15-01-2025 (02-01-2056)
வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடியில் தொன் பெருமை இயக்கம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழா, மாட்டுப் பொங்கல் விழாநடைபெற்றது.
இதில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் நிறுவவுர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாச் சிறப்புக் கவியரங்கில் ஏர், ஏறுதழுவல், உழவன், பொங்கல், தைமகள் வந்தாள், கீழடி நாகரிகம் ஆகிய தலைபுகளில் முனைவர் பேராசிரியர் நாவினி நாசர், தமிழ்ச்செம்மல் ப.முத்துமணி, வையை நாவன் இராஜசேகர் இலட்சிய ஆசிரியர் லட்சுமி குமரேசன், கவிஞர் திருவருள் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மிகச் சிறப்பாகக் கவிதை பாடினர்.
மாணவ மாணவியரும் ஊர்ப் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வு மிகச் சிறப்பாக அமைந்தது. கீழடி சிற்றூர் என்றாலும் கூட கவியரங்கத்தில் கவனம் செலுத்தி ஒவ்வொருவருடைய கவிதைகளையும் பொதுமக்கள் மாணவ மாணவியர் சுவைத்து மனமகிழ்ந்து கைதட்டி ஆரவாரம் செய்து ஊக்கப்படுத்தினர். இந்நிகழ்வை ஒருங்கிணைத்ததோடு தானும் ஒருவராகக் கவியரங்கில் மிகச் சிறப்பான பாடலோடு கவிதை பாடினார் கவிஞர் மூவேந்தர பாண்டியன்.
இந்நிகழ்வினை ஒளிப்படங்கள் ஆக்கியதுடன் நேரலை செய்தார் எமது இனிய இளவல் தம்பி செல்வக்குமரன். மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவினை ஊர்ப் பொதுமக்கள் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.
அனைவருக்கும் பேரன்பும் நன்றியும்.
புலவர் ச.ந.இளங்குமரன்