"கொலைவாளினை எடடா" எனது நூல் மதிப்புரை...
நன்றி
#இகரமுதல்வி #மாத #இதழ்.
ஆசிரியர் கவிஞர் #அ.#பாண்டியமகிழன்
பொறுப்பாசிரியர்
#எம்.#ஆ.#சி.#திருமுருகன்
நூல்மதிப்புரையாளர்
#திரு #விஜயலட்சுமி திருச்சி
"கொலை வாளினை எடடா"*
(ஆசிரியர்: புலவர். ச.ந. இளங்குமரன்)
கொலை வாளினை எடடா" என்ற தலைப்பிலேயே நம் நரம்புகள் வீறு கொண்டு எழுகின்றன. வீழ்வேனென்று நினைத்தாயோ என்ற பாரதியின் வரிகளுக்கு உள்ள வீரியத்தை நூல் முழுதும் விதைத்துச் செல்லும் இந்தக் கவிஞரின் அற்புதமான கவிதை நூல் என கைக்கு வந்தது. நான் செய்த பாக்கியம் இதற்காக நான் மதிப்பிற்குரிய திருமுருகன் அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எழுதுகோல் தன் கூரிய முனையால் அடிமைச் சங்கிலியைக் களைந்தெறிவது போன்ற அட்டைப்பட ஓவியம் என்னை அசையவிடாமல் செய்துவிட்டதென்றால், இதை எழுதிய புலவர் ஒரு தையற் கலைஞர் என்பது இன்ப அதிர்ச்சியைத் தந்துவிட்டது! நூற்றி இருபது பக்கங்களை இரண்டு மணிநேரத்தில் வாசித்து முடித்தது இதுதான் முதல் முறை வார்த்தைக்கு வார்த்தை பக்கத்திற்கு பக்கம் என்னைப் புரட்டிப்போட்டது கவிதைகளின் சாராம்சம்
"ஈன்று புறந்தருதல் என் தலைக்கடளே, சான்றோனாக்குதல் தந்தைக்கு கடனே" என்ற சங்ககாலப் பெண்கவிஞர் பொன்முடியார் கூற்றுக்கேற்ப முதல் இரண்டு கவிதைகள் தாய் மற்றும் தந்தைக்காக ஒதுக்கியிருப்பது சிறப்பு அன்னையைப் பற்றிக் கூறும்போது
*"வறுமைப் பட்டு வாடிய போதும்
பெருமை குறையா தென்னை வளர்த்தாள்!
காற்றில் மழையில் தன்னைக் கரைத்தாள்!
கற்றோர் அவைக்கு என்னைக் கொடுத்தாள்"
என்ற வரிகள் மரபுக்கவியின் புலமையைப் பேச புரட்சிக்கவி பாரதி தாசனின் பாடல் வரியைத் தலைப்பாக்கியவரின் கவதைகளில் புரட்சிக்குப் பஞ்சமில்லை. பல கவிதைகள் பாடலாகப் பாடக்கூடிய வகையில் சந்தமாய் அமைந்திருப்பது கூடுதல் சிறப்பு
"ஏடா! தமிழ்மகனே என்றுவுன் விழிகள் உறக்கந் தொலைக்கும்?
ஓடாய் கிடக்கும் வாழ்வில் எப்போதுதான் ஒளி பிறக்கும்?
இனத்தை மீட்க நினைத்தா ரில்லை இழிவைப் போகாத துணிந்தா ரில்லை...
இற்றைக் தமிழன் இவனே ஏற்றைக் குணர்வான் தனையே
வந்தவரை வாழ வைத்து வாழ்விழந்து போனவன் சொந்தமண்ணில் ஏதிலியாய் நொந்து நொந்து வாழ்பவன் கொஞ்சு தமிழ் மொழிமறந்து கொள்கையற்றுப் போனவன்.
என்ற கவிதைகள் பல தலைப்புகளில் கவிஞரின் தீரா மொழிப் பற்றையும், நாட்டுப் பற்றையும் பறைசாற்றுகின்றன.
மூன்று வரிகளில் நறுக்குத் தெறித்தாற்போல் கவிதைகளை "நறுக்குகள்" என்றே தனியாகத் தலைப்பிட்ட கவிஞரைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
"ஒரு நாள் வாழ்க்கை வெளிச்சத்தைத் தேடியது
ஈசல்"
"எல்லோரும்
நல்லவரே
விழிக்கும் வரை"
"வீட்டில் உலை காய தோட்டத்தில் காய்ந்தான் தொழிலாளி"
வெண்பாக்களை இயற்றும் இவர் தையல் தொழில் செய்து கொண்டே கவியரங்குகளில் கவிதைகள் வாசித்து, சிற்றிதழ்களில் படைப்புகள் தந்து தன் மொழியறிவை வளர்த்துக்கொள்ள நிறைய வாசித்திருக்கிறார் என்பதை இவரின் பன்முகம் கண்டு பெருமிதமடைந்தேன்.
"பன்மொழிகள் கற்றறிந்தும் பைந்தமிழே இன்மொழியாம்
நன்றிது தேர்ந்திடுவீர் நானிலத்தீர் என்றார்த்தே பாரதத்தை மீட்டெடுக்க பா"யாத்த போர்க்குரலோன் பாரதியின் பண்பினைப் பார்"!
சமூக அக்கறை கொண்ட இவரின் கவிதைகள் சமூகத்திற்கு சாட்டையடியே!
"மகப்பேற்றை மண்ணிழக்க விதைக்கப்படுகிறது வேதியல் உரங்கள்!"
புதுக்கவிதைகள் பலவற்றில் இவரின் ஆளுமை அசர வைக்கிறது.
"ஆடுமாடுகள் அன்பளிப்பு அரசின் திட்டம்!
எங்கே போவது புல்லுக்கு?
பயனாளி"
"எல்லாம் சரிதான் வயதான காலத்தில் வறட்டு இருமலுக்கு தண்ணீர் தருவது யார்?"
"நாதியற்றவர்களாய் பணத்திற்காய் பாசம் தொலைத்தவர்கள்"
சத்தமின்றி சமூக சேவைகள் செய்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வளம்பரமேதுமின்றி பாடுபட்டுக் கொண்டிருக்கும் இவர் வாசகர் மனதில் இமையமாய் உயர்ந்து நிற்கிறார்! பதினெட்டு ஆண்டுகளாக திருக்குறள் பேச் சுப் போட்டி கட்டுரைப் போட்டிகள் வைத்துக்கொண்டிருக்கும் இவர் 180க்கு மேற்பட்ட குறள் வழித் திருமணங்களை முன்னின்று நடத்தியிருக்கிறார்.
பத்தாண்டுகளுக்கு மேலாக தமிழறிஞர்களுக்கு சிறப்பு செய்து விருதுகள் வழங்கி வரும் இவர் கவிதை, கட்டுரை, தமிழ் ஆய்வு நூல்கள் பலவற்றை எழுதியிருப்பது வியப்பிலும் வியப்பே!
இந்நூல் எல்லோரும் படிக்க, பரிசளிக்க, பயன்பெற அத்தனைத் தகுதிகளும் பெற்று விளங்குகிறது, நூல்கள் பெற அணுகவேண்டிய தொடர்பு எண். 95001 72822.
தனலெட்சுமி திருச்சி 8526999595
No comments:
Post a Comment