உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் முதல் மாநாடு 2025
06-12-2025 இன்று வெற்றிகரமாக, கோபி கலை அறிவியல் கல்லூரியில் உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவையின் தலைவரும் தேனி வையைத் தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநருமான புலவர் ச.ந.இளங்குமரன் அவர்களது தலைமையில் உலகத் தொல்காப்பிய சாதனையாளர்கள் பேரவையின் செயலர் ஜெகஜீவன்ராம் அவர்களது முன்னிலையில் வெற்றிகரமாக நடந்தேறியது.
இம்மாநாட்டினை மதிப்பிற்குரிய மரபுப் பாவலர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் திரு ச.கந்தசாமி ஐயா அவர்கள் தொடங்கி வைத்து, புலவர் ச.ந.இளங்குமரன் எழுதிய "தொல்காப்பியத் தேன்" கவிஞர் தி.மீரா எழுதிய மீராவின் பார்வையில் தொல்காப்பியம், கவிஞர் கோ.லதா எழுதிய தொல்காப்பியம் காட்டும் வாழ்க்கைத் தத்துவங்கள் ஆகிய மூன்று நூல்களை வெளியிட்டும், சாதனையாளர்களுக்கும், கவியரங்கில், கருத்தரங்கில், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கும் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்து விழாப் பேருரையாற்றினார்.
கோபி கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் திரு வேணுகோபால் அவர்கள் தலைமை உரை வழங்க, தமிழ்த் துறைத் தலைவர் மு.கருப்புசாமி அவர்கள் வரவேற்புரையில் தமிழ்த் துறைப் பேராசிரியர் தெய்வேந்திரன் அவர்களது நெறியாள்கையில் அகில இந்திய உலக சாதனைப் பதிவு புத்தக நிறுவனத் தலைவர் செ.வெங்கடேசன் அவர்கள் மாநாட்டின் நோக்க உரை வழங்ககினார்.
கவியரங்கில் 10 கவிஞர்களும் கருத்தரங்கில் எட்டுப் பேரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடந்தேறின. பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த அறிஞர் பெருமக்கள் என 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துணைத்தலைவர் அதனி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
(குறிப்பு : இந்த மாநாட்டில் பங்கேற்ற சாதனையாளர்கள், கவிஞர்கள், கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தோர் என யாரிடமும் எந்தப் பணமும் பெறாமல் நடத்திய நிகழ்வு இது)
இனிய அன்புடன்
ச.ந.இளங்குமரன்
நிறுவுநர் வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.
No comments:
Post a Comment