இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Saturday, 21 January 2023

பன்னாட்டுத் திருக்குறள் திறன்போட்டி...

தேனி வையைத் தமிழ்ச்சங்கம் மற்றும் வையைப் பதிப்பகம் சார்பில்  திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு இணைய வழியிலான பன்னாட்டுத் திருக்குறள் திறன் போட்டி புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, அமெரிக்கா உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ மாணவியர் 70க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

போட்டியின் நடுவர்களாக கவிஞர் லட்சுமிகுமரேசன், முனைவர் பத்மினிபாலா,  மூ.செல்வம், ஆ.முத்துக்குமார் ஆகியோரும், மதிப்பீட்டாளராக தமிழ்ச்செம்மல் முத்துமணி அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முனைவர் முகமது நாசர் வாழ்த்துரை வழங்கினார்.

போட்டியில் பொருட்பாலில் முதல் 10 அதிகாரங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. போட்டியின் விதிமுறையாக குறள்எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்வது குறளைச் சொன்னால் எண்ணைச் சொல்வது, முதல் சொல்லைச் சொன்னால் முழுக் குறளையும் சொல்வது, கடைசிச் சொல்லைச் சொன்னால் முழுக் குறளையும் சொல்வது, அதிகாரத்தைச் சொன்னால் 10 குறளையும் சொல்வது என பல்வேறு வகைகளில் மாணவர்களின் திறன் போட்டி நடைபெற்றது. 

பன்னாட்டுத் திருக்குறள் திறன்போட்டியில் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீவர்தன் முதல்பரிசும் அமெரிக்காவைச் சேர்ந்த ரக்சித்சீத்தாராமன் இரண்டாம் பரிசினையும், காரைக்குடியைச் சேர்ந்த சாம்பவிகா/ சம்யுக்தா ஸ்ரீ, தேனி வடபுதுப்பட்டியைச் சேர்ந்த 
சஹானா/ சங்கரேஸ்வரி, காரைக்குடியைச் சேர்ந்த
ஸ்ரீ தா/ சந்தோஷிஸ்ரீ ஆகியோர் முறையே மூன்றாம் பரிசினையும் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசினை ஆசிரியப்பெருமக்கள் திருமலைக் குமரன், சண்முகநாதன், கற்பூர பூபதி, ரேணுகாதேவி ஆகியோர் வழங்கிச் சிறப்பித்தனர். போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment