இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 26 September 2018

காந்தியின் கடிதம்

காந்தியடிகளுக்கு நெருக்கமானவர் இராச கோபாலாச்சாரியார்.
அவருடைய  மகன் காந்தி
யடிகளின் ஆசிரமத்தில் பயின்று வந்தார்.
மகனுக்கு இராசாசி கடிதம் எழுதி இருக்கிறார்.
இக் கடிதம் காந்தியடிகளின் பார்வைக்கு
வந்து விட்டது.
உடன் இராசாசிக்கு காந்தியடிகள் ஒரு கடிதம் எழுதினார்.
அக் கடிதம்.

   அன்புள்ள சி.ஆர்.
இப்போது காலை 3.30மணி.
இரவு 12-மணிக்கு மேல் எனக்கு உறக்கம் வரவில்லை.
நேற்று உங்கள் மகனுடன் பேசிக் கொண்டிருந்த போது, நீங்கள் அவருக்கு எழுதிய கடிதத்தை பார்த்தேன்.

எந்த மொழியில் கடிதம்-என்று கேட்டேன்.
ஆங்கிலத்தில்-என்று பதில் அளித்தார்.
கேட்டவுடன், என் இதயம் சுக்கு நூறாக
வெடித்து விட்டது.

இது பற்றி உங்கள் மகனுடன் விவாதித்தேன்.  அறிவியல்
சிந்தனைகளை தமிழில் எழுத
இயலாது என்று அவர் கூறியதைக் கேட்டு, அதிர்ந்து போனேன்.

எனக்கு பெரிய நம்பிக்கையாக
இருப்பவர் நீங்கள்.
பெரிய குறைபாடாக இதைக்
கருதுகிறேன்.
தாய் மொழியைப் புறக்கணிக்கப்பது,
தாய் தந்தையர்களைப்
புறக்கணிக்கப்பது போல அல்லவா.

தங்களின் சிறந்த புதல்வர்கள்
தங்களைப் புறக்கணித்து
விட்டது போலத் தெரிகிறது.

பாவம். உங்கள் மகன் இராமசாமிக்கு
என்ன எதிர் காலம் இருக்க
முடியும்.

எனக்கு தெளிவுபடுத்துங்கள்.
அல்லது, உங்களுடைய சிறந்த
தமிழில் உங்கள் மகனுக்கு
கடிதம் எழுதுவதாக உறுதி
அளியுங்கள்.
                       மோ.க. காந்தி.

(நன்றி தமிழறிஞர் வீ.நா.சோ.)
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்.நிறுவனர் வையைத் தமிழ்ச்சங்கம் & செயலர் திருவள்ளுவர் மன்றம் நாகலாபுரம், தேனி.

No comments:

Post a Comment