இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 16 February 2020

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் - திருக்குறள் முப்பால் கவியரங்கம் - நல்குரவு- அன்புத்தமிழன் தேனி


நல்குரவு   -   வறுமை 

****************

கந்தல் கந்தலாய்
ஆடையுடுத்திக் கொண்டவனொருவன் !

கலைந்த தலையுடன்
கால் வயிற்றுச் சோற்றுக்காய் 

அனல் கொதித்திடும் 
சூளையில் உழைத்திடுபவனொருவன் !

தூங்கும் நேரமதிலும்
ஓடிக் கொண்டிருப்பவனொருவன் !

அமர்ந்து இளைப்பாறக் கூட
நேரமில்லாத கூலித்தொழிலாளியொருவன் !

பகல் முழுவதும்
அலைந்து இரவானதும்

படுத்துறங்க வீடில்லாத 
வீதி வாசியொருவன் !

பிள்ளைகளின் பசிபோக்கிட
உடல் விற்கும் விலைமாதுவொருவள் !

கையேந்தி நின்றவனொருவன்
அனைவரின் இந்நிலை அறிந்தும்

கண்டும் காணாது
போனவர்கள் ஏராளம்

கோடி கோடியாய் இருந்த போதும்
கொடுத்துவிட மனமில்லாத மனிதர்கள்

இவர்கள் வசதியாய் இருந்தும்
வறுமையில் வாழ்பவர்களே !


         தமிழன்னை ஆசியுடன்
         அன்புதமிழன் 🖋




No comments:

Post a Comment