இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 16 February 2020

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் - திருக்குறள் முப்பால் கவியரங்கம் கவிஞர் அனுராஜ் போடிநாயக்கனூர் தேனிமாவட்டம்



வாழ்வது_சிறக்கத்_திருக்குறளே..
அறனை  விதைத்த குறளாவாய்
_
அகிலம் சிறக்கத் துணையாவாய்..!
புறத்தில் புதுமைப் பொழிவுடனே
_
பொய்மை நாளும் தவிர்த்திடுவாய்..!

அன்பின் வழியில் நடப்போர்க்கு

_ அறமே வாழ்வில் நிலைத்திருக்கும்..!
பண்பின் நெறியைப் பின்பற்றிப்
_
பகுத்தே நீயும் வாழ்ந்திடுவாய்..!

குடியை உயர்த்த நினைப்பவர்க்கு
_
குடியும் கெடுமே சோம்பலினால்..!
குடியில் பெருமை உடையோரும்
_
குற்றம் புரியார் ஒழுக்கத்தில்..!

நட்பின் பெருமை அறிவதற்கே
_
நயமாய் பலவும் குறளுண்டு..!
நட்பே யென்றும் இடித்துரைத்து
_
நலமும் வாழ்வில் விளைவிக்கும்..!

தேனாய்க் குறளைக் கற்றிடவே
_
தெவிட்டா யின்பம் சுரந்திடுமே..!
ஊனாய் உயிராய் விரும்பியதை
_
உள்ளம் மகிழக் கற்பீரே..!

மெய்யாய் குறளும் செப்பிடுமே
_
மேன்மை மிகுந்த வாழ்வியலை..!
அய்யன் காட்டிய வழியிதுவே
_
அழகிய நூலாம் திருக்குறளே..!

கவிஞர் அனுராஜ்..

போடிநாயக்கனூர்..

No comments:

Post a Comment