வல்லினம் மிகுதலும், மிகாமையும். - 4.
ஆ) எந்த + காலம் = எந்தக்காலம்
எந்த + சிறுவன் = எந்தச்சிறுவன்
எந்த + தளிர் = எந்தத்தளிர்
எந்த +பையன் = எந்தப்பையன்
இ) அங்கு, இங்கு - என்னும் சொற்களின் பின் க ச த ப மிகும்
அங்கு+கண்டான் = அங்குக் கண்டான்
அங்கு + சென்றான் = அங்குச் சென்றான்
அங்கு+தங்கினான் = அங்குத் தங்கினான்
அங்கு+போனான் = அங்குப் போனான்
இங்கு+குத்தினான் = இங்குக் குத்தினான்
இங்கு+ சருக்கினான் = இங்குச் சருக்கினாள்
இங்கு + தூங்கினான் = இங்குத் தூங்கினான்
இங்கு +பாடினான் = இங்குப் பாடினான்
ஈ) ஆங்கு, ஈங்கு என்னும் சொற்களின் பின் கசதப
மிகும்.
ஆங்கு + கூடினர் = அங்குக் கூடினர்
ஆங்கு + சாத்தினான் = ஆங்குச் சாத்தினான்
ஆங்கு + தாவினான் = ஆங்குத் தாவினான்.
ஆங்கு + பதுங்கினான் = ஆங்குப் பதுங்கினான்
ஈங்கு + கடாசினான் = ஈங்குக் கடாசினான்
ஈங்கு + சாடினான் = ஈங்குச் சாடினான்
ஈங்கு + திருடினான் = ஈங்குத்திருடினான்
ஈங்கு + பகிர்ந்தான் = ஈங்குப்பகிர்ந்தான்
உ) அந்த இடம், இந்த இடம் எனப் பொருள் தருகின்ற ஆண்டு, ஈண்டு ஆகிய சொற்களின் பின் கசதப மிகும்.
ஆண்டு + கக்கினான் = ஆண்டுக் கக்கினான்
ஆண்டு + சாய்ந்தான் = ஆண்டுச் சாய்ந்தான்
ஆண்டு + துப்பினான் = ஆண்டுத் துப்பினான்
ஆண்டு + படைத்தான் = ஆண்டுப் படைத்தான்
ஈண்டு + கடந்தான் = ஈண்டுக்கடந்தான்
ஈண்டு + சென்றான்= ஈண்டுச்சென்றன்
ஈண்டு+ திருடினான் = ஈண்டுத்திருடினான்
ஈண்டு + படித்தான் = ஈண்டுப்படித்தான்
ஈண்டுக் + கடந்தான் = ஈண்டுக்கடந்தான்
ஈண்டு + படித்தான் = ஈண்டுப் படித்தான்
ஊ) அப்படி, இப்படி, எப்படி - என்னும் சொற்களின் பின் கசதப மிகும்.
அப்படி + கூறினான் =அப்படிக் கூறினான்.
அப்படி + செய்தான் = அப்படிச் செய்தான்.
அப்படி + திரும்பினான் = அப்படித் திரும்பினான்.
அப்படி + பணிந்தான் = அப்படிப் பணிந்தான்.
இப்படி + கதறினான் = இப்படிக் கதறினான்.
இப்படி + சீண்டினான் = இப்படிச் சீண்டினான்.
இப்படி + தொட்டான் = இப்படித் தொட்டான்.
இப்படி + பண்ணினான் = இப்படிப் பண்ணினான்.
எப்படி + குதித்தான் = எப்படிக் குத்தினான்.
எப்படி + சிணுங்கினான் = எப்படிச் சிணுங்கினான்.
எப்படி + தாக்கினான் = எப்படித் தாக்கினான்.
எப்படி + பதறினான் = எப்படிப் பதறினான்.
(வல்லினம்...தொடரும்..
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் - வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
No comments:
Post a Comment