படிந்த சொற்கள்...
உதிர்ந்து கிடக்கின்றன
என்னைச் சுற்றி
இப்போதும் ...
கூரிய நகங்களோடும்
கோரைப் பற்களோடும்
சிலபல சொற்கள்!
சிலநேரங்களில்
கைகள் உயிர்ப்புற்று
நீண்டு கூரிய நகங்கள்...
குரல்வளையை நெறித்து
உடலெங்கும் கூறுபோட்டு
கூத்ததாடி மகிழ்கின்றன.
கீறல்களில் வழியும்
குருதியோடு உடல்நனைக்க
வலியில் போரடி
அலரித் துடிக்கிறேன்!
சோர்வுற்று வீழ்கின்றன
சொற்கள்...!
என்னை அமைதிப்
படுத்துவற்குள்...
உயிரோட்டத்தைத்
தடைசெய்யும் நோக்கோடு
குருதி நரம்புகளைக்
கடித்துக் குதறி
கொண்டாட்டம் போடுகின்றன
கோரைப் பற்கள்...
தளரா முயற்சி
தன்னம்பிக்கை என
இரண்டின் துணையோடு
மன அதிர்வுகளை
மரணிக்கச் செய்கிறேன்
அச்சம் அகல்கிறது
நடுக்க்கம் தொலைகிறது
உதிர்ந்து கிடக்கும்
சொற்களின் தாக்கம்
உரமற்றுப் போகின்றன.
நான் உயிர்ப்புறுகிரேன்.
நமத்துப் போகின்றன
கூரிய நகங்களும்,
கோரைப்பற்களும்
என் அடுத்த நகர்வுக்கான
படிக்கற்களாய்...
மலர்ப்படுக்கையாய்...
ச.ந.இளங்குமரன்
13-04-2023
No comments:
Post a Comment