எட்டயபுரத்தில் பிறந்தவன்
எவர்க்கும்....
எட்டாத உயரத்தில் பறந்தவன்.!
அடிமைத் தேசத்தில்
விடுதலை நெருப்பைக்
கொளுத்தி விட்டு
விடியும் முன்னமே
விடைபெற்றுக் கொண்டவன்.
பக்தி என்னும் கவசம் பூண்டு
பகுத்தறிவு விதைகளைப்
பாரெங்கும் தூவியவன்.
ஆலயம் தோறும் சென்று
ஆண்டவனைத் தேடிடுவோர்
பேதைமை நீங்கிட
அறிவொன்றே தெய்வமென்று
ஆர்ப்பரித்தவன்...
பெண்ணினத்தின் விடியலுக்காய்
பெரும் புரட்சி செய்த
பெரியாருக்கு முன்பிறந்த
பெரியார்....
மனுதரும சாத்திரத்தில்
மதிமயங்கிக் கிடந்தோரின்
மயக்கம் தொலைத்த
மகாகவி.....
பாரதி......
இல்லை ... இல்லை...
இவன் பாரத்தின்
முடத்தையும் மூடத்தையும்
பொசுக்க வந்த பாரத......தீ.........
ஆக்கம் ; புலவர் இளங்குமரன்.
எவர்க்கும்....
எட்டாத உயரத்தில் பறந்தவன்.!
அடிமைத் தேசத்தில்
விடுதலை நெருப்பைக்
கொளுத்தி விட்டு
விடியும் முன்னமே
விடைபெற்றுக் கொண்டவன்.
பக்தி என்னும் கவசம் பூண்டு
பகுத்தறிவு விதைகளைப்
பாரெங்கும் தூவியவன்.
ஆலயம் தோறும் சென்று
ஆண்டவனைத் தேடிடுவோர்
பேதைமை நீங்கிட
அறிவொன்றே தெய்வமென்று
ஆர்ப்பரித்தவன்...
பெண்ணினத்தின் விடியலுக்காய்
பெரும் புரட்சி செய்த
பெரியாருக்கு முன்பிறந்த
பெரியார்....
மனுதரும சாத்திரத்தில்
மதிமயங்கிக் கிடந்தோரின்
மயக்கம் தொலைத்த
மகாகவி.....
பாரதி......
இல்லை ... இல்லை...
இவன் பாரத்தின்
முடத்தையும் மூடத்தையும்
பொசுக்க வந்த பாரத......தீ.........
ஆக்கம் ; புலவர் இளங்குமரன்.
No comments:
Post a Comment