வல்லினம் மிகுதலும் மிகாமையும்...5
எ). எ - என்னும் வினா எழுத்தின் பின் கசதப மிகும்.
எ+காலம் = எக்காலம்?
எ + சிலம்பு = எச்சிலம்பு
எ+திசை = எத்திசை -
எ + பாடல் = எப்பாடல்?
ஏ) "எங்கு" எனப் பொருள் தரும் யாங்கு என்னும் சொல்லின் பின் கசதப மிகும்.
யாங்கு + குத்தினான் = யாங்குக் குத்தினான்
யாங்கு + சிக்கினான் = யாங்குச் சிக்கினான்
யாங்கு + தங்கினான் = யாங்குத் தங்கினான்
யாங்கு + பதித்தான் = யாங்குப் பதித்தான்
ஒ) எந்த இடம் எனப் பொருள் தரும் யாண்டு என்னும் சொல்லின் பின் கசதப மிகும்.
யாண்டு + கட்டினர் = யாண்டுக் கட்டினர்
யாண்டு + சிதைத்தனர் = யாண்டுச் சிதைத்தனர்
யாண்டு + தகர்த்தனர் = யாண்டுத் தகர்த்தனர்
யாண்டு - பெயர்த்தனர் = யாண்டுப் பெயர்த்தனர்.
ஓ) அவ்வகை, இவ்வகை, எவ்வகை ஆகியவற்றின் பின் கசதப மிகும்.
அவ்வகை+கலை = அவ்வகைக் கலை
அவ்வகை + செயல் = அவ்வகைச் செயல்
அவ்வகை + தாகம் = அவ்வகைத் தாகம்
அவ்வகை + பாடல் = அவ்வகைப் பாடல்
எவ்வகை + காட்சி = எவ்வகைக் காட்சி?
எவ்வகை + சீற்றம் = எவ்வகைச் சீற்றம்?
எவ்வகை + தேடல் = எவ்வகைத் தேடல்?
எவ்வகை + பயிற்சி = எவ்வகைப் பயிற்சி?
இவ்வகை + கிணறு = இவ்வகைக் கிணறு
இவ்வகை + சான்று = இவ்வகைச் சான்று
இவ்வகை + தேற்றம் = இவ்வகைத் தேற்றம்
இவ்வகை + பெட்டி = இவ்வகைப் பெட்டி
ஐ) அவ்வித, இவ்வித, எவ்வித - இவற்றின் பின் கசதப மிகும்.
அவ்வித + கட்டமைப்பு = அவ்விதக் கட்டமைப்பு
அவ்வித + சிந்தனை = அவ்விதச் சிந்தனை
அவ்வித + தேடல் = அவ்விதத் தேடல்.
அவ்வித + போக்கு = அவ்விதப் போக்கு.
இவ்வித + கயிறு = இவ்விதக் கயிறு
இவ்வித + சிமிழ் = இவ்விதச் சிமிழ்
இவ்வித + தங்கம் = இவ்விதத் தங்கம்.
இவ்வித + பங்கு = இவ்விதப் பங்கு.
எவ்வித + காட்சி = எவ்விதக் காட்சி.
எவ்வித + சிலை = எவ்விதச் சிலை
எவ்வித + தவறு = எவ்விதத் தவறு.
எவ்வித + பலன் = எவ்விதப் பலன்.
(வல்லினம்...தொடரும்..
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவனர் - வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
No comments:
Post a Comment