இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Sunday, 22 June 2025

இலக்கியத்தில் ஈடிலாத் தந்தையர் -ச.ந.இளங்குமரன்

"இலக்கியத்தில் ஈடிலாத் தந்தையர்" என்ற தலைபில் அமெரிக்க முத்தமிழ் தொலைக்காட்சியில் உரை வழங்குவதற்காக என் நூலகத்தில் உள்ள சில நூல்களை திருப்பினேன். ஆதன் தந்தை, அஃதை தந்தை, ஐயை தந்தை, சேந்தன் தந்தை, இவள் தந்தை, மகன் தந்தை, எந்தை, நுந்தை, தந்தை தந்தை என்ன சுமார் 143 இடங்களில் நற்றினை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, தொல்காப்பியம், திருக்குறள், சிலப்பதிகாரம் உள்ளிட்ட நூல்களில் தந்தை எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. 
இதில் தந்தை : 70
எந்தை ( என் தந்தை)  : 42
நுந்தை (உன் தந்தை)  : 31 
ஒருமணிநேர உரைக்காக செலவிட்ட நேரம் காலை 9-30 தொடங்கி மாலை 3-30 வரை சுமார் 6 மணி நேரம்.

இலக்கிய நூல்களை மீள் பார்வை செய்யக்கூடிய தலைப்பைத் தேர்வு செய்து தந்த அமெரிக்க முத்தமிழ் இலக்கிய பேரவையின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் கவிஞர் திருமகள் அம்மா அவர்களுக்கும், நெறியாளர் சுகுணா சுதாகரன் (சுவிட்சர்லாந்து) அம்மா அவர்களுக்கும் இக்களத்தில் நான் இணைவதற்கு காரணமான எழுத்தாளர் கெங்கா ஸ்ரான்லி (செருமனி)  அம்மா அவர்களுக்கும் நெஞ்சம் நிறை நன்றியை உரித்தாக்குகிறேன்.

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி நாகலாபுரம்.
22-06-2025

Thursday, 5 June 2025

தமிழே திராவிட மொழிகளின் தாய்

தமிழே திராவிட மொழிகளின் தாய். உலகமொழிகளின் வேர். 

திராவிட மொழி என தனித்த மொழி ஒன்றில்லை. பெரும்பான்மையான உலக மொழியியல் ஆய்வாளர்கள் இந்தியப் பகுதியில் தென் திராவிட மொழிகள், மத்திய திராவிட மொழிகள் என மொழிகளைப் பகுக்கின்றனர். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் "இந்தியா முதுமைக்கும் ஒரு காலத்தில் தமிழே பேசப்பட்டு வந்தது" என்ற என்று கூறியிருக்கிறார். மொழியியல் அறிஞர் தேவநேயப் பாவாணர் உட்பட பல மொழி நூல் வல்லுநர்கள் இக்கருத்தினை ஏற்றுக் கொண்டுள்ளனர். மொழியியல் வேர்ச்சொல் ஆய்வின் மூலமாக அதை மெய்ப்பித்தும் இருக்கின்றனர். வெளிநாட்டு மொழியியல் அறிஞர்கள் பலரும் தங்களுடைய ஆய்வில் சொன்ன திராவிட மொழி என்பது தமிழன்றி வேறில்லை.

தமிழை வடபுல மக்கள் உச்சரிக்கின்ற பொழுது ஏற்பட்ட சிக்கலே திராவிடம் என்று ஆனது. 1904 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டு வரலாறும், தமிழ் மொழியியல் வரலாறும் முறையாக எழுதப்படவில்லை என்பதை மொழியியல் ஆய்வு கொண்டு ஆராய்ந்து பார்த்தால் உண்மை தெற்றென விளங்கும். எனவேதான் 20 க்கு மேற்பட்ட மொழிகளில் புலமையும், 50 க்கும் மேற்பட்ட மொழிகளில் ஆய்வுத்திறனும் மிக்க மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் தம்மின்  திரவிடத்தாய் நூலில்  தமிழ்மொழியின் திசைச்சொல் திராவிடம் என்றார். மூல மொழியான முதன்மை மொழியான தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்கள் குறிப்பாக சமற்கிருதம் கலந்து பல மொழிகள் உருவாகின. அப்படி தமிழில் திரிபுகளாக உருவாகியுள்ள மொழிகளே திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லப்பட்டு வருகிறது.

திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லப்பட்டு வருகின்ற கன்னடம் மலையாளம் தெலுங்கு துளு உள்ளிட்ட மொழிகளில் இருக்கின்ற வடமொழிச் சொற்களை மட்டும் நீக்கினால் மற்ற அனைத்துச் சொற்களும் தூய தமிழாகவே இருக்கும். மேலும் தற்போதைய இந்திய ஒன்றியத்தில் மூத்த மொழியாகச் சொல்லப்பட்டு வருபவை தமிழும் சமஸ்கிருதமும். சமஸ்கிருதம் எப்போதும் பேச்சு மொழியாக இருந்ததில்லை. தமிழ் மட்டுமே பன்னெடுங்காலமாக பேச்சு மொழியாக எழுத்து மொழியாக பண்பாட்டு மொழியாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. மொழியியல் வல்லுனர்களின் கூற்றுப்படி மூத்த மொழி தமிழ் என்றால் தமிழ் மூல வேரிலிருந்தே பிற மொழிகள் கிளைத்திருக்க வேண்டும் என்பதே அறிவியல் பூர்வமான உண்மையும் மொழியியல் அறிஞர்களின் முடிவும் ஆகும். ஆய்வறிஞர் ப.அருளியார் அவர்களது ஆய்வுகளையும் தொடர்ந்து பார்த்தால் தமிழின் தனித் தன்மையும் தொன்மையும் தமிழில் இருந்து பிற மொழிகள் கிளைத்த வரலாற்று உண்மையையும் எளிதில் விளங்கிக்கொள்ளமுடியும்.

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி

Tuesday, 3 June 2025

தமிழில் இருந்தே கன்னடம் பிறந்தது - ச.ந.இளங்குமரன்

திராவிட மொழிகளின் தாய் தமிழ்....

இன்று ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியத்தில் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட மொழிகள் மூன்று மட்டுமே அவை தமிழ் பிராகிருதம் பாலி. பாலி புத்தசமயம் சார்ந்தது எனவும், பிராகிருதம் சமணர் மொழியாக இருந்தது எனவும் மொழியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்விரண்டையும் தாண்டி இந்தியா முழுமைக்குமாக இருந்த மொழி தமிழ் மட்டுமே.

உலக மொழிகளில் மிகத் தொன்மை வாய்ந்ததாக ஆறு மொழிகள் கருதப்படுகின்றன். அவற்றுள் தமிழும் சமற்கிருதமும் இந்தியாவைச் சார்ந்தது. இதில் சமற்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சு மொழியாக இருந்தது இல்லை. எனவே பேச்சு மொழியாக இருந்தது தமிழ் மட்டுமே என்பது திண்ணம்.

தமிழ் மொழியை வடபுலத்தவர் திரித்துப் பேசியதின் விளைவாகவும் வடபகுதியிலேயே வெளிநாட்டவர்கள் வந்து தங்கிச் சென்றதன் விளைவாகவும் தமிழின் திரிபை திராவிடம் என்று பதிவு செய்தனர். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் திராவிடம் என்று சொல்லை திசைச்சொல் என்று பதிவு செய்கிறார். 

எனவே திராவிட மொழிக் குடும்பத்திற்கு மூல மொழியாகவும் முதன்மையான மொழியாகவும் இருப்பது தமிழாகும். காலப்போக்கில் தமிழ் மொழியில் இருந்த சொற்கள் திரிந்தும் புதிய சொற்கள் பிறந்தும் பல மொழிகள் கிளைத்துள்ளன. அப்படிக் கிளைத்த மொழிகளில் ஒன்று தான் கன்னடம் என்று மொழியியல் ஆய்வாளர்கள் முடிந்த முடிவாகச் சொல்லியுள்ளனர். எடுத்துக்காட்டாக தமிழில் காலங்காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் சொற்கள் கன்னடத்தில் எப்படி திரிந்திருக்கின்றன என்பதை பார்க்கலாம்.

தமிழில் கலந்துள்ள கன்னட மொழிச்சொற்கள் எவை? அவற்றுக்கான தமிழ் சொற்கள் எவை?
தமிழில் கலந்துள்ள கன்னட மொழிச் சொற்கள்

அட்டிகை=கழுத்தில் அணிவது பொன்னால் ஆனது

எகத்தாளம்=கேலி செய்தல்

சமாளித்தல்=சரி கட்டி செய்தல்

சொத்து=செல்வம்

பட்டாகத்தி=வாள்

குலுக்குதல்=அசைத்தல்

தாண்டல்=தாவுதல்
போன்றன.

தமிழ் மற்றும் கன்னட மொழிகளுக்கு இடையில் என்னென்ன பொதுவான சொற்கள் உள்ளன?

கண்- கண்ணு
கை- கை
வாய்- பாயி
மூக்கு- மூகு
கால்- காலு
தலை- தலெ
விரல்- பெரளு
அது- அது
இது- இது
நான்- நானு
நீ- நீனு
அவன்- அவனு
இவன்- இவனு
அவள்- அவளு
இவள்- இவளு
நம்ம- நம்ம
யார் - யாரு
இல்லை- இல்ல
அல்ல- அல்ல
அப்பா- அப்பா
அம்மா- அம்மா
தாய்- தாயி
தந்தை- தந்தெ
தாத்தா- தாத்தா
எல்லாம்- எல்லா
சரி- சரி
புல்- முல்லு
மகன்- மகனு
மகள்- மகளு
அண்ணன்- அண்ண
கெட்ட- கெட்ட
கண்ணாடி- கண்ணடி
கல்- கல்லு
வேண்டாம்-பேடா
இரு- இரு
நாய்- நாயி
நிழல்- நெரலு
ஓடு- ஓடு
விட்டு- பிட்டு
அழ- அளு
எண்ணெய்- எண்ணெ
வா- பா
பால்- ஹாலு
கொடு- கொடு
பெண்கள்- ஹெண்ணுகளு
மணல்- மணலு
குதிரை- குதுரெ
எலி- இலி
புலி- ஹுலி
மேல்- மேலெ
காடு- காடு
கொல்லு- கொல்லு
நம்பிக்கை- நம்பிக்கெ
நாளை- நாளெ
யானை- ஆநெ
கண்டிப்பா- கண்டித
இருள்- இருளு
வண்டி- பண்டி
கடல்- கடலு
கனவு- கனசு
அறிவு- அறிவு
காதல்- காதலு
வேறு- பேரெ
இலை- எலெ
உப்பு- உப்பு
கேள்- கேளு
மறை- மரெ
கட்டு- கட்டு
பத்து- ஹத்து
நூறு- நூறு

இப்படி நிறைந் சொற்களைச் சொல்லலாம். 
தாத்தாவின் வழியில் தான் மகனும் பெயரனும் வர முடியுமே தவிர பெயரின் வழியில் தாத்தா வர முடியாது... 

ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி