இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 24 February 2023

வரைவுகள்

24-02-2023 
இன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சி மொழிச்சட்ட  விழிப்புணர்வு வார விழாவில் நான்காம் நாள் நிகழ்வில் அரசு அலுவலகப் பணியாளருக்கு தமிழில் வரைவுகள், குறிப்புகள் எழுதுதல் தொடர்பான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சித் துறையின் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ச.வினோத்குமார் அவர்கள் பயிற்சியை வழங்கினார். தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பெ.இளங்கோ அவர்கள் நிகழ்வினைத் தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்வில் சிறப்பு வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் விருந்தினராகக் கலந்து கொண்டு தமிழ் மொழி குறித்தும், அதன் முதன்மை குறித்தும், ஆட்சி மொழிச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு குறித்தும் பேசினேன். 

நிறைவாக பயிற்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கிச்சிறப்பிக்கப்பட்டது.

நிறைவாக தமிழ் வளர்ச்சி உதவி அலுவலர் புருசோத்தமன்  அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன் நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

No comments:

Post a Comment