இவர்தான் பசும்பொன்...
"அப்பன் தொழிலை அவன் மகன் செய்ய வேண்டும் அதற்கு இளமையிலேயே பயிற்சி பெற வேண்டும் என்ற பத்தாம் பசலிக் கொள்கையை தொடக்கத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்". (26-03-1954 குலக்கல்விக்கு எதிராக சட்டமன்றத்தில்...)
"பரம்பரை பரம்பரையாக அரிசனங்களும் தேவர்களும் தோளோடு தோள் இணைந்து இருந்தவர்கள். அவர்களைத் தாக்குவதும் துன்புறுத்துவதும் என் ரத்தத்தைச் சிந்த வைப்பது போலாகும். அரிசன மக்கள் என் சகோதரர்கள், அவர்களைத் தாக்காதீர்கள். அவர்களைத் தாக்க வேண்டும் என நினைத்தால் முதலில் என்னைக் கொன்று விட்டு அப்புறம் அவர்களிடம் பேசுங்கள் (1957 முதுகுளத்தூர் பொதுக்கூட்டம்)
"இனியும் கைரேகைப் பதிவு சட்டத்திற்கு உட்பட வேண்டாம். நிர்பந்தத்தின் காரணமாக கைரேகையைப் பதிவு செய்யும்படி நேரிட்டால் உங்கள் கட்டை விரல்களை வெட்டிக் கொள்ளுங்கள்" (1948)
இன்றைய காலத்தில் உழைத்து உழைத்து ஓட்டாண்டியாகியிருக்கும் விவசாயிகளின் பெயரைச் சொல்லிக் கொண்டு கவலையின்றி உண்டு தூங்கிக் கொண்டிருப்பவர்கள் நிலச்சுவான்ந்தாரர்கள் தான். நேரிடையாக நிலத்தில் உழுது பயிரிடுபவர்கள் விவசாயிகளா? அல்லது உட்கார்ந்து கொண்டு, உழைப்பவனை வேலை வாங்கிக் கொண்டிருக்கும் முதலாளி வர்க்கம் நிலச்சுவான்தாரர் பரம்பரை விவசாயிகளா என்பது இன்னும் இந்த நாட்டில் சரியாக நிர்ணயிக்கப்படாதது ரொம்பவும் துரதிருசுட்டமான விசயமாகும். (1954)
"வீரப்பேச்சால் எத்தனையோ தியாகிகளையும், விவேகப் பேச்சால் எத்தனையோ அறிவாளிகளையும் உண்டாக்கியவர். உண்மையை மறைக்காமல் வெளியிடுவதில் தனித் துணிச்சல் பெற்றவர். சுத்தத் தியாகி, பசும்பொன் தேவர் தான் பண்டியகுமாரன் " என்று பாராட்டினார் பெரியார்.
"தென்னாட்டுச் சிங்கம் என்று தேவரைச் சொல்லுகிறார்களே அது சாலப் பொருந்தும் என அவரது தோற்றத்தைப் பார்த்த உடனேயே நினைத்தேன். ஆனால் அவர் பேசத்தொடங்கியதும் சிங்கத்தின் கர்ஜனை போலவே இருந்தது. தேவர் அறம் வளர்த்த பாண்டிய மன்னர்களின் இளவல், சுத்தமான வீரர் பெரும் தலைவர்" என்றார் அண்ணா.
"தேசபக்திக்கும், மாவீரத்திற்கும் உச்சபட்ச மகத்துவம் எவ்வளவு உண்டோ, அவ்வளவுக்கும் உரியவர். நினைக்கும் போதே வணங்கத்தூண்டும் மகா உத்தமத் தலைவர். ஆயிரம் வருடங்களுக்கு முன்பும் சரி, பின்பும் சரி அவர் மாதிரி நிறைவான தலைவரை நாடு உண்டாக்கியதும் இல்லை. உண்டாக்கப் போவதுமில்லை" என்று போற்றிப் புகழ் பாடியவர் யார் தெரியுமா? "இதய தெய்வம்" என்று எல்லோராலும் போற்றப்படும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.
"கனல் உமிழும் சொற்பொழிவுகளும் தீரமிக்கச் செயல்களும் நாட்டு விடுதலைக்கான போர்த்தளவாடங்களாக இருந்தன" என்பார் முத்தமிழறிஞர் மு.கருணாநிதி.
"தேவர் பேச்சு உள்ளத்திலிருந்து வெளி வருகின்றது. உதடுகளிலிருந்து அல்ல. உள்ளத்தால் எதிலும் பற்றற்று உண்மையெனப் பட்டதை மறைக்காமல் அப்படியே பேசி விடுவதால் தேவர் பேச்சு தெய்வப் பேச்சின் தன்மையைப் பெற்று விடுகிறது" என்பார் மூதறிஞர் ராஜாஜி அவர்கள்.
"முருகத் துடிப்புடைய மனிதருள் முருகன்" அருளாளர் திருமுருக கிருபானந்த வாரியார்.
"தேசியம் காக்கும் செம்மல்" திரு.வி.க.,