தேவர் சமயம் சன்மார்க்கம்...!
ஈரத் துறவி வள்ளல் பெருமான்!
வீரத் துறவி விவேகா நந்தர்!
இரண்டும் ஒன்றாய் இணைந்த உருவம் !
இறவாப் புகழுடன் வாழும் தெய்வம் !
திருக்குறள் தன்னில் தோய்ந்தவர் தேவர் !
அருட்பா வாழ்வு வாழ்ந்தவர் தேவர்!
கருப்படு பொருளை உருப்பெற வைக்கும்
அறநெறி அண்ணல் பசும்பொன் தேவர்!
வள்ளல் பெருமான் வழியில் நின்ற
வெள்ளுடை வேந்தர் தேவர் பெருமான் !
உள்ளம் அனிச்ச மலரினும் மெல்லிது !
வள்ளல் தன்மையோ வானினும் உயர்ந்தது!
காவி உடையினை விரும்பிய தில்லை !
காவிக் கொள்கையை ஏற்றவர் இல்லை !
நாவலந் தீவினைத் தாண்டிய மதத்தையும் !
நாவால் பழித்து நயந்தவர் இல்லை !
அறச்செயல் அற்ற அரசியல் வாதிகள் !
திறம்படத் திரித்த பொய்களி னாலே !
அரசியல் களத்தில் சூழ்ச்சிகள் அறியா !
அறச்செயல் மறவர் பழிகளைச் சுமந்தார் !
தேவரை மதத்தில் அடைப்பது தவறு !
தேவர் நமது தேசியத் தலைவர்!
தேவர் மக்கள் அனைவருக்கும் பொதுவர் !
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி