மதிப்புரை
""""""""""""""""""
"எங்க ஆத்தா சொன்ன சொலவம்" தலைப்பே மண்மணக்கிறது. நூலைப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது.
திருக்குறள், ஆத்திசூடி,கைக்கூ போன்ற கவிதைகள் வடிவம் குறுகியது எனினும் அவை வழங்கும் பொருள் விரிந்தது.
அத்தகைய தன்மை உடையவைகளே சொலவங்கள் என்றால் அது தவறாகாது.
1800 க்கும் மேற்பட்ட (சொலவடைகள் ) சொலவங்களைத் தேடித் தொகுத்து நூலாக்கியிருப்பது சிறப்பாகும்.
என்னவோ! சொலவம் சொன்ன கணக்கா "சொல்றது சுலபம் செய்யுறது தான் கடினம்" அப்படி ஒரு கடினமான பணியை அழகாகச் செய்திருக்கும் நூலாசிரியர் கவிஞர் அ.பாண்டிய மகிழன் அவர்களைப் பாராட்டலாம்.
சொலவங்களை யாரும் சுலபமாக எண்ண வேண்டாம், அதை இந்த நூலிலுள்ள ஒரு சொலவத்தாலயே சொல்கிறேன்,"சிற்றுளியால் மலையே பிளக்கும் "அதாவது,சிறிய சொலவம், எவ்வகை பெரிய உண்மையையும் மிக எளிதாக விளக்கும் ஆற்றல் உடையதாகும்.
இத்தகைய சொலவ நூலை, தேனி வையை பதிப்பகம் வாகாகப் பதிப்பித்திருக்கிறது.அழகான அட்டைப்படமும் கண்கவர்கிறது.
நம் வீட்டு நூலகங்களில் கட்டாயம் இருக்க வேண்டிய நூல்களுள் இதுவும் ஒன்று.அனைவரும் அடிக்கடி வாசித்தால் சிறப்பு உண்டு.
வாழ்க! வளர்க! நூலாசிரியரின் தமிழ்த்தொண்டு! பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
கலைச்சுடர்மணி
ம.கவிக்கருப்பையா
No comments:
Post a Comment