திராவிட மொழிகளின் தாய் தமிழ்....
இன்று ஒருங்கிணைந்த இந்திய ஒன்றியத்தில் கி.பி 5ஆம் நூற்றாண்டு வரை பேசப்பட்ட மொழிகள் மூன்று மட்டுமே அவை தமிழ் பிராகிருதம் பாலி. பாலி புத்தசமயம் சார்ந்தது எனவும், பிராகிருதம் சமணர் மொழியாக இருந்தது எனவும் மொழியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இவ்விரண்டையும் தாண்டி இந்தியா முழுமைக்குமாக இருந்த மொழி தமிழ் மட்டுமே.
உலக மொழிகளில் மிகத் தொன்மை வாய்ந்ததாக ஆறு மொழிகள் கருதப்படுகின்றன். அவற்றுள் தமிழும் சமற்கிருதமும் இந்தியாவைச் சார்ந்தது. இதில் சமற்கிருதம் எந்தக் காலத்திலும் பேச்சு மொழியாக இருந்தது இல்லை. எனவே பேச்சு மொழியாக இருந்தது தமிழ் மட்டுமே என்பது திண்ணம்.
தமிழ் மொழியை வடபுலத்தவர் திரித்துப் பேசியதின் விளைவாகவும் வடபகுதியிலேயே வெளிநாட்டவர்கள் வந்து தங்கிச் சென்றதன் விளைவாகவும் தமிழின் திரிபை திராவிடம் என்று பதிவு செய்தனர். மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் திராவிடம் என்று சொல்லை திசைச்சொல் என்று பதிவு செய்கிறார்.
எனவே திராவிட மொழிக் குடும்பத்திற்கு மூல மொழியாகவும் முதன்மையான மொழியாகவும் இருப்பது தமிழாகும். காலப்போக்கில் தமிழ் மொழியில் இருந்த சொற்கள் திரிந்தும் புதிய சொற்கள் பிறந்தும் பல மொழிகள் கிளைத்துள்ளன. அப்படிக் கிளைத்த மொழிகளில் ஒன்று தான் கன்னடம் என்று மொழியியல் ஆய்வாளர்கள் முடிந்த முடிவாகச் சொல்லியுள்ளனர். எடுத்துக்காட்டாக தமிழில் காலங்காலமாகப் புழக்கத்தில் இருந்து வரும் சொற்கள் கன்னடத்தில் எப்படி திரிந்திருக்கின்றன என்பதை பார்க்கலாம்.
தமிழில் கலந்துள்ள கன்னட மொழிச்சொற்கள் எவை? அவற்றுக்கான தமிழ் சொற்கள் எவை?
தமிழில் கலந்துள்ள கன்னட மொழிச் சொற்கள்
அட்டிகை=கழுத்தில் அணிவது பொன்னால் ஆனது
எகத்தாளம்=கேலி செய்தல்
சமாளித்தல்=சரி கட்டி செய்தல்
சொத்து=செல்வம்
பட்டாகத்தி=வாள்
குலுக்குதல்=அசைத்தல்
தாண்டல்=தாவுதல்
போன்றன.
தமிழ் மற்றும் கன்னட மொழிகளுக்கு இடையில் என்னென்ன பொதுவான சொற்கள் உள்ளன?
கண்- கண்ணு
கை- கை
வாய்- பாயி
மூக்கு- மூகு
கால்- காலு
தலை- தலெ
விரல்- பெரளு
அது- அது
இது- இது
நான்- நானு
நீ- நீனு
அவன்- அவனு
இவன்- இவனு
அவள்- அவளு
இவள்- இவளு
நம்ம- நம்ம
யார் - யாரு
இல்லை- இல்ல
அல்ல- அல்ல
அப்பா- அப்பா
அம்மா- அம்மா
தாய்- தாயி
தந்தை- தந்தெ
தாத்தா- தாத்தா
எல்லாம்- எல்லா
சரி- சரி
புல்- முல்லு
மகன்- மகனு
மகள்- மகளு
அண்ணன்- அண்ண
கெட்ட- கெட்ட
கண்ணாடி- கண்ணடி
கல்- கல்லு
வேண்டாம்-பேடா
இரு- இரு
நாய்- நாயி
நிழல்- நெரலு
ஓடு- ஓடு
விட்டு- பிட்டு
அழ- அளு
எண்ணெய்- எண்ணெ
வா- பா
பால்- ஹாலு
கொடு- கொடு
பெண்கள்- ஹெண்ணுகளு
மணல்- மணலு
குதிரை- குதுரெ
எலி- இலி
புலி- ஹுலி
மேல்- மேலெ
காடு- காடு
கொல்லு- கொல்லு
நம்பிக்கை- நம்பிக்கெ
நாளை- நாளெ
யானை- ஆநெ
கண்டிப்பா- கண்டித
இருள்- இருளு
வண்டி- பண்டி
கடல்- கடலு
கனவு- கனசு
அறிவு- அறிவு
காதல்- காதலு
வேறு- பேரெ
இலை- எலெ
உப்பு- உப்பு
கேள்- கேளு
மறை- மரெ
கட்டு- கட்டு
பத்து- ஹத்து
நூறு- நூறு
இப்படி நிறைந் சொற்களைச் சொல்லலாம்.
தாத்தாவின் வழியில் தான் மகனும் பெயரனும் வர முடியுமே தவிர பெயரின் வழியில் தாத்தா வர முடியாது...
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி