இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Wednesday, 1 January 2025

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா தேனி

கன்னியாகுமரி அறிவுலகப் பேராசான் திருவள்ளுவர் சிலையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டரசு அரசு விழாவாகக் கொண்டாட அறிவித்திருந்த நிலையில் தமிழ் நாடெங்கும் திருக்குறள் விழாக்கோலம் பூண்டது.

இந்நிலையில் தேனி மாவட்டப் பொது நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, நூலக இயக்ககம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர், அரசு ஊழியர், ஆசிரியர், என அனைவருக்கும் திருக்குறள் ஒப்பி வித்தல், பேச்சு, வினாடி வினா ஆகிய போட்டிகளோடு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இதில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், 30க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ஒரு வார காலமாகத் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வின் நிறைவாக பரிசளிப்பு விழா தேனிமாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட மைய நூலகர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூலகர் விசுவாசம் வரவேற்புரையாற்ற, தேனி மாவட்ட நூலக வாசகர் வட்டத் தலைவர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் அவர்களும், சின்னமனூர் நூலக வாசகர் வட்டத் தலைவர் இரா.மனோகரன் அவர்களும் முன்னிலை வகித்தனர். தேனி வையைத் தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் ச.ந.இளங்குமரன் சிறப்புரை வழங்க பெரியகுளம் துணை ஆட்சியர் ரஜத் பீடன் இ.ஆ.ப., அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தார். கவிஞர் ராஜசேகர் அவர்கள் நன்றியுரை வழங்க இந்நிகழ்வினை வெளிச்சம் சிதம்பரம் அவர்கள் நெறியாள்கை செய்து சிறப்பித்தார்.

இனிய அன்புன் 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.

No comments:

Post a Comment