அஞ்சறைப் பெட்டி(கவிதை)
நிலமும் நீரும் நெருப்பும் காற்றும்
உலவும் வெளியும் ஒடுங்கிக் கிடக்கும்
உலகம் என்னுமோர் அஞ்சறைப் பெட்டி
உழன்று திரியும் உன்னதப் பெட்டி.
கண்டும் கேட்டும் உண்டும் உயிர்த்தும் உற்றறியும்
ஐம்புலன் அறிவோடு ஆறாம் அறிவால்சிந்தனை
செய்யும் மனிதனும் ஒருவ்கை அஞ்சறைப்பெட்டி
மணக்கும் மல்லி மஞ்சள் வத்தல்
பிணக்கை நீக்கும் சீரகம் மிளகு
கணக்காய் உடலைக் குளிரச் செய்யும்
வெந்தயம்,கடுகும், பருப்பும் கொண்ட
மரத்தால் ஆன மருத்துவப் பெட்டி
மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து
சேர்க்கும் பெட்டி இதுவல்ல, மாறாய்
சிற்றூர்ப் புறத்து அம்மாக் களுக்கு
சிருவட்டுப் பெட்டி,.சில்லறைக் காசுகள்
சேமித்து வைக்கும் சேமிப்புப் பெட்டி.
அஞ்சறைப் பெட்டி ..........இன்று
அழிந்து கொடிருக்கும் பெட்டிகளில்
இதுவே முதற் பெட்டி............