இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 14 October 2021

கார் நாற்பது (மூலமும் உரையும்) ச.ந.இளங்குமரன்

கார் நாற்பது
(மூலமும் உரையும்)

தோழி தலைமகட்குப் பருவங்காட்டி வற்புறுத்தியது.

2. கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வ மெய்த நெடுங்காடு நேர்சினை யீனக் - கொடுங்குழாய் இன்னே வருவர் நமரென் றெழில்வான மின்னு மவர்தூ துரைத்து.

வளைந்த அழகிய காதணிகளை அணிந்தவளே, கதிரவனின் நிறைந்த செல்வமான வெப்பம் குறையும் படியாக, நெடிய காடானது மிகுந்த அரும்புகளை ஈன்று கார்காலத்தின் வளத்தை வெளிப்படுத்த, எழுச்சிமிக்க வானம் நமது தலைவர் இப்போதே வருவார் என்று  மின்னி தூதாக உரைத்தது.

3. வரிநிறப் பாதிரி வாட வளிபோழ்ந்
தயிர்மணற் றண்புறவி னாலி - புரள
உருமிடி வான மிழிய வெழுமே
நெருந லொருத்தி திறத்து.

வேனிற் பூவான வரிநிறத்தை யுடைய பாதிரிப் பூக்கள் வாடும்படியாக காற்றானது உள்ளேபுக, நுண்ணிய இளமணலையுடைய குளிர்ந்த காட்டில் ஆலங்கட்டிகள் புரள, தலைவனை எண்ணித் தனித்திருக்கும் ஒருத்தி வருந்தும் படியாக வானமானது இடியிடித்து  மழையைப் பொழிந்தது.

உரை :- 
ச.ந.இளங்குமரன், வையைத் தமிழ்ச்சங்கம் - தேனி.

No comments:

Post a Comment