகதை அளாவிய கூழ்".

கூழ் = சோறு. தம் என்னுஞ்சொல், பெற்றோரின் உடற்கூறாயிருந்து அவருடம்பினின்றும் வெளிப்பட்ட மக்களின் நெருங்கிய தொடர்பை உணர்த்தும். தேவரும் (சுரரும்), அசுரரும் திருபாற்கடலைக்கடைந்தெடுத்த சுரையை, தேவர் உண்டதனால் சுரர் எனப்பட்டாரென்றும், அச்சுரை சாவைத்தவிர்த்ததனால் அம்ருத எனப்பெயர் பெற்றதென்றும், கதை கட்டிவிட்டனர். அதைக்குருட்டுத்தனமாய் நம்பிய தமிழர், விண்ணுலகப்பொருளெல்லாம், மண்ணுலகப்பொருனினும் மிகச்சிறந்தவை யென்னும் பொதுக்கருத்துப்பற்றி, தலைசிறந்த இன்சுவை யுண்டியை
 அமிழ்து என்றும், அமிழ்தினும் இனியதென்றும் சொல்லத்தலைப்பட்டனர் - இவை, தேவநேயப்பாவாணர் ஐயாவின் விளக்கவுரை.

அதிகாரம் - 9. விருந்தோம்பல்.
குறள் எண் - 82.
"விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்துஎனினும் வேண்டற்பாற்று அன்று".
சாவாமருந்து = சாவை நீக்கும் மருந்து.

அதிகாரம் - 72. அவையறிதல்.
குறள் எண் - 720.
"அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தர்
அல்லார்முன் கோட்டி கொளல்".

அறிவால் தம்மினத்தவர் அல்லாதவர் உள்ள அவைக்கண், அறிஞராவார் நிகழ்த்தும் அரும்பொருள் சொற்பொழிவு, சாய்கடைக்குள் ஊற்றிய பாலைப்போலும்" - இது தேவநேயப்பாவாணர் ஐயாவின் உரை.
பரிமேலழகர், வ.உ.சிதம்பரனார், நாமக்கல் கவிஞர் ஆகியோர், அமிழ்தம் என்னுஞ்சொல்லை நேரடியாக ஆண்டுவிட்டனர். தேவநேயப்பாவாணர், பால் எனவுரைத்ததில் ஒரு சிறப்புண்டு. பாலென்பது உடனடியாக ஆற்றல் தரும் உணவு. சோறுண்ணும் பருவமெய்தாத குழந்தைகளுக்கும் உணவாக இருப்பது.

அதிகாரம் - 111. புணர்ச்சி மகிழ்தல்.
குறள் எண் - 1106.
"உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டாலால் பேதைக்கு 
அமிழ்தின் இயன்றன தோள்".

"நான் இவளைத்தழுவும் போதெல்லாம் என் உயிர் தழைக்குமாறு தீண்டுதலால், இவ்விளம் பெண்ணிற்குத்தோள்கள் அமிழ்தினால் அமைக்கப்பெற்றனவாய் 
யிருக்கின்றன" - இது தேவநேயப்பாவாணர் ஐயாவின் உரை. பாவாணர் ஐயாவின் இவ்வுரை தலைவன் கூற்றாக அமைந்து, அவனுயிர் தளிர்த்தலைச்சொல்வதாக அமைந்துள்ளது. தீண்டலால், தலைமகள் உயிரும் தளிர்க்குமல்லவா? ஆகவே,  பொதுகூற்றாக இதனைக்கொள்வதே பொருந்தும்.
மேலும், தளிர்த்தலுக்கு, முன்நிகழ்வாக வாடுதல் இருந்திருக்க வேண்டுமல்லவா? அதனை பாவாணரய்யா வெளிப்பட வுரைக்கவில்லை.
 
பரிமேலழகர், 'தன்னைப்பெறாது வாடிய என்னுயிர்' எனவுரைக்கிறார். வ.உ.சிதம்பரனார், 'கூடாத காலத்து இறந்துபடுவதான உயிரைக் கூடியகாலத்துத் தழைக்கப் பண்ணுதலால் தோள்களை அமிழ்தத்துக்கு ஒப்பிட்டான்', எனவுரைக்கிறார். நாமக்கல் கவிஞர், 'உறுதோறுயிர் தளிர்ப்பத் தீண்டலால்' என்பதைத் 'தீண்டல் உறுந்தோறும் உயிர் தளிர்ப்பதால்' என்ற முறையில் பொருள் கொள்ளவேண்டும் என்றும்; ஒவ்வொரு தடவையும் தீண்டல் புதுப்புதுச் துடிப்பை உயிருக்கு உண்டாக்குகிறது என்றும்; அமிர்தம் என்பது ஓய்ந்துவிட்ட உயிரையும் மீண்டும் செழிக்கச் செய்யும் என்று சொல்லப்படுகிற அரியபொருள் என்றும் உரைக்கின்றார். நாமக்கல் கவிஞர்  வாடுதலைப்பற்றி வெளிப்படக்கூறவில்லை என்பதுடன்  புதுப்புதுத் துடிப்பு, பதுப்புதுச் செழிப்புகள், புதுப்புது துளிர்கள் எனக்கூறி, தளிர்த்தலை ஒரு நேர்கோட்டியக்கமாக உருவகப்படுத்துகிறார். பாற்கடல் அமிர்தம் (தேவாமிர்தம்) ஓய்ந்துவிட்ட உயிரை மீண்டும் செழிக்கச்செய்யாது. இயங்குகின்ற உயிர் ஓய்ந்துவிடாமல் காக்கும் 
என்றே சொல்லப்பட்டுள்ளது. இவை இருக்கட்டும்.

இக்குறளில்தான் அமிழ்தம் என்பதற்கான இலக்கணத்தை ஐயன் வுரைக்கிறார். "தோறும்" என்னுஞ்சொல் மிகமுதன்மையானது. ஒவ்வொருமுறை சேரும்போது தளிர்த்தல் நிகழுகிறது. மறுதலையாக நீங்கும்போது வாடுதல் நிகழ்கிறது. இவ்விரண்டும் மாறிமாறி நிகழ்கின்றன. இதுதான் வள்ளுவர் கூறும் அமிழ்திற்கான இலக்கணம்; வரையறை. புராணத்தில் சொல்லப்பட்ட தேவாமிர்தம் ஒருமுறை உண்டால் போதும்; மீண்டும் மீண்டும் உண்ணவேண்டியதில்லை. தேவாமிர்தம் ஒருமுறை உண்டபின் வாடுதல் நிகழ்வதில்லை. 

ஆகவே, மீண்டும் மீண்டும் உண்ணப்படுவதால் சோறு (நீரும் பாலும் உள்ளடங்கும்), உயிரைத்தளிர்ப்பச்செய்கிறது. ஆகவே, உணவு அமிழ்தம்.

ஐயன் திருவள்ளுவர், இரண்டு அமிழ்தங்களைச்சொல்கிறார். உண்ணுந்தோறும் உடலுக்கு ஆற்றலை தரும் "உணவு" என்னும் அமிழ்தம் ஒன்று. உறுதோறும் உள்ளம் (உயிர்) தளிர்க்கக்செய்யும் அன்புடையார் சேர்க்கையாகிய "காதலன்பு" மற்றொன்று. இவை மண்ணுலக அமிழ்தங்கள். நமது துய்பினால் உடலின் பாகமாகவும், உணர்வாகவும் ஆகக்கூடிய மண்ணுலக அமிழ்தங்கள். எனவே, ஐயன் புராணத்தில் சொல்லப்பட்ட தேவாமிர்தத்தைச்சொல்லவில்லை

(நற்றமிழ் புலனம் இரவிச்சந்திரன் ஐயா அவர்களது பதிவிலிருந்து ச.ந.இளஙகுமரன்)

Wednesday, 7 July 2021

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்...

தொல்காப்பியம் சமற்கிருத ஐந்திர நூல் வழியது என்று கதைப்பதற்கு வாய்த்த , தொல்காப்பியப் பனம்பாரர் பாயிர அடிஒன்று.

அது.

"ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்"

என்பது. ஐந்திரம் பொருளாமா?

நிறைந்த

ஐந்திரம் 'ஓதிய இல்லை
ஐந்திரம் 'கற்ற' இல்லை
ஐந்திரம் 'பயின்ற இல்லை
ஐந்திரம் 'படித்த' இல்லை 
ஐந்திரம் 'கேட்ட' இல்லை
ஐந்திரம் உணர்ந்த இல்லை

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன், எத்தகையன்?

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமையோனே"

என்று தொடர்வதன் பொருள் என்ன?

"பொறிவாயில் ஐந்தவித்த பொய்தீர் ஒழுக்கத்தவன்."   (6)

"சுவையொளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை அறிவான்" (27)

"ஐந்தவித்தான் ஆற்றல்" (25)

என்னும் பொய்யாமொழி

“வாளால் போழினும் தாளில் வீழினும் ஒருபடித்தாக இருக்கும் நிலை உள்ளது. உள்ள படி எடுத்தல், படியெடுத்தல். அல்லவா!

"உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு " (26)

என்னும் தவத்தன்; ஐந்திரம் நூல் எனின், அது வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து வழக்கும் செய்யுளும் தழுவியதா! விண்ணவர் கோமான் விழுநூல் என்பர் (சிலப்பதிகாரம் 11:99)' அதுவும் கற்றுப் பெறுவதன்றாம். தீர்த்தநீராடிப் பெறுவதாம் புனைவு.

(செந்தமிழ் அந்தணர் இளங்குமரனார் அவர்களின் தொல்காப்பிய ஆய்விலிருந்து ...  ச.ந.இளங்குமரன். வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.)

Thursday, 17 June 2021

மறம் - வீரம். சொல்லாய்வறிஞர் ப.அருளியார்.

புடவிப் பெரும்பரப்பினுள் மிகவும் பொருள் பொதிந்துள்ளதாகத் தென்படும் உலகவுருண்டையில், வீறொடு உலவி இதனையே ஆண்டு கொண்டிருக்கும் மாந்தவுயிரனின் தோற்றமும் - இயக்கமும் இயற்கை வளர்ச்சியின் படிமலர்ச்சிகளை உடையன! இம் மலர்ச்சி நிலையில், மாந்தவுயிரன் இவ்வாறு உருவாகி நிலைத்துப் பல்கித் தொடர்ந்து பெருகியோங்கி நிற்பதனுள், இவ்வுயிரனின் முன்னைய படிநிலையுயிரிகள் யாவும் பெற்றிருந்த பல்வேறு தன்மைகளும் அல்லது பண்புகளுங் கூடப் படிப்படியே மலர்ச்சியெய்தி வந்துள்ள உண்மையும், இவனின் வளர்ச்சி பற்றிய வரலாற்றில் விளக்கமாகவும் துலக்கமாகவும் புலனாகின்றது.

ஒன்றன் வளர்ச்சிக்கு ஊட்டம் மட்டும் இருந்துவிட்டால் போதுமா?! வளர்ச்சிக்குரிய உயிரிக்கு அதன் வளர்ச்சிநிலைக்கு இடையிடையே பிறிதொன்றால் தாக்கம் நேர்கையில், -- அதற்கு நேர்நிற்கும் எதிரியை எதிர்த்துத் தடுத்து அல்லது தாக்கி -இயலுமானால் அழித்துச் செல்வதுங்கூடத் தேவையாகின்றது! இல்லெனில், அதன் வளர்ச்சிநிலை தடைப்படுவது மட்டுமன்று; இருப்பே கூட இல்லாமற் போய்விடலாம்! எனவேதான், வளர்ச்சிக் குரியவை யாவும், தம்மை எதிர்ப்பனவற்றை எதிர்க்கும்; தம்மைத் தாக்குவனவற்றைத் தாக்கும்; தம்மை அழிக்க முற்படுவனவற்றை அழிக்க முற்படும்; அழிக்கும்! அல்லது, தாம் எதிர்க்க வேண்டியவற்றை எதிர்க்கும்; தாம் தாக்க வேண்டியவற்றைத் தாக்கும்; தாம் அழிக்க வேண்டியவற்றை அழிக்க முற்படும்; அழிக்கும்! இவை யாவும் இயற்கை நெறிகளே!

''மறம்'' என்னும் வீரப் பண்பானது, தமிழர்க்குரிய மிகச் சிறப்புடைய கூறுகளிலொன்றாக மிகவும் பெரிதுபடுத்திப் பேசப்படுகின்றதே!... அம் "மறம்" என்றால், என்ன தெரியுமா? (-"தடுப்பு'--தடுக்கும் ஆற்றல் --- தடுக்குந் திறம் --- ) மறுக்கும் திறம் என்பதேயாகும் (அதாவது, மறு + அம்> மறம்.) தாக்க வருமொன்றைத் தடுப்பது, முதல் செயல்! தாக்க வருகின்ற ஒன்றை, நாமும் அவ்வாறே தாக்குவோமேயானால் -அதனின் தாக்கம் நம் மேல் விழும்! நம் தாக்கம் அதன்மேல் விழும்! இரு நிலைகளுக்கும் அவற்றின்வழி அழிவு நேரலாகும்! தாக்கற்கு எதிராகச் செயத்தக்க முதல் வினை, தாக்குதல் அன்று; தடுப்பே! தடுப்புக்கு அடுத்தே தாக்குதல் தொடுக்க வேண்டும்! இரு மோதுயிரிகளும் - ஒத்த வலிமையும் ஒத்த திறமையும், ஒத்த மதிமையும் கொண்டிருந்தாதாம்  இந்நிலை ஒக்கும்! இவ்விரண்உருவில்தான் மிகுவலிமையுடைய தாகவிருப்பின், பிறிதொன்றாகிய எளியவுயிரியை வலியது எளிதே வீழ்த்திவிடும்! அங்குத் தாக்குதலுக்கெதிரான தடுப்பே பயன்படாது! வலிய ஒன்று - எளிய ஒன்றைத் தடுக்கையினாற் கூட வீழ்த்த வழியுண்டு! தாக்குதலுக்கு எதிர்வினை தாங்குதல்![ஒநோ : தாங்கு தல் = பொறுத்தல்;பொறுத்தலால் அதாவது தாங்குதலால் தடுத்து நிறுத்தல் ஒ.நோ தாங்கு + அல் தாங்கல் = வெளியேறாவாறு நீரைத் தடுத்துவைத்துக்கொண்டிருக்கும் பெருங்குளம். (காண்க:) வேடன் தாங்கல். தாங்கல்> (English ) Tank.

காண்க : நூல்:'தகுதி”---அருளி (1979)] தடுப்பதிலும் மிகப்பல முறைகள் உள! தடுப்பதற்கும் மிக்க ஆற்றல் வேண்டும்! தாக்க முற்படும் உயிரியினும் - தாக்குதலுற நிற்கும் உயிரிக்குத் தடுக்குந்திறன் வேண்டும். இல்லெனில், தாக்குற்றுத் தடுக்குற்றுத் தலை சாயலாகும்!

ஒருயிரி தாக்க முற்படுகையில் --- அதனைத் தாங்கித் தடுக்கும் பிறிதோர் உயிரியின் எதிர்முயற்சிள் பல திறத்தன! படிப்படியே,-இருப்பு விருப்பு பற்றி உயிரிகளிடம் இத் திறன்கள் வளர்ந்தன! பிற உயிரிகளின் தாக்குதல் -- தடுத்தல் வினைமுறைகளை நன்கு கூர்ந்து நோக்கி வந்த மாந்தவுயிரன் தன் அறிவுத் திறத்தால் அவற்றிடையிலான நுண்ணுட்பங்களை மேலும் மேலும் விளங்கிக் கொண்டவனாய் அவ்வாறே அவற்றைப் பின்பற்றவும் -சில நிலைகளில் அவற்றை மேலுந் திருத்திச் செப்பஞ்செய்து கொண்டநிலையில் பயன்படுத்தவுந்தொடங்கி, மிக மிக வளர்ந்தான்! [தமிழகத்துக்கே உரிய பண்டைய சண்டை முறைகளில் சிலவற்றைப் பயிலும் வாய்ப்பு நேர்ந்தபோது, தடுக்கும்போதே -தடுக்கும் அதே முறைமையிலேயே, அதே கணத்திலேயே தாக்குதலையும் உடன் நிகழ்த்தி விடும் நுண்வினைப் போக்கின் கணக்கு முறையானது -- எனக்கு மிகவும் வியப்பளித்தது!] [இம் முறைமை, - அவனே தனக்குத்தானே எண்ணி உருவாக்கிய ஒன்றன்று! கண்டு பிடித்தது! அதாவது, பிற போருயிரிகளின் தாக்குதல் - -தாங்குதல் (தடுத்தல்) முறைகளைக் கண்டு நன்கு உட்கொண்டு, தானும் அவற்றைப் பயின்று பயன் கொண்டது, அது!]

வலிமையற்ற உயிரியொன்று, வலிமையார்ந்த பிற உயிரி யொன்றின் தாக்குதலுக்கு ஈடுகொடுத்து எதிர்த்து நிற்கத் திடாரிக்கமும் இல்லாநிலையில் திராணியும் --- என்ன செய்யும் ? அவ்விடத்தினின்று பிரிந்து தப்பித்து ஓடும் ! இவ் வினையுங் கூட - ஒரு வகையில் காப்பு வினையே!

இப்பொழுது நாம் காணும் குதிரை,-- மிகு பண்டைய தொடக்கக் காலத்தில் நரியளவான உருவில்தான் இருந்தது! அதனைப் போலும் கருவமைந்திருந்த பிற விலங்குகளுக்குப் பெரும்பாலும் கொம்புகள் அமைந்திருந்தன! அவற்றில் தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தான் - அவற்றைக் கண்டு பறக்கப்பறக்க ஓடி ஓட்டத்திலேயே - அல்லது ஓட்டத்தினாலேயே தப்பித்துக் தப்பித்துத் தன் இன வளர்ச்சிலையே காத்துக்கொண்டது! இன்றைக்கு ஆற்றல் அலகையே குதிரையின் வலிமைக்கு ஈடாகக் கணக்கிடக்கூடிய நிலைக்கு அதவின் தற்காப்பு முயற்சியான ஓட்டமே காரணமாக அமைந்தது? (Horse-Power பரித்திறன்)

விலங்குகளுக்குத் தலைமீது வாய்த்திருக்கும் கொம்புகள் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கால்விரல்களின் துனிப்பகுதிகளில் வல்லிதாக வாய்த்திருக்கும் உகிர்கள்[நகங்கள்)ஊருபிரிகளான நண்டு. தேன், நட்டுவக் காலி முதலியவற்றுக்கு வாய்த்திருக்கும் கொடுக்குகள்' போன்றன யாவும். - அவையலையும் தற்காப்புக்கௌத் தாம் முயன்ற முயற்சி வினைகளுக்குப் பரிசுகளாகப் படிப்படியே இயற்கை தந்த எழுச்சிக் கருவிகளாகுவளவே! அலையே- அவற்றின் தற்காப்புப்படைக் கலங்களும் -க்கற்கலங்களும் ஆகி நீடினர்

செடி கொடி மரங்களாகிய நிலைத்திணைகள் சிலவற்றின் மீது கரிதாக நீடி முனைத்திருக்கும் முன்ளெழுச்சிகள் கூட— அவற்றின் தற்காப்புக்கெனத் தோற்றிக் கொண்ட படைக்கலங்களேயாகும்!

தவிர்க்க முடியாவாறு வளர்ந்து கொண்டேயிருக்கும் விரல் உகிர்களை (நகங்களை) இன்றைக்குத் தேவையற்றனவாக நாம்தெளிந்த நிலையில் சீவியெறிந்து குப்பையொடு சேர்க்கின்றோமே, இவ்வுகிர்கன்யாவும் --- தம்மின் பண்டைய முன்னுயிரிகள் தம் தற்காப்புக்கெளவும் ---தாக்கற்கெளவும் தாமே வளர்த்தெடுத்த கூர்ங் கருவிகளின் எச்சவினைவுகளின் இன்றைய காட்சிப் பொருள்களே!

தாக்கு என்பதுவும் - தற்காப்பு என்பதுவும் ஒரு காசின் இரு பக்கங்கள் போல்வன ! இரண்டு முயற்சிகளுமே - உயிரியின் படிநிலை மலர்ச்சியிலும் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றிய மூலவினைகளாகும்! உயிரிக்கு உள்ள உணர்ச்சிகளில் அடிப்படை உணர்ச்சிகளான பசியும் காமமும் போன்று — புற வினைமுறைகளில் இவை மூலவினைகள்

வலிய உயிரியொன்று - எனிய உயிரியொன்றை ~ அல்லது தன் இனத்தில் வலிவற்ற உயிரியொன்றைத் தாக்க முற்படுகையில் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத தேர்உயிரி. அதன் முன்னீடாக வளைவது அல்லது கருள்வது என்பது இயற்கை வினை ! இவ் " வளைவு என்பது,[வலியதன் முன் எளியதானது -) ஒடுங்குவதன் அல்லது அடங்குவதன் அடையாளக் காட்சியாகும்! இவ்வியற்கை வினைமுறை, தோற்ற ஒற்றைப் புரையன் (one cellular object ] தொடங்கி - மாந்தவுயிரன் ஈறாக அனைத்துயிரிகளிடத்தும் படிவுகொண்டு தொடர்ந்தது; தொடர்கின்றது; தொடரும்!

தாக்கத்தை எதிர்கொள்ள முடியாத உயிரி, - அத்தாக்கத்தின்வழி நேரவுள்ள விளைவெண்ணி - அதற்கும் முன்னரேயே தான் உள்ளங் கொள்ளுவதாகிய வளைவு உணர்ச்சியே - மனவளைவே “அச்சம்” என்னும் பெயரால் தமிழமாந்தனால் சுட்டப்பெற்றது!

இவ்வுணர்ச்சியைக் குறித்துத் தமிழர் வழங்கிய சொற்களாக -

1. அஞ்சு 2. அச்சு 3. அச்சம் 4. அச்சலிப்பு 5. வெருவு (வெரூஉ) 6. வெருட்சி 7.உட்கு 8.சூர் 9. கொன் 10.நடுக்கம் 11. அதிர்ப்பு 12. விதிர்ப்பு 13. விதர்ப்பு 14. பனிப்பு 15. உரு 16. உரும் 17. உரும்பு 18. பலம்பு 19. கவலை 20. கலங்கள் 21. கலக்கு 22. கலக்கம் 23. பேம் 24. அணங்கு 25. அடுப்பு 26. விறப்பு 27. பிறப்பு 28. வெறி 29.வெறுப்பு 30, வெடி 31.நாம் 32.நாமம் - என்னும் முப்பத்திரண்டு எண்ணிக்கையின, தமிழ் இலக்கிய இலக்கண நூல்களிலும் சொற்றொகை நூல்களிலும் விரவலாகப் பரவிப் படர்ந்து காட்சியளிக்கின்றன!

(தமிழரிமா ப.அருளியார் ஐயா அவர்களது பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம்.