இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Tuesday, 28 February 2023

தமிழில் பெயர்ப்பலகை

தேனி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தி பெரியகுளம் ராமானுஜர் அரங்கில் கூட்டம் நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.   பெரியகுளம் நகர வணிகர் சங்கத் தலைவர் முன்னிலை வகித்தார்.  மேனாள் உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் பெ.சந்திரா, வையைத் தமிழ்ச்சங்கத்தின் நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் வைப்பதற்கான சட்டம் குறித்தும், வைக்கவேண்டிய தேவை குறித்தும், அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்களும் தமிழில்தான் இருக்கவேண்டும் வலியுறுத்தியும் பேசினர். 
நிகழ்வில் பெரியகுளம் வணிகர்கள் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். மேலும் அன்புக்கரன், தாமோதரன், மணிகார்த்திக், பாண்டியமகிழன், கவிக்கருப்பைய, நித்தியானந்தன் ஆகியோர் வணிக நிறுவனங்களின் பெயர்களைத் தமிழில் மாற்றுவது தொடர்பான தங்களது ஆலோசனைகளை வழங்கினர். புருசோத்தமன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment