கஞ்சம் _ கஞ்சி
இப்படி ஒரு சொல் மணிமேகலையில் இருக்கிறது.
இச்சொல்லுக்கு..
கஞ்சா
கைத்தாளம்
தாமரை
துளசி
நீர்
பாண்டம்
வஞ்சனை
வெண்கலம்
என பல பொருள்கள் இருக்கின்றன.
"கஞ்ச வேட்கையில் காந்தமண் வேண்ட என்பது மணிமேகலை பாடலின் வரி. (பதிகம் 10)"
'காந்தமன் எனும் சோழ அரசன் தன்னுடைய நாட்டில் நீர் பெருக வேண்டும் என்ற ஆசையினால் வேண்டிக் கொள்ள' என்பது இந்தப் பாடல் வரியின் பொருள்.
கஞ்சம் - நீர்
நமது வீட்டில் பெரியவர்கள் நம்மைத் திட்டும்போது உன்னைக் கஞ்சி கஞ்சியா ஆக்கிடுவேன் என்பது இன்றும் வழக்கில் உண்டு. அதாவது மிக வலுவாக இருப்பதை வலுவிழந்து போகச் செய்வதையே அவ்வாறு குறிப்பிடுகின்றனர்.
நீரானது அடர்த்தி குறைவாக இருப்பதால் அதனைக் குறிப்பதற்காக கஞ்சம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது.
கஞ்சு + அம் = கஞ்சம்
அம் என்ன்பது பகுதிப் பொருள் விகுதி.
கஞ்சுதல் _ குறைதல், நீர்த்தல். அடர்த்தி குறைந்து நீர்த்தன்மையில் இருக்கும் உணவுக்கு கஞ்சி என்பது பொருள் 'கஞ்சி குடிச்சாச்சா' எனும் வழக்குச் சொல்லில் குடிப்பு என்னும் சொல் கஞ்சி யின் நீர்த்தன்மையைக் குறிக்கும்....
நன்றி
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம்,
No comments:
Post a Comment