இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 10 September 2021

குறள்நெறித் தமிழ்த் திருமணம் - புலவர் ச.ந.இளங்குமரன்

10-09-2021 இன்று சங்கரன் கோவிலில் இ.மகேந்திரன் - இரா.கவிதா இணையருக்கு குறள் நெறியில் திருமணம் நிகழ்த்தி வைத்தேன். நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செ.பசும்பொன், தமிழாசிரியர் மகேந்திரன், ஆகியோர் வாழ்த்துரைக்க, நாம்தமிழர் கட்சியின் தங்கவேலு அவர்கள் நன்றி சொல்ல சங்கரன் கோவில் தாய்த்தமிழ்ப் பள்ளியின் தாளாளர் பட்டிமன்றப் பேச்சாளர் முனைவர் சங்கர்ராம் அவர்கள் விழா ஏற்பாட்டைச் சிறப்பாகச் செய்திருந்தார். அனைவரது சிறப்பான ஒத்துழைப்போடு திருமணம் நடந்தது. திருமண நிறைவில் இளைஞர்கள் பலரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இத்திருமண விழா மிகவும் சிறப்புடையது. பரவலாக்கப்பட வேண்டியது என்று சொல்லி இளைஞர்கள் பலரும் நாங்கள் பலரும் பல உங்களுக்குத் துணையாக நிற்போம் என்று ஊக்கம் கொடுத்தது நெகிழ்வாக இருந்தது. இந்த நல்லதொரு விழவிற்கு இணைப்பு ஏற்படுத்திக் கொடுத்த உலகத் தமிழ்க் கழகத் தலைவர் ஐயா நிலவழகனாருக்கும், சங்கரன் கோவிலில் இறங்கியதுமுதல் கூடவே இருந்து உணவளித்து தமிழர்கள் விருந்தோம்பல் பண்புக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சங்கர்ராம் ஐயா, அவர்களது துணைவியார் உள்ளிட்ட குடும்பதார்க்கும் நன்றி சொல்லி மணமக்களுக்கு நான் எழ்திய திருக்குறள் உரையைப் பரிசாக வழங்கி மீண்டும் தேனிக்குப் பயணமானேன். பாவாணர் கோட்டத்திற்குச் செல்லவேண்டும் என்ற நினைவு நெஞ்சை வாட்டினாலும் உடல் நலக்குறைவால் மீண்டும் தேனிக்குத் திரும்பினேன்.

இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி, நாகலாபுரம்.

No comments:

Post a Comment