இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 29 May 2021

தமிழே உலக மொழிகளின் தாய்.

தமிழ் முதற்றாய்மொழி யென்பதற்குக் காரணங்கள்

 1) மாந்தன் பிறந்தகமாகிய குமரிக்கண்டத்தில் தமிழ் தோன்தி ( யுள்ளமை.

2) இதுபோதுள்ள மொழிகளுள் தமிழ் மிகப் பழைமையான
தாயிருத்தல்,

(3) தமிழ் எளிய வொலிகளைக் கொண்டிருத்தல்,

(4) தமிழிற் சிறப்புப்பொருள் தருஞ் சொற்கள் பிற மொழிகளில் பொதுப்பொருள் தருதல்.

எ-டு: செப்பு (தெ), தா (இலத்தீன்).

(5) தமிழ் இயற்கையான சொல்வளர்ச்சி யுடைமை (செயற்கை யான சொல்வளர்ச்சியின்மை).

(6) ஆரிய சேமியமொழிச் சொற்கள் பலவற்றின் வேரைத் தமிழ் தன்னகத்துக் கொண்டிருத்தல்.

(7) பல மொழிகளின் மூவிடப் பதிற்பெயர்கள் தமிழ்ப் பெயர்களைப் பெரிதுஞ் சிறிதும் ஒத்திருத்தல். 

(8) தாய்தந்தையரைக் குறிக்கும் தமிழ் முறைப்பெயர்கள்,
ஏறத்தாழ எல்லா மொழிகளிலும் திரிந்தும் திரியாதும் வழங்கி வருதல்.

(9) தமிழ்ச்சொற்கள் வழங்காப் பெருமொழி உலகத்திலின்மை.

(10) ஒரு தனிமொழிக்குரிய தோற்ற வளர்ச்சி முறைகளைத் தமிழே தெரிவித்தல்.

(11) சில பல இலக்கண நெறிமுறைகள் தமிழுக்கும் பிற மொழிகட்கும் பொதுவாயிருத்தல்,

(12) பல மொழிகள் தமிழிலுள்ள ஒருபொருட் பலசொற்களுள்

ஒவ்வொன்றைத் தெரிந்துகொண்டிருத்தல். எ-டு:இல் (தெலுங்கு), மனை (கன்னடம்), அகம் (கிரேக்கம்), குடி (பின்னியம்)

(13) பிறமொழிகட்குச் சிறப்பாகக் கூறப்படும் இயல்களின் மூல நிலைகள் தமிழிலிருத்தல். (எ-டு) ஆரிய மொழிகளின் அசை யழுத்தமும் சித்திய மொழிகளின் உயிரிசைவு மாற்றமும் அமெரிக்க மொழிகளின் பல்தொகை நிலையும் போல்வன.

(மொழிஞாயிறு பாவாணர் பதிவிலிருந்து ச.ந.இளங்குமரன்வையைத் தமிழ்ச்சங்கம் தேனி)

No comments:

Post a Comment