தமிழ்நாட்டு அரசியலில்
தவிர்க்க முடியாத
பேரதிசயம்
அண்ணா!
இலக்கியத்தில்
நிலையாமையை
உணர்த்தும் திணை
காஞ்சி!
அண்ணா உன்
பிறப்பால்
நிலைத்துப்
புகழ்பெற்றது
காஞ்சி!
முந்தைய காலத்தின்
தொடர்ச்சி!
பிந்தைய காலத்தின்
பெரும் புரட்சி
அண்ணாவின் ஆட்சி!
மண்ணுக்கும்
பெண்ணுக்கும்
பொன்னுக்கும்
போர்செய்த
வரலாற்றைப்
புறம்தள்ளி
பேசும் மொழிக்காக
அரசியல் களம்
கண்ட அறிஞர்
அண்ணா!
தமிழ் தமிழரென்ற
பேசுபொருளுக்குச்
சொந்தக்காரர்!
இந்தியின் ஆதிக்கத்தை
இல்லாது ஒழிக்க
இருமொழிக்
கொள்கையை
ஏந்திய ஏந்தல்!
தமிழ்நாடு பெயர்தந்தாய்!
தமிழ் வாழப் பணிசெய்தாய்!
தமிழர் திருமணங்கள்
தழைக்கச் செய்தாய்!
எழுத்தில் புதுநடை!
பேச்சில் புரட்சி!
நாடகத்தில்
பகுத்தறிவு!
மக்களுக்குச் சமூகநீதி!
சாதியத்திற்குச் சவுக்கடி!
மூடத்த தனங்களுக்கு
முற்றுப்புள்ளி!
அண்ணலே
உன் பிறந்தநாளில்
பெருமிதம் கொள்கிறோம்!
No comments:
Post a Comment