21-01-1020 இன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டிபட்டி- தேனி வையைத் தமிழ்ச் சங்கம் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் திருமதி சோ.கி.கல்யாணி அவர்கள் தலைமை ஏற்றார். முனைவர் பேராசிரியர் சுரேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் தேனி வையை தமிழ் சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு *தமிழின் சிறப்புகள்* என்னும் தலைப்பில் புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள் உலக மொழிகளுக் கெல்லாம் தமிழ் மொழி எவ்வாறு தாய் மொழியாக இருக்கிறது? தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, இலக்கணச் செழுமை, இலக்கிய வளமை என்பதோடு தமிழ்மொழி பல்வேறு மொழிகளுக்கு மூல வேராக இருக்கின்ற தன்மைகுறித்தும், தமிழ்ச் சொற்கள் பல்வேறு மொழிகளிலும் எவ்வாறு பரந்து கிடக்கின்றன போன்றவற்றையும், தமிழ்மொழியின் தேவைகுறித்தும், தமிழ்மொழிக்கல்வியின் தேவை குறித்தும், தமிழால் கிடைக்கும் உயர்வு, புகழ் குறித்தும் பேசினார். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கைதட்டி ஆர்ப்பரிப்போடு தமிழ் மொழியின் சிறப்புகளைக் கேட்டு மகிழ்ந்து விழாவினைச் சிறப்பித்தனர். இந்த இனிய நிகழ்வில் மதுரை தொல்காப்பியர் மன்றத்தலைவர் தலைவர் இருளப்பன், மதுரைக் கவிஞர்கள் மன்றத் தலைவர் சுந்தரம் பாண்டி, ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்பக உரிமையாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், திரைப்பட வசனகர்த்தா ராசி. தங்கத்துரை, பாவாணர் கல்வியகத்தம்பி கவிஞர் செல்வக்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவினை பேரா.அழகர்சாமி அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் நிறைவில் மூன்றாம் ஆண்டு பொருளாதார மாணவர் அர்ஜுன் அவர்கள் நன்றியுரை நவின்றார்.
விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் திருமதி சோ.கி.கல்யாணி அவர்கள் தலைமை ஏற்றார். முனைவர் பேராசிரியர் சுரேஷ் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்வில் தேனி வையை தமிழ் சங்கத்தின் சார்பில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு *தமிழின் சிறப்புகள்* என்னும் தலைப்பில் புலவர் ச.ந.இளங்குமரன் அவர்கள் உலக மொழிகளுக் கெல்லாம் தமிழ் மொழி எவ்வாறு தாய் மொழியாக இருக்கிறது? தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, இலக்கணச் செழுமை, இலக்கிய வளமை என்பதோடு தமிழ்மொழி பல்வேறு மொழிகளுக்கு மூல வேராக இருக்கின்ற தன்மைகுறித்தும், தமிழ்ச் சொற்கள் பல்வேறு மொழிகளிலும் எவ்வாறு பரந்து கிடக்கின்றன போன்றவற்றையும், தமிழ்மொழியின் தேவைகுறித்தும், தமிழ்மொழிக்கல்வியின் தேவை குறித்தும், தமிழால் கிடைக்கும் உயர்வு, புகழ் குறித்தும் பேசினார். சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு கைதட்டி ஆர்ப்பரிப்போடு தமிழ் மொழியின் சிறப்புகளைக் கேட்டு மகிழ்ந்து விழாவினைச் சிறப்பித்தனர். இந்த இனிய நிகழ்வில் மதுரை தொல்காப்பியர் மன்றத்தலைவர் தலைவர் இருளப்பன், மதுரைக் கவிஞர்கள் மன்றத் தலைவர் சுந்தரம் பாண்டி, ஆண்டிபட்டி உமா நாராயணன் பதிப்பக உரிமையாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், திரைப்பட வசனகர்த்தா ராசி. தங்கத்துரை, பாவாணர் கல்வியகத்தம்பி கவிஞர் செல்வக்குமரன் மற்றும் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். விழாவினை பேரா.அழகர்சாமி அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் நிறைவில் மூன்றாம் ஆண்டு பொருளாதார மாணவர் அர்ஜுன் அவர்கள் நன்றியுரை நவின்றார்.