இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Monday, 8 December 2025

உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் மாநாடு

உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் முதல் மாநாடு 2025  

06-12-2025 இன்று வெற்றிகரமாக, கோபி கலை அறிவியல் கல்லூரியில் உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவையின் தலைவரும் தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநருமான புலவர் ச.ந.இளங்குமரன் அவர்களது தலைமையில் உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவையின் செயலர் ஜெகஜீவன்ராம் அவர்களது முன்னிலையில் வெற்றிகரமாக நடந்தேறியது.

இம்மாநாட்டினை மதிப்பிற்குரிய மரபுப் பாவலர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ச.கந்தசாமி ஐயா  அவர்கள் தொடங்கி வைத்து, புலவர் ச.ந.இளங்குமரன் எழுதிய "தொல்காப்பியத் தேன்" கவிஞர் தி.மீரா எழுதிய மீராவின் பார்வையில் தொல்காப்பியம், கவிஞர் கோ.லதா எழுதிய தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டும்,  சாதனையாளர்களுக்கும், கவியரங்கில், கருத்தரங்கில், கலைநிகழ்ச்சிகளில்  பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்து விழாப் பேருரையாற்றினார். 

கோபி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு வேணுகோபால் அவர்கள் தலைமை உரை வழங்க, தமிழ்த் துறைத் தலைவர் மு.கருப்புசாமி அவர்கள் வரவேற்புரையில் தமிழ்த் துறைப் பேராசிரியர் தெய்வேந்திரன் அவர்களது நெறியாள்கையில் அகில இந்திய உலக சாதனைப் பதிவு புத்தக நிறுவனத் தலைவர் செ.வெங்கடேசன் அவர்கள் மாநாட்டின் நோக்க உரை வழங்ககினார். 

கவியரங்கில் 10 கவிஞர்களும் கருத்தரங்கில் எட்டுப் பேரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடந்தேறின. பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த அறிஞர் பெருமக்கள் என 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துணைத்தலைவர் அதனி அவர்கள் நன்றியுரை வழங்கினார். 

(குறிப்பு : இந்த மாநாட்டில் பங்கேற்ற சாதனையாளர்கள், கவிஞர்கள், கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தோர் என யாரிடமும் எந்தப் பணமும் பெறாமல் நடத்திய நிகழ்வு இது)

இனிய அன்புடன்
 ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.
உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவை.

Saturday, 29 November 2025

திருக்குறள் நெறியில் திருமணம்

மனிதநேய இல்லவிழா....
திருக்குறள் நெறியில் திருமணவிழா...

மணமக்கள் :
செல்வி க.சர்மிளா
செல்வன் : சா.பிரசாத்.

மனிதநேயக் காப்பகத்தின் முதல் திருமண விழா. தன் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையைச் சாதித்துக் காட்டிய மதிப்பிற்குரிய காப்பகத்தின் இயக்குநர் அண்ணன் பால்பாண்டி அவர்களுக்கு பேரன்பும் வாழ்த்தும். தான் பெற்ற குழந்தையைப் படிக்க வைத்து, பணியில் அமர வைத்து, திருமணம் செய்விப்பவரைத் தான் இதுவரை பார்த்திருக்கின்றோம். ஆனால் தான் பெறாமல் பெற்ற குழந்தைக்கு ஒரு தந்தை என்னென்ன கடமைகள் செய்ய முடியுமோ அதை விடப் பன்மடங்கு மேலாகச் செய்து காட்டி இருக்கின்ற  மனிதநேயருக்குப் பின்புலமாக உள்ள மனித தெய்வங்களாம் உதவும் உள்ளங்களை வணங்குகிறேன். காப்பகத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு திருமண விழாப் பணியில் ஈடுபட்டிருந்தது இன்னும் சிறப்பு. எங்கள் காப்பகச் செல்வங்களை நெஞ்சார வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.  உயர் நீதிமன்ற நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், கல்வியாளர்கள், தேனி மாவட்டத்தின் முதன்மையான தொழில் முதலாளிகள், சாமான்ய மக்கள், பொதுநல அமைப்புகள், எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த விழா.  வசந்தம் மகால் முழுமைக்கும் நிரம்பி வழிந்த கூட்டம், நிற்பதற்குக் கூட இடமில்லாமல் ஒரு மிகப்பெரிய திருவிழாவில் கூடிய கூட்டத்தை விட அதிகம். அவ்வளவு பெரிய கூட்டத்தை அரை மணி நேரம் கட்டி வைத்தது தமிழ். ஆம் அதுதான் திருக்குறள் வழியில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வு. தமிழ்நாடு முழுமைக்குமாக திருக்குறள் நெறியில் நானூருக்கும் மேற்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்தி வைத்திருந்த பொழுதும் இந்த நிகழ்வு என்னை நெகிழ வைத்ததும் உருக வைத்ததுமான நிகழ்வாகவே பார்க்கிறேன். அனைவருக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்...

இனிய அன்புடன் 
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுனர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
பேச : 9842370792
23-11-2025

தமிழ்க்கூடல் விழா ஒக்கரைப்பட்டி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் ஒக்கரைப்பட்டி #அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற #தமிழ்க்கூடல் விழாவில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் சார்பில் (புலவர் ச.ந.இளங்குமரன்) கலந்து கொண்டு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு உரை வழங்ககினேன். விழாவில் மாணவ மாணவிகள் 17 பேர் பேச்சு, கட்டுரை, ஓவியம் எனப் பல்வேறு விதமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருந்தனர். அவர்களில் பேச்சுப்போட்டியில் முதல் மூன்று இடம் பிடித்த வர்சிதா, மனிசா, பிரணிதா ஆகிய மூன்று மாணவிகள் விழா மேடையில் பேசினர். மொழி ஆளுமையும், எழுத்து உச்சரிப்பும், உடல் மொழியும், தமிழ் மொழியின் செறிவும்  நிறைந்து கிடந்தன. அந்தக் குழந்தைச் செல்வங்களுக்கும், போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் என்னுடைய நிறை வாழ்த்து. மேலும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் பள்ளியின் சார்பில் பரிசுகளும்,  வையைத் தமிழ்ச் சங்கம், தேனி   திருக்குறள் நூல்களையும் வழங்கி வாழ்த்தினேன். பின்பு ஒரு மாணவி அருகில் வந்து என்னுடைய தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு என்னோடு ஒளிப்படம் எடுக்க விரும்பினார். எடுத்துக்கொண்டோம். நான் மேற்கொண்டு ஏதாவது படிக்கின்ற பொழுது எனக்கான உதவிகள் செய்ய முடியுமா? என்று கேட்டார். படிப்புத் தொடர்பாக என்னால் இயன்ற உதவியினைக் கட்டாயம் செய்வேன் என்று அவருக்கு வாக்குறுதி கொடுத்தேன். விழாவில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் முதுகலைத் தமிழாசிரியர் சுசீலா அம்மா அவர்களுக்கும், இருபால் ஆசிரியப் பெருமக்களுக்கும் நன்றி.

இனிய அன்புடன் ச.ந.இளங்குமரன்.

Monday, 17 November 2025

தொல்காப்பியம் முற்றோதல்

16 11 2025 இன்று சிவகாசி அருகில் தனியார் கல்லூரியில் தொல்காப்பிய முற்றோதல் நிகழ்வு நடைபெற்றது. சென்னை மாநகராட்சி இணை ஆணையர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப. அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வையைத் தமிழ்ச்சங்கம் தேனி உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவை, அகில இந்திய சாதனைப் பதிவு புத்தக நிறுவனம், மதுரைத் தொல்காப்பியர் மன்றம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளிலிருந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வில் பத்தாம் வகுப்புப் படிக்கும் அரசுப் பள்ளி மாணவி செல்வி ப.உமாகேஸ்வரி மிகச்சிறப்பாகத் தொல்காப்பியம் முழுவதையும் 144 நிமிடத்தில் முற்றோதல் செய்தார்.

செல்வி உமா மகேஸ்வரி அவர்களுக்கு அகில இந்திய உலக சாதனைப் பதிவுப் புத்தக நிறுவனம் சார்பில் உலக தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவைத் தலைவர் புலவர் ச.ந.இளங்குமரன், ஒருங்கிணைப்பாளர் சி.கலைவாணி ஆகியோர் இணைந்து "இளம் சாதனையாளர்" எனும் விருது வழங்கிச் சிறப்பித்தனர். நிறுவுநர் செ.வெங்கடேசன் ஐயா அவர்களுக்கு நன்றி. 

இந்த மாணவியை ஈராண்டு காலமாக உருவாக்கிய ஆசிரிய இணையர் திருமதி சான்சிராணி -  இராசசேகர் ஆகியோர் மிகவும் போற்றுவதற்குரியர். இவ்விணையர் தங்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்காக ஆசிரியராகப் பணி செய்துவிட்டு இயல்பாக அவரவர் பணியைப் பார்க்கலாம். ஆனால் உண்மையாகவே ஒரு ஆசிரியர் என்ன செய்ய வேண்டும் என்று உணர்ந்து திருக்குறள், சிலப்பதிகாரம், தொல்காப்பியம் முற்றோதல் எனத் தொடர்ச்சியாக மாணவச் செல்வங்களை உருவாக்கி வருவதோடு, அவர்களது முற்றோதலுக்கும் காரணமாக இருந்து உயரிய பரிசையும்  தங்களுடைய சொந்தப் பணத்திலிருந்து வழங்குவது நம்மை வியக்க வைக்கிறது,  மெய்சிலிர்க்க வைக்கிறது.  இவ்விணையருக்கு நெஞ்சம் நிறை வாழ்த்து. 

எங்களோடு தொல்காப்பியர் மன்றத் தலைவர் அ.இருளப்பன், பொருளாளர் சக்கையா செயலாளர் கரு.முருகேசன், வையைத் தமிழ்ச்சங்கத்தின் அரசியல் நாயகன் என் இளவல் பா.செல்வக்குமரன் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

அனைவருக்கும் பேரன்பும் வாழ்த்தும். 

புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச்சங்கம், தேனி.
தலைவர் உலக தொல்காப்பியச் சாதனையாளர்கள் பேரவை.

Tuesday, 14 October 2025

தேனி மாவட்டக் கவிஞர்கள் எழுத்தாளர், படைப்பாளர்கள்

தேனி மாவட்ட எழுத்தாளர்கள்.

1 கவிஞர் வைரமுத்துவடுகபட்டி ,
தேனி மாவட்டம்சென்னை-----
2 கவிஞர் மு. மேத்தா
பெரியகுளம்சென்னை -----
3 கவிஞர் நா.காமராசன்போ.
மீனாட்சிபுரம் ,
தேனி மாவட்டம்சென்னை-----
4 உமா மகேஸ்வரிபோடிநாயக்கனூர் ,
தேனி மாவட்டம்ஆண்டிபட்டி ,
தேனி மாவட்டம்-----
5 தேனி.எம்.சுப்பிரமணி
செட்டிமல்லன்பட்டி ,
தூத்துக்குடி மாவட்டம்
பழனிசெட்டிபட்டி ,
தேனி மாவட்டம்-----
6 தேனி.எஸ்.மாரியப்பன்தேனிதேனி
-----
7 கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி
கள்ளிப்பட்டி,
தேனி மாவட்டம்கள்ளிப்பட்டி,
தேனி மாவட்டம்-----
8 அம்பை மணிவண்ணன்
அமபாசமுத்திரம்,
தேனி மாவட்டம்மதுரை -----
9 தேனி சீருடையான்தேனிதேனி-----
10எஸ்.எஸ்.பொன்முடி
கொடுவிலார்பட்டி,
தேனி மாவட்டம்கொடுவிலார்பட்டி,
தேனி மாவட்டம்-----
11சக்தி ஜோதிஅனுமந்தன்பட்டி ,
தேனி மாவட்டம்அய்யம்பாளையம்,
திண்டுக்கல் மாவட்டம்-----
12மு.அப்பாஸ் மந்திரி
போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம்போடிநாயக்கனூர்,
தேனி
மாவட்டம்-----
13பாலு சத்யாதேனிசென்னை-----
14ரமேஷ் வைத்யா தேனிசென்னை-----
15 பாஸ்கர் சக்தி வடபுதுப்பட்டி,
தேனி மாவட்டம்சென்னை-----
16பொன்ஸீ என்ற
பொன்.சந்திரமோகன் வடபுதுப்பட்டி
, தேனி மாவட்டம்சென்னை-----
17தேனி முருகேசன்தேனிதேனி-----
18அல்லி உதயன்தேனி-
அல்லிநகரம்தேனி-அல்லிநகரம் -----
19ம. காமுத்துரை தேனிதேனி-----
20முத்து.தங்க
அய்யப்பன் போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம்போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம்-----
21எஸ்.செந்தில்குமார்
போடிநாயக்கனூர் ,
தேனி மாவட்டம்போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம்-----
22 முகமது சபிதேனிதேனி -----
23தேனி. பொன்.
கணேஷ்இராமநாதபுரம்தேனி -----
24- ம.கவிக்கருப்பையாபூதிப்புரம் ,தேனி மாவட்டம்-----
25கவிஞர் பாரதன்கம்பம்,
தேனி மாவட்டம்கம்பம்,
தேனி மாவட்டம்-----
26கலை இலக்கியாமேல்மங்கலம்,
தேனி மாவட்டம்வீரபாண்டி,
தேனி மாவட்டம்-----
27வி. எஸ். வெற்றிவேல் பழையனூர்,
சிவகங்கை மாவட்டம்பழனிசெட்டிபட்டி
, தேனி மாவட்டம்-----
28நீல. பாண்டியன்மேல்மங்கலம்,
தேனி மாவட்டம்மேல்மங்கலம்,
தேனி மாவட்டம்-----
29த. கருணைச்சாமி தேனிதேனி-----
30ந.
முத்து விஜயன்போடிநாயக்கனூர் ,
தேனி மாவட்டம்போடிநாயக்கனூர்,
தேனி மாவட்டம்-----
31கற்பகம் சிவரவிகாடங்குளம்,
திருநெல்வேலி மாவட்டம்தேனி-----
32தேனி ராஜதாசன்கொழுமம்,
உடுமலைப்பேட்டைதேனி -----
33ஆர். மணிகண்டன்சின்னமனூர் ,
தேனி மாவட்டம்சென்னை-----
34 வதிலை பிரபாபோ.
அணைக்கரைப்பட்டி,
தேனி மாவட்டம்வத்தலக்குண்டு,
திண்டுக்கல் மாவட்டம்-----
35உழவன் ராஜசேகர்ஸ்ரீரங்கபுரம்,
தேனி மாவட்டம்ஸ்ரீரங்கபுரம்,
தேனி மாவட்டம்-----
36இரா. ரெங்கசாமிஉத்தமபாளையம் ,
தேனி மாவட்டம்வடுகபட்டி,
தேனி மாவட்டம்-----
37எம். ராமச்சந்திரன்சின்னமனூர் ,
தேனி மாவட்டம்சென்னை-----
38தி. ச. சாமண்டிதாசுகோம்பை ,
தேனி மாவட்டம்கோம்பை,
தேனி மாவட்டம்-----
39முனைவர் இராசு. பவுன்துரை
தேவாரம் ,
தேனி மாவட்டம்தஞ்சாவூர்-----
40சுருளிப்பட்டி சிவாஜி
சுருளிப்பட்டி,
தேனி மாவட்டம்சுருளிப்பட்டி,
தேனி மாவட்டம்-----
41வே. தில்லைநாயகம்சின்னமனூர் ,
தேனி மாவட்டம்கம்பம்,
தேனி மாவட்டம்மறைவு:
மார்ச் 11 , 2013
42அனிஷ் தேவதானப்பட்டி ,
தேனி மாவட்டம்தேவதானப்பட்டி ,
தேனி மாவட்டம்-----
43ஆழ்வார்க்கடியவன்
வெ.இராஜகோபாலன் பெரியகுளம் ,
தேனி மாவட்டம்பெரியகுளம்,
தேனி மாவட்டம்-----
44ஞானபாரதிஆண்டிபட்டி ,
தேனி மாவட்டம்ஆண்டிபட்டி ,
தேனி மாவட்டம்-----
45எஸ். வர்கீஸ்
ஜெயராஜ்உத்தமபாளையம் ,
தேனி மாவட்டம்உத்தமபாளையம்,
தேனி மாவட்டம்-----
46கம்பம் ரவி கம்பம் ,
தேனி மாவட்டம்கம்பம்,
தேனி மாவட்டம்-----
47- புலவர் ச.ந.இளங்குமரன் தேனி மாவட்டம்  நாகலாபுரம்
48- கவிஞர் அ.இலட்சுமி குமரேசன் தேனி அன்னஞ்சி
49- பா.கவிதா உத்தமபாளையம் தேனிமாவட்டம்
50- க.இரா.திருவருள் செல்வி உத்தமபாளையம் தேனிமாவட்டம்
51-விருமாண்டி கன்னீசுவரி தேனி 
52- அ.பாண்டிய மகிழன் மேல்மங்கலம் பெரியகுளம் வட்டம் தேனி மாவட்டம்
53-முனைவர் சே.பத்மினிபாலா தாமரைக்குளம் தேனிமாவட்டம்
54- இதய நிலவன் கொடுவிலார்பட்டி தேனிமாவட்டம்
55-க.போ.சுருளி ஆண்டவர் காமயக்கவுண்டன்பட்டி தேனிமாவட்டம்
56- மனோகரன் சின்னமனூர் தேனிமாவட்டம்
57- க.தமிழ்ச்செல்வி தேனி தேனிமாவட்டம் 
58- யாழ்.எஸ்.ராகவன் தேனிமாவட்டம்
59- துரை. அனுராசு போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்.
60- கவிஞர் மூரா சக்கம்பட்டி, தேனிமாவட்டம்.
61- இரா.முத்துநாகு ஆண்டிபட்டி தேனிமாவட்டம்
62- முனைவர் ஏர் மகாராசன் ஜெயமங்கலம் பெரியகுளம் தேனிமாவட்டம்
63- சுப்புராயலு பெரியகுளம் தேனி மாவட்டம்
64- ந.வீ.வீ.இளங்கோ ஆண்டிபட்டி தேனிமாவட்டம்
65- பெரு பழனிச்சாமி ஆண்டிபட்டி தேனி மாவட்டம்
66- இர.அறிவழகன் பெரியகுளம் தேனிமாவட்டம்
67- விடியல் வீரா பூதிப்புரம் தேனி மாவட்டம்
68- பாலசுபிரமணி சின்னமனூர் தேனி மாவட்டம்
69- சு.வேணுகோபால் தேனிமாவட்டம்
70- சித்திரா சிவன் பழனிசெட்டிபட்டி தேனிமாவட்டம்
71- யாழ் தன்விக தாமரைக்குளம் தேனிமவட்டம்
72- உமர் பரூக் கம்பம் தேனிமாவட்டம்
73- பாஸ்கர் சக்தி வடபுதுப்பட்டி தேனி மாவட்டம்
74- நந்தன் புதிய ஸ்ரீதரன் வடபுதுப்பட்டி தேனி மாவட்டம்
75- கோ.விசாகன் வடபுதுப்பட்டி தேனி மாவட்டம்
76- சசிதுரை ஆண்டிபட்டி தேனிமாவட்டம்
77- கு.நிருபன் குமார் 
78- பூர்ணிமா கணநாதன்
79- சங்கர பாண்டியன் வடுகபட்டி தேனிமாவட்டம்
80- அ.வெங்கடேஷ்
81- கவிஞர் பெ.சரவணன்
82- அழகுபாண்டி அரசப்பன் முத்துலாபுரம் தேனிமாவட்டம்
83- கூடல் தாரிக் சின்னமனூர் தேனிமாவட்டம்
84-ராஜிலா ரிஜ்வான் கம்பம் 
85- அய்.தமிழ்மணி கம்பம் 
86- இளைய கவி கம்பம் 
87- மாரியப்பன் தமிழ்நேசன் சின்னமனூர் தேனி மாவட்டம்
88- வசந்த தீபன்
89- ஷர்ஜிலா யாகூப் கம்பம்
90தங்கஸ்வரன் சின்னமனூர் தேனிமாவட்டம் 
91- போடி சிவாஜி
92- அன்புச்செல்வி சுப்புராஜ் சக்கம்பட்டி ஆண்டிபட்டி தேனிமாவட்டம்
93- ஜனாப் அன்வர் சின்னமனூர்
94- பழ.வேல்முருகன் டொம்புச்சேரி தேனிமாவட்டம்.
95- கடமலை தங்கப்பாண்டியன் தேனிமாவட்டம்
96- மொசைக்குமார் தேனி தேனிமவட்டம்
97- எம்.ஆர்.சி.திருமுருகன் வடுகபட்டி தேனிமாவட்டம்
98- கே.எஸ்.கே.நடேசன் தேனி தேனிமாவட்டம்
99- வசுமித்திரன் தேனி மாவட்டம்
100- தேனி காளிதாசு தேனிமாவட்டம்
101- அனிஷ் அகமது 
102- சி.இராமு வடுகபட்டி தேனி மாவட்டம் 
103- கம்பம் புதியவன் தேனிமாவட்டம்
104- அருண் அழகு தேனி மாவட்டம்
105- கெங்கை பாலதா கெங்குவார்பட்டி தேனி மவட்டம்
106 வீறுகவி முடியரசனார் பெரியகுளம் தேனிமாவட்டம் 
107- நந்தினி சுகுமாரன் போடிநாயக்கனூர், தேனி மாவட்டம்
108- மு. அழகர்சாமி. கடமலைக்குண்டு.
109- கா. காமராஜ் கடமலைக்குண்டு.
110- இல. இராஜசேகர். கடமலைக்குண்டு.
111- வெ.பாலகிருஷ்ணன்.  கடமலைக்குண்டு.
112- ம. புஸ்பராஜ் கடமலைக்குண்டு.
113- மரு. த. பழனிவேல்ராஜன். கடமலைக்குண்டு.
114- சி.கணேசன். கடமலைக்குண்டு.
115- ம. சீனிவாசன். கடமலைக்குண்டு.
116- த. முருகன் கடமலை.
117- க. தமிழ் சரவணண் கடமலை.
118- சுரேஷ்மணி கடமலை.
119- அழகு கண்ணன் கம்பம் தேனிமாவட்டம்
120- 

பட்டியல் தொடரும்....

Wednesday, 1 October 2025

கவிஞர் பா.கவிதா அவர்களின் "நனைந்த மழை" நூல்மதிப்புரை.

கவிஞர் பா. கவிதா அவர்களின் நனைந்த மழை  

​கவிஞர் பா. கவிதா, ஒரு கிராம நிர்வாக அலுவலராக, தான் கண்ட மனிதர்களையும், அவர்களது வாழ்க்கையையும், தன் "நனைந்த மழை" கவிதைத் தொகுப்பில் பதிவு செய்துள்ளார். இந்தப் படைப்புகள் வெறும் வார்த்தைகள் அல்ல, அவை வாழ்க்கையின் உண்மைகளை  வெளிச்சம் போட்டுக் காட்டும் கண்ணாடி.

​நேர்மை என்பது துணிச்சலின் அடையாளம். அது நூலாசிரியருக்குச் சாலப் பொறுந்தும்.

​"நேர்மைக்கு 
திறமையை விட 
தைரியம் தேவை. 
உயிர் போனாலும் 
நேர்மையை விலக்க மாட்டேன்
என வாழும் கூட்டம் 
இறுக்கத்தான் செய்கிறது."

​இந்தக் கவிதை, நேர்மை என்பது ஒரு கொள்கை மட்டுமல்ல, அது ஒரு போராட்டக் குணம் என்பதை வலியுறுத்துகிறது. திறமையைக் கொண்டு சாதிக்கலாம், ஆனால் நேர்மையாக இருக்கத் தைரியம் வேண்டும். ஒரு சிலர் மட்டுமே இந்தத் தைரியத்துடன், தங்கள் உயிரையும் துச்சமென மதித்து நேர்மையாக வாழ்கிறார்கள். இந்த வரிகள், இன்றைய காலகட்டத்தில் நேர்மையின் மதிப்பை நமக்கு நினைவுபடுத்துகின்றன. இது நூலாசிரியருடைய வாழ்க்கை.

​பொறுமை என்பது ஒரு பலவீனமல்ல, அது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். இந்தக் கவிதை, பொறுமை என்ற ஒரு குணத்தால், பல மனக் குழப்பங்களையும், ஏமாற்றங்களையும் அமைதியாகக் கடந்து செல்ல முடியும் என்பதை உணர்த்துகிறது. வெளிப்படையாக எந்தச் சண்டையும் இல்லாமல், உள்மனதின் கலவரங்களை அடக்கி, வாழ்க்கையை ஒரு அமைதியான நிலைக்குக் கொண்டு செல்ல பொறுமை உதவுகிறது. 

​"பொறுமை என்ற மொழியில்
 ஆயிரம் கலவரங்கள்
 அமைதியாகின்றன. 
பல ஏமாற்றுங்கள்."

​எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டது காதல். ஆனாலும் இன்றைய காலத்தில் சிலருக்கு தன் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வதற்காகவே காதல் பறக்கிறது.

​"வெண்ணிலா வந்தாலும்
 விண்மீன்கள் அழைத்தாலும்
 பிடிப்பதில்லை, வீதியில்
 எப்போதாவது மின்னலாய் 
வந்து போகும் உன்
 விழிகள் மட்டும் பிடிக்கிறது."

​காதல், எதிர்பாராத தருணங்களில், எதிர்பாராத ஒருவரிடம் பிறக்கும் என்பதை இந்தக் கவிதை அழகாக விளக்குகிறது. உலகில் எத்தனையோ அழகான விசயங்கள் இருந்தாலும், அவை ஈர்க்காதபோது, மின்னல் போல ஒருவரின் பார்வை நம் இதயத்தைக் கவர்ந்துவிடுகிறது. அந்தக் கணம், காதல் பிறக்கிறது.

​"கிடைத்த வாழ்க்கையை 
தவற விட்டுவிட்டு, வலி மருந்து
 பலர் தவறான பாதையில்
 பழுதான வண்டியில் ஏறி
 வாழ்க்கை பயணத்தையே
 முடிக்கின்றனர்."

​வாழ்க்கை என்பது ஒரு பயணம். பலர் தங்கள் இலக்கை மறந்து, தற்காலிகமான வலிகளுக்குத் தீர்வு தேடி, தவறான பாதையில் பயணிக்கின்றனர். அது ஒரு பழுதடைந்த வண்டியில் பயணிப்பது போல, அவர்களை இலக்கிற்கு கொண்டு சேர்க்காமல், நடுவழியில் பயணத்தையே முடித்துவிடுகிறது. இந்தப் பயணத்தை நாம் உணர்ந்து, சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதை இந்தக் கவிதை மூலம் உணர்த்துகிறார் கவிஞர்.

​காதலின் ஆழம்: முழுமையான அர்ப்பணிப்பு

​"நீ வந்தது தெரியும், 
நீ சொன்னது தெரியும், 
உன்னை நான் பார்க்கவில்லை,
 பிடிக்காதது எதுவும் 
உன் கண்ணில் படக்கூடாது
 என்பதில் என் முழு காதல்."

​இது காதலின் உச்சபட்ச அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. தான் நேசிப்பவருக்கு எதுவுமே பிடிக்காதது இருக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக, தன் காதலை வெளிப்படுத்தாமல், உள்ளுக்குள்ளேயே ரகசியமாக வைத்திருக்கும் தியாகம் இது. இது வெறும் வார்த்தைகள் அல்ல, ஒரு முழுமையான அன்பின் வெளிப்பாடு.

​அன்பு: ஒரு கேட்காத வரம்

​"கேட்காத வரமாய் 
என் வாழ்வில் நீ வந்தது, 
வரம் கேட்டால் கூட 
கிடைக்காத பேர்  இருக்கையில் 
எனக்கு மட்டுமே கிடைத்த 
அன்பு தெய்வம் நீ."

​இந்தக் கவிதை, ஒருவரின் வருகையை ஒரு தெய்வீகப் பரிசாகப் பார்க்கிறது. நாம் எவ்வளவுதான் வரம் கேட்டாலும் கிடைக்காத சில பேர்,  சில அன்புகளும் இருக்கின்றன. ஆனால், கேட்காமலேயே கிடைத்த அந்த அன்பு, ஒரு வரத்தைவிட மேலானது என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது.

​"தென்றல் போல வந்து குளிர் காற்று வீசி விட்டு காணாமல் போனாய், உன் ஞாபகங்கள் மட்டும் சூறாவளியாக இதயத்தை சுற்றுகிறது."

​காதலின் தொடக்கம் இதமாக இருந்தாலும், பிரிவின் வலி புயலாக மாறிவிடுகிறது. ஒரு தென்றல் போன்ற வருகை, பின்னாளில், இதயத்தைத் தாக்கும் சூறாவளி போன்ற நினைவுகளாக மாறிவிடுகிறது. இந்தக் கவிதை, பிரிவின் வலியை மிக உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறது.

கவிஞர் நேர்மையாளர் ​பா. கவிதா அம்மாவின் கவிதைகள், மனித வாழ்வின் பல பரிமாணங்களையும், அதன் உணர்ச்சிகளையும், அனுபவங்களையும் ஆழமாகப் பதிவு செய்கின்றன. அவை படிப்பவர்களுக்கு ஒரு சிந்தனைப் பயணத்தை உருவாக்குகின்றன. 
சிந்தனைப் பயணம் தொடர வாழ்த்துகள் அம்மா.

நூல் பதிப்பு : பொன்னுத்தாய் பதிப்பகம்
விலை உரூ - 150

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்
வையைப் பதிப்பகம், தேனி நாகலாபுரம்.

Friday, 26 September 2025

வையைத் தமிழ்ச்சங்கம் தேனி சார்பில் நூல்கள் வெளியீட்டு விழா

தேனி வையை தமிழ் சங்கம் வையைப் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி பாப்பா லட்சுமி அவர்கள் நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார்.  மனிதநேயக் காப்பக இயக்குநர் மா.பால்பாண்டி, சக்சஸ் அகாடமி இயக்குநர் ஈசுவரன், திண்ணை அறக்கட்டளைப் பொருளாளர் அசோகன், சங்கத் தமிழ் அறக்கட்டளைப் பொருளாளர் ஆகியோர் நூல்களைப் பெற்றுச் சிறப்பித்தனர். 

ஜெர்மன் எழுத்தாளர் கங்கா ஸ்ரான்லி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில்  உன்னை அறிந்தால்,  நனைந்த மழை, சீதனம்,  தூவானம் ஆகிய நான்கு நூல்கள் குறித்து மா.தங்கப் பாண்டியன்,  கவிஞர் கூடல் தாரிக்,  ஆசிரியர் மூ.செல்வம், கவிஞர் அ.பாண்டிய மகிழன் ஆகியோர் மதிப்புரை வழங்கினர். நூலாசிரியர்கள் எழுத்தாளர், கெங்கா ஸ்ரான்லி, பா.காவிதா கி.அ.நி., கவிஞர் க.இரா.திருவருள் செல்வி, கவிஞர் இலட்சுமி குமரேசன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.

 முன்னதாக கவிஞர் பழ.வேல்முருகன் வரவேற்புரை வழங்க, கவிஞர் பானுரேக வாழ்த்துரை வழங்க, கவிஞர் ஜெயபாண்டி அவர்கள் நிகழ்ச்சியை தொகுக்க பா.செல்வக்குமரன் நன்றி கூறினார்.  நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நூலும் நூலாடையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில் மனிதநேயக் கனவு பள்ளி மாணவ மாணவியர், சக்சஸ் அகாடமியினுடைய மாணவ மாணவியர், அறிவு நிறை கவிஞர், சான்றோர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ச.ந.இளஙகுமரன்