தேனி வையை தமிழ் சங்கம் வையைப் பதிப்பகம் சார்பில் நூல் வெளியீட்டு விழா தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் புலவர் ச.ந.இளங்குமரன் தலைமையில் நடைபெற்றது. தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் திருமதி பாப்பா லட்சுமி அவர்கள் நூல்களை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார். மனிதநேயக் காப்பக இயக்குநர் மா.பால்பாண்டி, சக்சஸ் அகாடமி இயக்குநர் ஈசுவரன், திண்ணை அறக்கட்டளைப் பொருளாளர் அசோகன், சங்கத் தமிழ் அறக்கட்டளைப் பொருளாளர் ஆகியோர் நூல்களைப் பெற்றுச் சிறப்பித்தனர்.
ஜெர்மன் எழுத்தாளர் கங்கா ஸ்ரான்லி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உன்னை அறிந்தால், நனைந்த மழை, சீதனம், தூவானம் ஆகிய நான்கு நூல்கள் குறித்து மா.தங்கப் பாண்டியன், கவிஞர் கூடல் தாரிக், ஆசிரியர் மூ.செல்வம், கவிஞர் அ.பாண்டிய மகிழன் ஆகியோர் மதிப்புரை வழங்கினர். நூலாசிரியர்கள் எழுத்தாளர், கெங்கா ஸ்ரான்லி, பா.காவிதா கி.அ.நி., கவிஞர் க.இரா.திருவருள் செல்வி, கவிஞர் இலட்சுமி குமரேசன் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.
முன்னதாக கவிஞர் பழ.வேல்முருகன் வரவேற்புரை வழங்க, கவிஞர் பானுரேக வாழ்த்துரை வழங்க, கவிஞர் ஜெயபாண்டி அவர்கள் நிகழ்ச்சியை தொகுக்க பா.செல்வக்குமரன் நன்றி கூறினார். நிகழ்வில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் நூலும் நூலாடையும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. நிகழ்வில் மனிதநேயக் கனவு பள்ளி மாணவ மாணவியர், சக்சஸ் அகாடமியினுடைய மாணவ மாணவியர், அறிவு நிறை கவிஞர், சான்றோர் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.