தேனி மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழிச் சட்ட வார விழா நடத்தப்பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, தேனி மாவட்டக் கம்மவார் சங்கக் கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் ஆட்சிமிழிச் சட்டச் செயலாக்கத்தில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் காட்டும் ஆர்வம் போதுமானது! போதுமானதல்ல! என்னும் தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்தின் நடுவராக வையைத் தமிழ்ச்சங்க நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் நடுவராகச் செயல்பட்டார்.
நிகழ்வுக்கு கல்லூரி முதல்வர் கோ.சீனிவாசன் தலைமையுரை வழங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பேரா.இரதிதேவி அனைவரையும் வரவேற்றார். தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் பெ.இளங்கோ தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் தொடர்பாகச் சிறப்புரையாற்றினார்.
பட்டிமன்றத்தில் அரசு அலுவலர்களின் ஆர்வம் போதுமானது என்று ஆசிரியர் ஆ.முத்துக்குமார், முனைவர் சுகன்யா, மாணவர் மணிகண்டபிரபு ஆகியோரும், போதுமானதல்ல என ஆசிரியர் இலட்சுமிகுமரேசன், முனைவர் தாழைச்செல்வி, மாணவர் பாலகணபதி ஆகியோர் மிகச் சிறப்பாகத் தங்களது கருத்துகளை முன்வைத்தனர்.
தமிழ்நாட்டில் 80 க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் இருக்கின்றன. ஆட்சி மொழிச் சட்டத்தை அரசு அலுவலர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசாணை உள்ளது. ஆனால் அந்த அரசாணைகளைச் செயல்படுத்துவதில் பெரும்பான்மையான அரசு அலுவலர்கள் ஆர்வம் காட்டுவதில்லை. காட்டியிருந்தால் வணிக நிறுவனங்களில் பெயர்ப் பலகைகள் தமிழிலேயே இருந்திருக்கும். அரசு அலுவலர்களுடைய கையொப்பம் தமிழிலேயே இருந்திருக்கும். அரசு அலுவலகங்களில் பின்பற்றப்படுகின்ற கோப்புகள் தமிழிலேயே இருந்திருக்கும். பெரும்பான்மையான அரசுத் துறை நிறுவனங்களில் இந்த நிலை இல்லை என்றும், ஆட்சி மொழிச் சட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசுப் பணியாளர்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை என்பதற்கான பல்வேறு சன்றுகளை முன்வைத்துத் பட்டிமன்றத்தின் தீர்ப்பு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment