இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 22 June 2025

இலக்கியத்தில் ஈடிலாத் தந்தையர் -ச.ந.இளங்குமரன்

"இலக்கியத்தில் ஈடிலாத் தந்தையர்" என்ற தலைபில் அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சியில் உரை வழங்குவதற்காக என் நூலகத்தில் உள்ள சில நூல்களை திருப்பினேன். ஆதன் தந்தை, அஃதை தந்தை, ஐயை தந்தை, சேந்தன் தந்தை, இவள் தந்தை, மகன் தந்தை, எந்தை, நுந்தை, தந்தை தந்தை என்ன சுமார் 143 இடங்களில் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் தந்தை எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் தந்தை : 70
எந்தை ( என் தந்தை)  : 42
நுந்தை (உன் தந்தை)  : 31 
ஒருமணிநேர உரைக்காக செலவிட்ட நேரம் காலை 9-30 தொடங்கி மாலை 3-30 வரை சுமார் 6 மணி நேரம்.

இலக்கிய நூல்களை மீள் பார்வை செய்யக்கூடிய தலைப்பைத் தேர்வு செய்து தந்த அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கவிஞர் திருமகள் அம்மா அவர்களுக்கும், நெறியாளர் சுகுணா சுதாகரன் (சுவிட்சர்லாந்து) அம்மா அவர்களுக்கும் இக்களத்தில் நான் இணைவதற்கு காரணமான எழுத்தாளர் கெங்கா ஸ்ரான்லி (செருமனி)  அம்மா அவர்களுக்கும் நெஞ்சம் நிறை நன்றியை உரித்தாக்குகிறேன்.

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.
22-06-2025

No comments:

Post a Comment