இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 18 August 2021

எல்லாப் புகழும் தமிழுக்கே - ச.ந.இளங்குமரன்

எல்லாப் புகழும் தமிழுக்கே...

தேவாரம் பகுதியைச் சேர்ந்த அறிவுச்செல்வம் ஜெயமணி இணையரின் செல்வக்குழந்தைகள்  சாலினி, சாமினி, ரோசினி ஆகிய 3 பேரும் இன்று திருக்குறளில் வலம் வருகின்றனர். 1330 குறட்பாக்களையும் சுமார் 1 - 30 மணி நேரத்தில் சொல்லி சாதனை படைத்து வருகின்றனர். இந்தக் குழந்தைகள் நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தில் திருக்குறள் முற்றோதல் செய்து மன்றத்தின் சார்பில் 1330  ரூபா பரிசு பெற்றனர். பின்பு தேனி வையைத் தமிழ்ச்சங்கம்  மூலமாக ரூபாய் ஈராயிரம் தொழிலதிபர் கல்வி வள்ளல் கருணாகரன் அவர்களால் கொடுத்துப் பெருமைப் படுத்தப்பட்டது. இந்த இரண்டு குழந்தைகளுக்கும் வையைத் தமிழ் சங்கத்தின் மூலமும், நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றத்தின் மூலமாகவும் விருதுகளை வழங்கி சிறப்பித்த நிலையில்,  தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற திருக்குறள் போட்டியிலும் நாகலாபுரம் திருவள்ளுவர் மன்றம் சார்பில் பரிந்துரை செய்யப்பட்டு போட்டியில் கலந்துகொண்டு  வெற்றி  பெற்று அரசின் பரிசுத்தொகை ரூபாய் 10 ஆயிரம் பரிசு பெற்றுள்ளனர். தற்பொழுது இந்த குழந்தைகளுக்கு சென்னை தமிழ்நாடு திருவள்ளுவர் கலை இலக்கியச் சங்கம் சாதனையாளர் விருது அளித்து சிறப்பித் இருக்கின்றது. இந்த குழந்தைகளைப் பற்றிய நீண்ட கட்டுரை தம்பி கதிர்மாயக் கண்ணன் அவர்களின் மூலம் தினத்தந்தியில் வெளியானது. தற்போது தினமலர் நாளிதழில் அக்கம்பக்கம் பகுதியில் இந்தக் குழந்தைகளைப் பற்றிய செய்தி வெளியாகியிருக்கிறது. இந்த செய்தியை பார்த்தவுடன் எனக்கு வியப்போடு கண்ணீர் பெருக்கெடுத்தது.   காரணம் இந்த மூன்று குழந்தைகளையும் அரும்பாடுபட்டு திருக்குறளின் பால் பற்றுக் கொள்ள வைத்து அந்த பெற்றோர்களுடைய  பேட்டியில் "எனக்கு திருக்குறளில் ஆர்வம் ஏற்படக் காரணம் குறளாய முறையில் திருமணம் நடத்தி வரும் வையைத் தமிழ்ச்சங்கம் இளங்குமரன் என்று எனது பெயரைப் பதிவு செய்துள்ளதை பார்த்தேன். கண்கள் குளமாகின. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழுக்கும் குறளுக்கும் தொண்டு செய்வதையே இலக்காக கொண்டு  மொழிக்கும், இனத்திற்குமான மீட்சியைக் கருத்தில் கொண்டு இயங்கி வருகின்ற இளங்குமரன் எங்கோ ஒரு மூலையில் யாருக்கோ நடத்திவைத்த திருமண நிகழ்வில் கலந்து கொண்ட அந்தத் தாய் ஜெயமணி அவர்கள் திருக்குறளின் பால் பற்று கொண்டு தன்னுடைய குழந்தைகளை உருவாக்கி இருக்கிறார்கள் என்றால் நாம் செய்கின்ற தமிழ்த்தொண்டு ஏதோ ஒரு மூலையில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது, எங்கோ ஒரு மூலையில் அது விதையாகி முளைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன். அதே பொழுது இதைப் போன்று எத்தனை பெற்றோர்கள் முன்னெடுத்து இருக்கிறார்கள்? என்று கேள்வியும் எனக்குள் எழுகிறது. இயல்பாக ஜெயமணி அம்மையார் அவர்களிடம் இருந்த தமிழ் உணர்வு அந்தத் திருமணத்தின் மூலமாக முடுக்கி விடப்பட்ட தாகவே எண்ணுகிறேன். இதில் என் பங்கு எதுவும் இல்லை. எல்லாமே தமிழின் பங்கு, திருவள்ளுவர் பங்குமாம். என்னை இவ்வழியில் உருவாக்கிய என் ஆசான்மார்கள் ச.சிவசங்கர், இரா.இளங்குமரனார்க்கும், தமிழ்ப்பெருமாட்டி ஜெயமணி அம்மையார்க்கும் அவரின் கணவர் அறிவுச் செல்வத்திற்கும் எனது நன்றியும் வாழ்த்தும்.

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்.

No comments:

Post a Comment