இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 27 December 2021

திருக்குறள் சொல்போட்டி

மாநில அளவிலான திருக்குறள் சொல் போட்டி....

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் நற்றமிழ்ப் புலனம் இணைந்து நடத்தும் "உலகத் தமிழ் கூடல்" சார்பில் மாநில அளவிலான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி இணைய வழியில் சிறப்பாக நடைபெற்றது.  இதில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையான மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்வில் தேனி, கோவில்பட்டி, இராசபாளையம், ஒட்டன்சத்திரம், கோவை சென்னை, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதிகாரத்தின் பெயர் சொல்லி திருக்குறள் ஒப்புவித்தல், திருக்குறளின் முதல் அல்லது கடைசி வார்த்தையை சொல்லி அதற்குரிய குறளைச் சொல்வது, வரிசை எண்ணைக் கூறி அதற்கான திருக்குறளை ஒப்புவித்தல் என பல வடிவங்களில் 6 சுற்றுகளாக போட்டி நடந்தது. போட்டியில் இராசபாளையத்தை சேர்ந்த பாலகுமாரா, தேனி மாவட்டம் போடியை சேர்ந்த அபிநயா, கோவையைச் சேர்ந்த தேஜஸ் ஸ்ரீராம் ஆகியோர் முதல் மூன்று பரிசுகளைப் பெற்றனர். மற்றும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. போட்டியினை கவிஞர் லட்சுமி குமரேசன் கவிஞர் செல்வராணி ஆகியோர் சிறப்பாக நடத்திக் கொடுத்தனர். புலவர் ச.ந.இளங்குமரன், தமிழ்ச்செம்மல் முத்துமணி,  புலவர் இராசேந்திரனார் ஆகியோர் நிகழ்ச்சி அமைப்பாளராக பணியாற்றினர். நிகழ்வின் முதல் மூன்று பரிசினை எழுத்தாளர் முத்துக்கிருட்டிணன், புலவர் இராசேந்திரனார் ஆகியோர் இணைந்து வழங்கினர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சிறப்பு பரிசினை செந்தமிழ் தேனீ ஜெயராமனார் வழங்கிச் சிறப்பித்தார்.  நிறைவாக நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நிகழ்வினை வையைத் தமிழ்ச்சங்க நிறுவனரும், உலகத்தமிழ்க் கூடல் அமைப்பாளருமான புலவர் இளங்குமரன் இணைய வழியில் ஒருங்கிணைத்துச் செயலபடுத்தினர். நிகழ்வு தேனி வையைத் தமிழ்ச்சங்கம் தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது.

முதல்இடம் பெற்றவர் - பாலகுமரா- இராசபாளையம் 
பரிசு உரூ 600 மற்றும் சான்றிதழ்

இரண்டாவது இடம்-  அபிநயா தேனி பரிசு 500/- மற்றும் சான்றிதழ்

மூன்றாவது இடம்-  தேஜஸ்ஸ்ரீராம்
கோவை உரூ -400 மற்றும் சான்றிதழ்

நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசு / 100/- பெறுகிறார்கள்

பரிசு வழங்கியவர்கள்
 திரு . முத்துகிருட்டிணன் - 1000/-
புலவர் ராசேந்திரனார் - 500/-
செந்தமிழ்த்தேனீ - அனைவருக்கும் 100 ஊக்கப் பரிசு வழங்குகிறார்கள்.

அனைவருக்கும் நன்றியும் வாழ்த்தும்.

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன் நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி
அமைப்பாளர் 
உலகத் தமிழ்க்கூடல்

No comments:

Post a Comment