இந்த தளத்தில் வரும் அனைத்து கவிதைகளும், கட்டுரைகளும் வையைத் தமிழ்ச் சங்கத்திற்கு சொந்தமானவை..

Friday, 24 January 2025

கீழடி பொங்கல் விழாக் கவியரங்கம்

15-01-2025 (02-01-2056)
வரலாற்றுச் சிறப்புமிக்க கீழடியில் தொன் பெருமை இயக்கம் சார்பில் நடைபெற்ற திருவள்ளுவர் தினவிழா, மாட்டுப் பொங்கல் விழாநடைபெற்றது. 

இதில் தேனி வையைத் தமிழ்ச்சங்கம் நிறுவவுர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாச் சிறப்புக் கவியரங்கில் ஏர், ஏறுதழுவல், உழவன், பொங்கல், தைமகள் வந்தாள், கீழடி நாகரிகம் ஆகிய தலைபுகளில் முனைவர் பேராசிரியர் நாவினி நாசர், தமிழ்ச்செம்மல் ப.முத்துமணி, வையை நாவன் இராஜசேகர் இலட்சிய ஆசிரியர் லட்சுமி குமரேசன், கவிஞர் திருவருள் செல்வி ஆகியோர் கலந்து கொண்டு மிகச் சிறப்பாகக் கவிதை பாடினர். 

மாணவ மாணவியரும் ஊர்ப் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வு மிகச் சிறப்பாக அமைந்தது. கீழடி சிற்றூர் என்றாலும் கூட கவியரங்கத்தில் கவனம் செலுத்தி ஒவ்வொருவருடைய கவிதைகளையும் பொதுமக்கள் மாணவ மாணவியர் சுவைத்து மனமகிழ்ந்து கைதட்டி ஆரவாரம் செய்து ஊக்கப்படுத்தினர். இந்நிகழ்வை ஒருங்கிணைத்ததோடு தானும் ஒருவராகக் கவியரங்கில் மிகச் சிறப்பான பாடலோடு கவிதை பாடினார் கவிஞர் மூவேந்தர பாண்டியன்.

இந்நிகழ்வினை ஒளிப்படங்கள் ஆக்கியதுடன் நேரலை செய்தார் எமது இனிய இளவல் தம்பி செல்வக்குமரன். மிகச் சிறப்பாக நடைபெற்ற இவ்விழாவினை ஊர்ப் பொதுமக்கள் பலரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

அனைவருக்கும் பேரன்பும் நன்றியும்.
புலவர் ச.ந.இளங்குமரன்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம் தேனி நாகலாபுரம்.

ஓராண்டு தமிழ்ப்பணிகள் - ச.ந.இளங்குமரன்

தை - 1 முதல் மார்கழி 29 வரை ஓராண்டு நிகழ்வுகள்...

இணைய வழி நிகழ்வுகள்-158 
நேரடி நிகழ்வுகள்   51
பதிப்பித்த நூல்கள்    7
மெய்ப்புப் பார்த்தநூல்கள் 9
ஆய்வுக்கட்டுரைகள்.    8
கவிதைகள்     47
புதுமனை புகுவிழா    2
தமிழ் மரபுத் திருமணங்கள்8
உலகச் சாதனை நிகழ்வுகள் - 4
திருக்குறள் திறன் போட்டி 3
பட்டிமன்றம்    6 
கவியரங்கம்.  - 5
படித்த நூல்கள்    22
விருதுகள்        -    8
என்னைப்பற்றிய படைப்பு-1
என்னுடைய நேர்காணல் -  1

ஓராண்டில்
தமிழுக்காக மட்டும் செலவிட்ட நேரம் 2952 மணிநேரம்
பயணம் 24583 கி.மீட்டர்
மணிக்கணக்கில் நாள்கள் 123

இனிய அன்புடன் 
ச.ந.இளங்குமரன்

ச.ந.இளங்குமரன் எனும் நான்...

ச.ந.இளங்குமரன் எனும் நான்... 

1- நிறுவுநர் 
வையைத் தமிழ்ச் சங்கம், தேனி 
2- தலைவர், சங்கத் தமிழ் அறக்கட்டளை, தேனி, 
3- தலைவர், உலக தொல்காப்பியச் சாதனையாளர் பேரவை, 
4- செயலர் வாசிக்கலாம் வாங்க, தேனி.
5- செயலர் திருவள்ளுவர் மன்றம், நாகலாபுரம்.
6- அறங்காவலர், வைகைத் தமிழ்த்தாய் அருளக அறக்கட்டளை, சிதம்பர விலக்கு,
7- அமைப்பாளர் உலகத் தமிழ்க்கூடல்.
8- உறுப்பினர், வள்ளலார் சபை தேனி,
9- தலைவர், தமிழர் உரிமை மீட்புக்குழு

பணிசெய்த அமைப்புகள் அமைப்புகள்

1- மாநிலக் கழக நெறியாளர், குறளரசுக் கழகம், சென்னை,
மாவட்ட அமைப்பாளர் தேனி
2- தேனி மாவட்ட அமைப்பாளர், உலகத் தமிழ்க்கழகம், 
3- பொருளாளர், முல்லைப்பெரியாறு அணைமீட்புக்குழு
4- உறுப்பினர், உரத்தசிந்தனை, தேனிக்கிளை
5- தமிழ் எழுத்தாளர் சங்கம் தேனிக்கிளை
6- உறுப்பினர் த.மு.எ.க.ச., பாராஸ்ட்ரோடு கிளை. 
7- அறங்காவலர் - முக்குலத்தோர் கல்வி அறக்கட்டளை
8- மாநிலத் துணைப்பொதுச் செயலர், தமிழ்நாடு புலவர் பேரவை

இதழ்கள் :- 
பொறுப்பாசிரியர் - அக்கினிக் குஞ்சு மாத இதழ், 
பொறுப்பாசிரியர் - ஏழாம் அறிவு
சிறப்பாசிரியர் - நல்வழி
ஆசிரியர் குழு - புனித குறளரசு

(இயக்கம், அரசியல் அமைப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளன.)

(நன்றி ஒளிப்படக் கலைஞன் தேனி பாண்டி)

Wednesday, 1 January 2025

திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா தேனி

கன்னியாகுமரி அறிவுலகப் பேராசான் திருவள்ளுவர் சிலையின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு, தமிழ்நாட்டரசு அரசு விழாவாகக் கொண்டாட அறிவித்திருந்த நிலையில் தமிழ் நாடெங்கும் திருக்குறள் விழாக்கோலம் பூண்டது.

இந்நிலையில் தேனி மாவட்டப் பொது நிர்வாகம், பள்ளிக் கல்வித்துறை, நூலக இயக்ககம் சார்பில் பள்ளி மாணவ மாணவியர், அரசு ஊழியர், ஆசிரியர், என அனைவருக்கும் திருக்குறள் ஒப்பி வித்தல், பேச்சு, வினாடி வினா ஆகிய போட்டிகளோடு கருத்தரங்குகள் நடத்தப்பட்டன. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் கலந்துகொண்ட 200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்கு உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

இதில் 350 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர், 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், 30க்கும் மேற்பட்ட தமிழ் அறிஞர்கள் ஆர்வலர்கள் உட்படப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

ஒரு வார காலமாகத் தொடர்ந்து நடைபெற்ற இந்நிகழ்வின் நிறைவாக பரிசளிப்பு விழா தேனிமாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட மைய நூலகர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூலகர் விசுவாசம் வரவேற்புரையாற்ற, தேனி மாவட்ட நூலக வாசகர் வட்டத் தலைவர் எம்.கே.எம் முத்துராமலிங்கம் அவர்களும், சின்னமனூர் நூலக வாசகர் வட்டத் தலைவர் இரா.மனோகரன் அவர்களும் முன்னிலை வகித்தனர். தேனி வையைத் தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் ச.ந.இளங்குமரன் சிறப்புரை வழங்க பெரியகுளம் துணை ஆட்சியர் ரஜத் பீடன் இ.ஆ.ப., அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்குப் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தார். கவிஞர் ராஜசேகர் அவர்கள் நன்றியுரை வழங்க இந்நிகழ்வினை வெளிச்சம் சிதம்பரம் அவர்கள் நெறியாள்கை செய்து சிறப்பித்தார்.

இனிய அன்புன் 
ச.ந.இளங்குமரன்
வையைத் தமிழ்ச்சங்கம், தேனி நாகலாபுரம்.