இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 3 July 2014

இனிக்கும் தமிழ் இலக்கணம் . (ஆ ) புலவர் இளங்குமரன் .

சுட்டெழுத்துகள் :- 
                                          அ,இ,உ என மூன்றும் சுட்டெழுத்துகள்  எனப்படும்.அதாவது ஒரு பொருளை கையாலோ அல்லது கருத்தாலோ குறிப்பிட்டுச் சுட்டிக்காட்டும் பொருளில் வரும்.
 (எ.கா) அவன், இவன், உவன்.  "அ " என்பது தொலைவில் (சேய்மையில்) உள்ளதையும்,  "இ" என்பது அருகில்  (அண்மையில்) உள்ளதையும், "உ" என்பது நடுவில் (இடையில்) உள்ளதையும் குறிக்கும்.

அகச்சுட்டு:-   ஒரு சொல்லின் உள்ளே இருந்து சுட்டினால் அது அகச்சுட்டு என்று பெயர் பெரும்..  (எ.கா ) அவர், இவர், உவர்.

புறச்சுட்டு:-  ஒரு சொல்லின் வெளியே இருந்து சுட்டினால் அது புறச்சுட்டு என்று பெயர் பெரும்.(எ.கா)  அப்பக்கம், இப்பக்கம், அப்புத்தகம், இப்புத்தகம்.

வினா எழுத்துக்கள்:-- கேள்வி குறித்து வரும் எழுத்துகள் வினா எழுத்துகள் ஆகும்.இவ்வினா எழுத்துகள் ஐந்து வகைப்படும். அவை ஆ, எ, ஏ, ஓ, யா என்பதாகும். இவற்றுள் மூன்று எழுத்துக்களும் சொல்லின் முதலில் வரும்.(எ.கா) எவன், எது, ஏன், யாது.
 ஆ, ஏ,ஓ  ஆகிய மூன்று வினா எழுத்துக்களும் சொல்லின் முடிவில் வரும்.
(எ.கா) அவனோ? அவனே? யானோ?

                                                                                                        (தொடரும்)  

No comments:

Post a Comment