மனிதநேய இல்லவிழா....
திருக்குறள் நெறியில் திருமணவிழா...
மணமக்கள் :
செல்வி க.சர்மிளா
செல்வன் : சா.பிரசாத்.
மனிதநேயக் காப்பகத்தின் முதல் திருமண விழா. தன் வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையைச் சாதித்துக் காட்டிய மதிப்பிற்குரிய காப்பகத்தின் இயக்குநர் அண்ணன் பால்பாண்டி அவர்களுக்கு பேரன்பும் வாழ்த்தும். தான் பெற்ற குழந்தையைப் படிக்க வைத்து, பணியில் அமர வைத்து, திருமணம் செய்விப்பவரைத் தான் இதுவரை பார்த்திருக்கின்றோம். ஆனால் தான் பெறாமல் பெற்ற குழந்தைக்கு ஒரு தந்தை என்னென்ன கடமைகள் செய்ய முடியுமோ அதை விடப் பன்மடங்கு மேலாகச் செய்து காட்டி இருக்கின்ற மனிதநேயருக்குப் பின்புலமாக உள்ள மனித தெய்வங்களாம் உதவும் உள்ளங்களை வணங்குகிறேன். காப்பகத்தில் இருக்கின்ற அத்தனை பேரும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு திருமண விழாப் பணியில் ஈடுபட்டிருந்தது இன்னும் சிறப்பு. எங்கள் காப்பகச் செல்வங்களை நெஞ்சார வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். உயர் நீதிமன்ற நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், கல்வியாளர்கள், தேனி மாவட்டத்தின் முதன்மையான தொழில் முதலாளிகள், சாமான்ய மக்கள், பொதுநல அமைப்புகள், எழுத்தாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு சிறப்பித்த விழா. வசந்தம் மகால் முழுமைக்கும் நிரம்பி வழிந்த கூட்டம், நிற்பதற்குக் கூட இடமில்லாமல் ஒரு மிகப்பெரிய திருவிழாவில் கூடிய கூட்டத்தை விட அதிகம். அவ்வளவு பெரிய கூட்டத்தை அரை மணி நேரம் கட்டி வைத்தது தமிழ். ஆம் அதுதான் திருக்குறள் வழியில் நடத்தப்பட்ட திருமண நிகழ்வு. தமிழ்நாடு முழுமைக்குமாக திருக்குறள் நெறியில் நானூருக்கும் மேற்பட்ட திருமண நிகழ்வுகளை நடத்தி வைத்திருந்த பொழுதும் இந்த நிகழ்வு என்னை நெகிழ வைத்ததும் உருக வைத்ததுமான நிகழ்வாகவே பார்க்கிறேன். அனைவருக்கும் நெஞ்சம் நிறை வாழ்த்துகள்...
இனிய அன்புடன்
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுனர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.
பேச : 9842370792