போதி மரத்துப் *'புத்தனை'* விநாயகனாக்கிய ஆரிய வரலாற்றுத் *திருட்டுச் சூழ்ச்சி :-*
பாபாசாகேப் டாக்டர் *அம்பேத்கர்* அவர்கள் சொல்லுவார்...
"The history of India is nothing , the battle between Buddhism and Brahmanism'
என்று.
அதாவது
இந்திய வரலாறு என்பது எதுவுமில்லை.
பௌத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்குமான போரே இந்த இந்திய வரலாறு என்று...!
இந்திய வேத ,
பூத, பார்ப்பனப் புளுகு மூட்டைகளான வேதங்கள், ஷ்மிருதிகள், ஆரண்யங்கள், உபநிடத்துக்கள் , என சமஸ்கிருதத்திலுள்ள புராணக் குப்பைகள்,
வரலாற்றுத் திருட்டுகளையெல்லாம்
சமஸ்கிருதத்தில் பட்டம் பெற்று ஆராய்ந்தறிந்து கற்றுணர்ந்து சொன்னவர்தான் *பாபாசாகேப் அம்பேத்கர்* அவர்கள்...!
சரி...
*யார் இந்த விநாயகன்...?*
பார்ப்பனியம் சொன்ன அதே கதைகளை வைத்து அழுக்கில் உருவானவன்,
யானைத்தலைகளைப் பொருத்தியவன்...
என்றெல்லாம் அவர்கள் சொன்ன கதைகளை வைத்தே நாம் நையாண்டிகள் செய்வது ஒரு புறம் இருக்கட்டும்...!
புத்தன் தன் அரச வாழ்வைத் துறந்து அதன் மரத்தடியில் அமர்ந்த காரணத்தினாலே...
அது
*அரசமரம்* என்றாயிற்று...!
ஆங்கிலத்தில்
Bothi tree என்றழைக்கப்படுகிறது.
பின்னாளில் *பௌத்தப் பண்பாட்டு வாழ்வியல் முறைகளை* அழிக்கத் தொடங்கிய இந்துஆரியம்,
நம் மக்களின் பழக்க, வழக்கங்களாய் ஊறிப்போன செயல்களை மாற்ற இயலாத காரணத்தினால்,
பௌத்தமுறைப் பழக்க வழக்கங்களைத் தன்பால் ஈர்த்துக்கொண்டு விழுங்க (கபளீகரம் செய்ய)த் தொடங்கியது,
பௌத்த அடையாளங்களைத் தமதாக்கிக்கொள்ள
அதில் சில இடைச்செருகல்கள், கட்டுக் கதைகள், அடையாளச் சிதைப்பு ஆகியவற்றைக் கொண்டுவந்தது,
*அரசமரத்தடியில் அமர்ந்த குருவான புத்தரிடம்* சென்று அறநெறிக் கருத்துகள்,
தம்ம போதனைகள் கேட்டுவந்த மக்களிடம்,
புத்தருக்குப் பின் அவரது நினைவைப் போற்றும் முகமாக
மதிப்புச் செலுத்துவதற்காக
அரசமரமருகே சென்றுவந்த இடத்தில் *புத்தரின் உருவம் பொரித்த சிலைகளை* அழிக்கத்
தொடங்கியிருந்தனர்.
விகார் + நாயகன்= விநாயகன் ;
அதாவது எங்களின் *விகாரின் நாயகனான புத்தனே*
இங்கு விநாயகனாக்கப்பட்டார்....!
இதன் இன்னொரு பெயர் 'பிள்ளையார்' என்றழைக்கப்படுகிறது.
திருச்சியில் கூட உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது.
*அதன் உச்சியில் இருந்ததும் புத்தர்தான்.*
திரி+ சரணம்+ பள்ளி = திரிசரணப்பள்ளி ,
இப்பொழுது திருச்சிராப் பள்ளி என்று வழக்கானது.
*(திரிசரணங்கள் என்பது புத்தம், தம்மம், சங்கம் என்பதுதான்)*
இந்த மூன்று அறநெறிகளைப் போதித்த பள்ளி (பாலி சொல்) தான் அங்கு இருந்திருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன்.
சீலம் என்றால் பாலி மொழியில் *ஒழுக்கம்* எனப்படும்,
பழைய சீலமே பின்னாளில் சேலமாகியுள்ளது.
திருப்பதியிலுள்ள சாமிக்கு திருவேங்கடன் என்ற பெயருண்டு திரு+ வேங்கட+ மலையான் திரி புத்தம், தம்ம, சங்கம் என்ற திரிரத்தினங்கள் திரு என்றாகி ,
வேங்கடம் என்றால் மலை, அதாவது திரி பீடகத்தில் மலையின் உச்சத்தை அடைந்தவன்....
ஆக இதுவும் பௌத்தப் பெயர்தான்.
பகவான் என்பதும் பாலிச்சொல்தான்,
அதன் பொருள் ஆசைகளை அறுத்தெரிந்தவன் என்று.
திருவள்ளுவர் கூறிய
*ஆதி பகவன்*...
புத்தர்தான்...
அதன் பொருள் *ஆதி-என்றால்= முதல் ;*
*பகவன்என்றால்= பற்று அற்றவன்* என்பதாகும்.
இன்று *திருமணங்களில் கூட அரசங்கால் நடுவது வழக்கமாக உள்ளது.*
இதனை இந்துக்கள் பின்பற்றுவதால் அதனை மூடநம்பிக்கையாக நாமும் எதிர்க்கிறோம்,
ஆனால் அது நமது வழக்கமாக முன்பு இருந்துள்ளது ,
நமக்கெல்லாம் அறகருத்துகளைப் போதித்து நல்வழிப்படுத்திய *புத்தரின் தலைமையின்பால் எங்களின் திருமணம் நிகழ்கிறது*
என்பதைக் குறிக்கும்
உள்ளார்ந்த
அன்பின், மதிப்பின்,
நன்றியுணர்வின் வெளிப்பாடுகளைக் குறிக்கும் செயல்கள்தாம் என்பதை
நாம் அனைவரும் உணர்தல் வேண்டும்.
அழிக்கப்பட்ட எம் வரலாறு மீண்டெழும்....
தம்மச்சக்கரம் சுழலும்...!
*புத்தமே நம் நெறி..!*
இடைச் செருகலான
*விநாயகனை*
*எடுத்து எறி...!*