இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Thursday, 17 April 2025

அறநெறிச்சாராம் உலக சாதனை

#ஆறாவது #உலக சாதனை நிகழ்வு 

17-04-2025 இன்று #தொல்காப்பியம், #திருக்குறள், #சிலப்பதிகாரம், #யோகா, #சிலம்பம் ஆகிய உலக சாதனை நிகழ்வுகளைக் கடந்து ஆறாவது உலக சாதனை நிகழ்வாக நீதி நூல் வரிசையில் ஒன்றான #அறநெறிச்சாரம் மூலமும் உரையும் மனன முற்றோதல்  நிகழ்வில் #வையைத் தமிழ்ச் சங்கம், தேனி  நாகலாபுரம் சார்பில்  போடி சவுண்டீஸ்வரி நடுநிலைப்பள்ளியில் கண்காணிப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்த இனிய பொழுது. 

பள்ளி மாணவ மாணவியர் 170 பேர் ஒன்றிணைந்து 105 நிமிடங்களில் அறநெறிச்சாரம் 226 வெண்பாக்களையும் அதற்குரிய பொருளையும் ஒப்புவித்துச் சிறப்பித்தனர். 

பள்ளிச் செயலாளர் தலைமை ஏற்க தலைமையாசிரியர் சதீஷ்குமார் வரவேற்புரை வழங்க, வட்டாரக் கல்வி அலுவலர் ராஜமுருகன் சிறப்புரையாற்ற, சிறப்பாக பள்ளி மாணவ மாணவியரின் உலக சாதனை நிகழ்வு பள்ளி ஆசிரியர்களின் அருமையான ஒத்துழைப்போடு, பெற்றோர்களின் வாழ்த்துதலோடு அரங்கேறியது. 

ஆல் இந்தியா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் நிறுவனத் தலைவர் செ.வெங்கடேசன் அவர்களும், ஆசியின் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட் தலைவர் விவேக் அவர்களும் கலந்து கொண்டு, உலக சாதனையாக அறிவித்த இந்நிகழ்வில் இலட்சிய ஆசிரியர் அ.லட்சுமி குமரேசன் அவர்கள் இணைப்புரையோடு நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment